இலங்கை முன்னிருக்கும் வரலாற்று வாய்ப்பு!

(மீரா ஸ்ரீனிவாசன்)
ஆட்சி மாற்றம் வேண்டி வாக்களித்து, இலங்கையின் அதிபராக மைத்ரிபால சிறிசேனாவையும், பிரதமராக ரணில் விக்ரமசிங்கேயும் இலங்கை மக்கள் தேர்ந்தெடுத்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அரசியல் நெருக்கடியில் சிக்கிக்கொண்டிருக்கிறது தேசியக் கூட்டணி அரசு. பத்தாண்டு காலமாக, கடும் கண்காணிப்பு, அச்சுறுத்தல்கள், ஊடகத்தின் மீதான அடக்குமுறை, ஜனநாயக அமைப்புகளைப் பலவீனப்படுத்துதல் என்று மகிந்த ராஜபக்ச நடத்திய சர்வாதிகார ஆட்சி, 2015 ஜனவரி 9-ல் முடிவுக்கு வந்தது. அவரது ஆட்சியில், வளர்ச்சித் திட்டங்களை விடவும் ஊழல்கள், ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் போன்றவைதான் பிரதானமாக இருந்தன. போர் வெற்றி மூலம், இலங்கையின் பெரும்பான்மை மக்களான சிங்களர்கள் மத்தியில் அவருக்கு உருவான செல்வாக்கும் செல்லரித்துப்போனது.

(“இலங்கை முன்னிருக்கும் வரலாற்று வாய்ப்பு!” தொடர்ந்து வாசிக்க…)

தோழர் குழைக்காதன் எம்மைவிட்டுப் பிரிந்தார். எமது அஞ்சலிகள்

ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு தன்னை முன்னிலைப்படுத்தாது முழுமையாக  அர்பணித்த மனிதர்கள் அனேகர்.  இவர்களில் பெரும்பாலானோர்  இடதுசாரிச் சிந்தனையாளர்கள், பெரியாரின் பாசைறையில் வளர்ந்தவர்கள், அல்லது பெரியாரின் கருத்தியலுக்கு உள்ளானவர்கள். இவர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் இன்றி ஈழவிடுதலைப் போராட்டம், இலங்கை தமிழ் மக்கள் மீதான பேரினவாதத்தின் ஒடுக்குமுறை உலகிற்கு வெளிக்கொண்டுவரப்பட்டிருக்குமா ? என்பது கேள்விக்குறியே. ஈழவிடுதலைக்காக தன்னலம் பாராது உழைத்தவர்களின் நிச்சயம் தோழர் குழைக்காதன் இற்கு முக்கிய பங்குண்டு.

(“தோழர் குழைக்காதன் எம்மைவிட்டுப் பிரிந்தார். எமது அஞ்சலிகள்” தொடர்ந்து வாசிக்க…)

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் முஸ்லிம்கள் பங்கேற்றதில் ஆச்சர்யம் என்ன?

தமிழகத்தில், குறிப்பாக தென் தமிழகத்தில், இஸ்லாமியருக்கும் பிற சமூகத்தவருக்கும் இடையே இன்றளவும் நிலவிவரும் மாமன் – மச்சான், சித்தப்பா – சித்தி, தாத்தா, அப்பு, சீயான் என்ற ஒரே குடும்பம் போன்ற உறவு முறைகள், உலகில் வேறெங்கும் காணப்படாத, தமிழகத்துக்கும் தமிழருக்கும் மட்டுமே உரிய சிறப்புக் குணாம்சம்!

(“ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் முஸ்லிம்கள் பங்கேற்றதில் ஆச்சர்யம் என்ன?” தொடர்ந்து வாசிக்க…)

உக்ரேன்: மையம்கொள்ளும் புதிய போர்க்களம்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

போர்க்களங்கள் உருவாகிய காலம் கடந்து வெகுநாட்களாகி விட்டன. இப்போது போர்க்களங்கள் உருவாக்கப்படுகின்றன. போரின் வடிவங்கள் மாறியுள்ளது போல, போர்க்களங்களின் தன்மையும் உருவமும் மாறிக் கொண்டேயிருக்கின்றன. இப்போது போர்க்களங்கள் வலிந்து உருவாக்கப்படுவது அதன் சிறப்பம்பம். அமைதி வழியில் அடைய இயலாததை, அடாவடித்தனத்தின் வழியில் அடைவதற்கான திறவுகோலாக போர்க்களங்கள் பயன்படுகின்றன.

(“உக்ரேன்: மையம்கொள்ளும் புதிய போர்க்களம்” தொடர்ந்து வாசிக்க…)

கேப்பாபுலவு போராட்டக்களம் வலியுறுத்தும் பாடம்

தமிழ் மக்களுக்கும் போராட்டங்களுக்கும் இடையில் அறுக்கவே முடியாத பெரும் பிணைப்பு உண்டு. உரிமைகளுக்காகவும் நீதிக்காகவும் குரல் எழுப்புகின்ற எந்தச் சனக்கூட்டத்துக்கும் போராட்டங்கள் தொடர்பிலான பிணைப்பு அடிப்படையானது; அறுக்கவே முடியாதது. ஆனால், போராட்டங்களை உரிமை மறுப்பாளர்களும் அநீதியின் கொடுங்கரங்களும் என்றைக்குமே இரசிப்பதில்லை; அனுமதிப்ப தில்லை. சுதந்திரத்துக்கு முந்தைய இலங்கையில் ஆரம்பித்துவிட்ட தமிழ் மக்களின் உரிமை மீட்புப் போராட்டங்கள், நாட்டின் 69 ஆவது சுதந்திர தினம் தாண்டியும் நீண்டு வருகின்றன.

(“கேப்பாபுலவு போராட்டக்களம் வலியுறுத்தும் பாடம்” தொடர்ந்து வாசிக்க…)

மக்களின் காணிப்பிரச்சினையை வைத்து சிலர் சுயலாப அரசியலை நடத்திச் செல்கின்றனர் – டக்ளஸ்  

வடக்கு மக்களின் காணிப்பிரச்சினையை வைத்து சிலர் சுயலாப அரசியலில் ஈடுபடுகின்றனர். காணியற்ற மக்களின் பிரச்சினையைத் தீர்க்க, அரசாங்கம் முன்வரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்களஸ் தேவானந்தா தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற நிதி அமைச்சின் கட்டளைச் சட்டங்களின் கீழான கட்டளைகளை அங்கிகரிப்பதற்கான பிரேரணைகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

(“மக்களின் காணிப்பிரச்சினையை வைத்து சிலர் சுயலாப அரசியலை நடத்திச் செல்கின்றனர் – டக்ளஸ்  ” தொடர்ந்து வாசிக்க…)

இன்னும் நிறைய கேள்விகள் மிச்சம் இருக்கின்றன!

தமிழக அரசியலிலும், ஆட்சியிலும் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும் நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள், அரசு மருத்துவர் மற்றும் லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலே ஆகியோர் விளக்கமளித்திருப்பது தொடர் விவாதத்துக்கே வழிவகுக்கிறது.

(“இன்னும் நிறைய கேள்விகள் மிச்சம் இருக்கின்றன!” தொடர்ந்து வாசிக்க…)

கேப்பாப்பிலவு போராட்டத்தில் ஆசிரியர் சங்கம் பங்கெடுப்பு

குடியிருப்பு நிலங்கள் பறிக்கப்பட்ட நிலையில் வாழும் இடம் இல்லாமல் தமது நிலதுக்காக பள்ளிசெல் பிள்ளைகளுடன் வாழும் உரிமை கேட்டுப் போராடும் கேப்பாப்பிலவு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களின் போராட்டதில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் முழுமையாகக் பங்கேற்கின்றது என ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(“கேப்பாப்பிலவு போராட்டத்தில் ஆசிரியர் சங்கம் பங்கெடுப்பு” தொடர்ந்து வாசிக்க…)

பாலியல் தொழிலுக்காக விமானத்தில் கடத்தப்பட்ட சிறுமி… காப்பாற்றினார் விமானப் பணிப்பெண் ஷீலா!

(எஸ். ஹமீத்)
அவரது பெயர் ஷீலா பெட்ரிக். 49 வயது. பத்து வருடங்களாக விமானப் பணிப் பெண்ணாகப் பணியாற்றுகிறார். இரண்டொரு தினங்களுக்கு முன்பு அவர் பணியாற்றும் அலாஸ்கா எயார் லைன்சுக்குச் சொந்தமான விமானம் சியாட்டிலிலிருந்து சான் பிரான்சிஸ்கோவுக்குப் பறந்து கொண்டிருந்தது. அவ்வேளைதான் அவர் அந்த ஏழைச் சிறுமியைக் கண்டார். மிகவும் கசங்கிய ஆடைகளுடனும் கவலை தோய்ந்த முகத்துடனும் அந்தச் சிறுமி, உயர்தரமான ஆடையணிந்த ஒரு மனிதனுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தாள். அவளைப் பார்த்ததும் விமானப் பணிப்பெண் ஷீலாவின் மனதுக்குள் ஒரு சிறு சந்தேகம் முளைத்தது. ‘எங்கேயோ ஒரு தவறு நடக்கின்றது.’ என அவரது உள்மனது கூறியது.

(“பாலியல் தொழிலுக்காக விமானத்தில் கடத்தப்பட்ட சிறுமி… காப்பாற்றினார் விமானப் பணிப்பெண் ஷீலா!” தொடர்ந்து வாசிக்க…)