பசிலின் மறுபிறவி

(எம்.எஸ்.எம். ஐயூப்)

ஆளும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பொருளாதார அமைச்சருமான பசில் ராஜபக்‌ஷ, நாளை (08 ஆம் திகதி) தேசிய பட்டியல் மூலமாக, பாராளுமன்றத்துக்கு வருவார் எனச் செய்திகள் பரவியுள்ளன. அவர், தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவதற்குத் தடையாக இருந்த, பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினர் ஒருவர் இராஜினாமாச் செய்ய வேண்டும் என்ற நிலைமை தற்போது சீர்செய்யப்பட்டுள்ளது.

முருகனுக்கு அமைச்சர் பதவி?

இன்று மாலை மத்திய அமைச்சரவை விரிவாக்கப்படவுள்ள நிலையில், தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் இருக்குமா? என்ற ரீதியில் நிறைய எதிர்பார்ப்புகள் எழுந்தன. அந்த வகையில், எல்.முருகனுக்கு அமைச்சர் பதவி உறுதியாக கிடைக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

நான்கு நாள் வாரம் வெற்றி

ஐஸ்லாந்தில் நான்கு நாள் வாரம் ஒன்றுக்கான சோதனைகள் பாரியளவில் வெற்றியடைந்துள்ளதாகவும், இதனால் பல பணியாளர்கள் குறைந்தளவு மணித்தியாளங்கள் நகருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு தொடக்கம் 2019ஆம் ஆண்டு வரை இடம்பெற்ற சோதனைகளின்போது குறுகிய மணித்தியாலங்களுக்கு அதேயளவான ஊதியத்தை பணியாளர் பெற்றிருந்தனர்.

வீணடிக்கப்படும் காலம்

(மொஹமட் பாதுஷா)

மக்களின் பிரச்சினைகளும் நாட்டின் முன்னேற்றமும் கருத்தில் கொள்ளப்படாமல், வெறுமனே காலத்தை வீணடிக்கின்ற அரசியலும் ஆட்சியும் நிறைந்த பூமியாக, இலங்கை மாறியிருக்கிறது. இந்த ஆட்சியில் மட்டுமன்றி, கடந்த நல்லாட்சிக் காலத்திலும் காலம் இப்படித்தான் கழிந்து போனது.

இணைய வழியில் ஒரு கண்ணை வைத்திருப்பதே உகந்தது

தற்போது பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் காலப்பகுதியில், இணையவழி கல்வி, திறன்பேசிகள், மடிக்கணினி ஆகியவை ஊடாகவே மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இலங்கை: கொரனா செய்திகள்

கிளிநொச்சி வலயக் கல்வித் திணைக்களத்தின் கீழ் பணியாற்றுகின்ற ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் அனைவருக்கும், நாளை (08) கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக, கிளிநொச்சி பிராந்திய தொற்று நோயியல் வைத்தியஅதிகாரி வைத்தியர் நிமால் அருமைநாதன் தெரிவித்தார்.

‘பந்துல கூறுவதை மனைவியே கேட்பதில்லை’ – அநுரகுமார

அமைச்சர் பந்துல குணவர்தன கூறாதது ஒன்றுமே இல்லை, அவருடைய கூற்றை அவரது மனைவியே கேட்பதில்லை எனத் தெரிவித்த அநுரகுமார திஸாநாயக்க எம்.பி, குடும்பமொன்றை நடத்துவதற்கு 2,500 ரூபாய் மாதமொன்றுக்கு போதுமென்றார், நிவாரணம் வழங்கப்படும் என்றார். உரமானியம் வழங்கப்படும் என்றார் ஒன்றுமே நடைபெறவில்லை. ஆகையால், கொஞ்சம் அமருங்கள் என்றார்.

பழம்பெரும் நடிகர் திலீப்குமார் காலமானார்

பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமார். இவர் 1944-ல் சினிமாவில் அறிமுகமாகி தேவதாஸ், கங்கா யமுனா, ஆன், தஸ்தான் உள்பட பல வெற்றி படங்களில் நடித்து இருக்கிறார். வயது மூப்பு காரணமாக இவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. அந்த வகையில் கடந்த வாரம், இவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த திலீப்குமார், இன்று காலை காலமானார். இவருக்கு வயது 98. திலீப் குமாரின் மறைவு பாலிவுட் திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஆவணங்களில் கையெழுத்திட்டார் பெசில்

முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ, பாராளுமன்றத்துக்குள் நுழைவதற்கான ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளார். இந்த நிலையில், அவர் நாளை (08) எம்.பி.யாக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் எம்.பி.யாக அவரது பெயர் வர்த்தமானியில் இன்று (07) வெளியாகியுள்ளது.

துமிந்த நாகமுவ கைது

முன்னிலை சோசலிச கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு – 02 இராமநாயக்க மாவத்தை பகுதியில் இன்று (07) காலை முன்னெடுக்கப்படவிருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று தொடர்பில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெறாத போதும், சம்பவ இடத்திலிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலருடன் இருந்த துமிந்த நாகமுவவும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.