விரலுக்கேற்ற வீக்கத்தைப் போல வாழப்பழகிக் கொள்ள வேண்டும்

வாழ்க்கைச் செலவு விண்ணைத் தொட்டுள்ள நிலையில், மக்கள் தமது நாளாந்த அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்குக்கூட பெரும் சவால்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இந்த நிலைமை, இன்னும் எவ்வளவு காலத்துக்கு நீண்டு செல்லுமென எதிர்வுகூற முடியாதுள்ளது.

சூடுபிடிக்கும் மாணவர் விவகாரம்

உக்ரைனின் கார்கிவ் பகுதியில் இருந்து மீட்கப்பட்டதாகக் கூறப்படும் 07 இலங்கை மாணவர்களின் நிழற்படங்களை உக்ரைன் ஊடகவியலாளர் ஒருவர் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதைத் தொடர்ந்து, ரஷ்ய மற்றும் உக்ரைன் ஊடகங்களுக்கு இடையே பனிப்போர் ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையிற்கு கடன வழங்கலில்: சீனாவை விஞ்சிய இந்தியா

இந்த ஆண்டின் கடந்த நான்கு மாதங்களில் இலங்கைக்கு 968 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் நிதியை பெற்றுக்கொடுத்துள்ள இந்தியா, சீனாவை விஞ்சிய வகையில், இலங்கைக்கு அதிக கடன்களை வழங்கிய இருதரப்பு நாடாக மாறியுள்ளதாக சர்வதேச அமைப்புகளின் அவதானிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார மீட்சி யார் கையில்?

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

நாட்டின் பொருளாதாரம் எப்படியாவது மீண்டுவிடும் என்று முழுமையாக நம்புவோர் இருக்கிறார்கள்; பகுதியாக நம்புவோரும் இருக்கிறார்கள். “வாய்ப்பில்லை ராஜா” என்று அடம்பிடிப்போரும் இருக்கிறார்கள். 

இலங்கையை இந்தியா கண்டித்தது ஏன்?

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாரதிய ஜனதா கட்சியின் (பா.ஜ.க) தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் ஆலோசனை நடத்தியதை தொடர்ந்தே, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில், இலங்கையை இந்தியா கண்டித்ததாக தகவல் வெளியாகி உள்ளது என்று இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தாமரைக் கோபுரத்தால் கிடைத்த வருமானம்

தாமரை கோபுரம் மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டு 3 நாட்களுக்குள் 7.5 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக தாமரை கோபுர தனியார் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

ஈரோஸ் பாலகுமார் ஒரு பச்சோந்தி வரலாறு

(By முரளி, முன்னாள் புலி உறுப்பினர்)

ஈரோஸ் அமைப்பு இராணுவபலம் மிக்கதல்ல. இராணுவ வழிமுறைகள் அவ்வளவாக கைவரப்பெற்றதுமல்ல. இடதுசாரி சித்தாந்தங்கள் உள்ளிட்ட சித்தாந்தங்களை கற்று அதுபற்றி விவாதித்துக் கொண்டிருந்த அமைப்பு. ஈரோஸ் பற்றி நகைச்சுவையாக சில விடயங்கள் சொல்வார்கள். ஒன்று, பேசியே தமிழீழம் பிடிக்கலாமென நினைத்தார்கள் என்பது. (அதாவது, விஜயகாந்த் பக்கம்பக்கமாக வசனம் பேசி எதிராளிகளை தெறிக்க விடுவதை போல). அதுபோல, ஒரு விடயத்தில் உறுதியாக இல்லாமல் நழுவிச்செல்வதை ‘ஈரோஸ்பாணி’ என்பார்கள். உறுதியாக இல்லாமல், பாம்பக்கு தலையும், மீனுக்கு வாலும் காட்டும் ஆட்களை இயக்கங்கள் பல இருந்தகாலத்திலேயே ‘ஆள் ஈரோஸ்காரன்’ என்று நகைச்சுவையாக கூறுவார்கள்.”

தலைமையை விமர்சிக்காதே தமிழா!

தலைமைகள், தலைவர்கள் கடவுள்களுக்கு ஒப்பானவர்கள். தலைவர்களை கேள்வி கேட்பது தகாத செயல். அமைப்பை கட்சியை பலவீனப்படுத்தும் செயல். அதையும் தாண்டி அது துரோகச் செயல். இந்தக் கருத்தியல்தான் கண்மூடித்தனமாக ஒரு கட்சி, ஒரு இயக்கம், ஒரு தலைமை என தமிழரை வழி நடத்தியது. அது இறுதியில் ஒரு மாபெரும் அழிவாக முள்ளி வாய்க்காலில் கொண்டுபோய் எல்லாவற்றையும் முடித்தது.  தமிழ் சமூகத்தில் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட தலைமை பற்றி அறிந்துகொள்ள ‘ வரலாற்றின் சில வரிகள்’ என்ற பகுதியை வாசிக்கவும். இது 1980 ஆம் ஆண்டு சுதந்திரன் பத்திரிகையில் வெளிவந்தது.

சம்பளம் வாழ்க்கைச் செலவுடன் ஒத்துப்போவதில்லை : ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்

இலங்கையில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம், நாட்டில் தற்போது  அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுடன் ஒத்துப்போவதில்லை. இந்தநிலையில் வெளிநாடுகளுக்கு பணிக்கு செல்லும் இலங்கையர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சமகால அடிமைத்தனம் பற்றிய ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் டொமோயா ஒபோகாடா முன்வைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,  ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையில் நன்மைகள் இலங்கையில் தொழிலாளர்களுக்கு கிடைப்பதில்லை எனவும்  அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புலிகளின் ஜீவன் முகாமில் ஆயுதங்கள் மீட்பு

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கதிரவெளி பிரதேசத்தில் முன்னாள் விடுதலைப் புலிகளின் முகாமான ஜீவன் முகாம் அமைந்துள்ள பகுதியிலிருந்து பெரும் திரளான வெடிபொருட்களை இன்று (16) வெள்ளிக்கிழமை   விசேட அதிரடிப்படையினர் வாழைச்சேனை நீதிமன்ற மேலதிக நீதவான் ரி.கருணாகரன் முன்னிலையில் மீட்டுள்ளனர் என வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.