ஆவணங்களில் கையெழுத்திட்டார் பெசில்

முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ, பாராளுமன்றத்துக்குள் நுழைவதற்கான ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளார். இந்த நிலையில், அவர் நாளை (08) எம்.பி.யாக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் எம்.பி.யாக அவரது பெயர் வர்த்தமானியில் இன்று (07) வெளியாகியுள்ளது.