மே தினம் யாருக்கு? சடங்காதலும் சங்கடங்களும்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

ஆண்டுதோறும் மே தினம் வந்துபோகிறது. அந்நாள் ஒரு விடுமுறை நாள்; அரசியல் கட்சிகளின் கூட்டங்கள் என்ற படிமங்களே, இலங்கையர் மனதில் ஆழப்பதிந்துள்ளது. மே தினத்துக்கு என்று உன்னதமான வரலாறு உண்டு. உலகெங்கும் உழைக்கும் மக்களின் ஒரே தினம், மே தினம் மட்டுமே என்ற உண்மை, எம்மில் பலருக்கு உறைப்பதில்லை.

துறைமுக நகர்: ராஜபக்‌ஷர்கள் வைத்த தீ

(புருஜோத்தமன் தங்கமயில்)

தென் இலங்கையின் பௌத்த சிங்கள அடிப்படைவாத சக்திகள், ‘எதைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்கிற இக்கட்டான கட்டத்துக்கு வந்திருக்கின்றன. இனவாதத்தையும் மதவாதத்தையும் மூலதனமாக்கி, நாட்டின் ஆபத்பாண்டவர்கள் ‘ராஜபக்‌ஷர்களே’ என்று முழங்கி, 69 இலட்சம் வாக்குகளைப் பெற்றுக்கொடுத்து, அவர்களை மீண்டும் ஆட்சிக் கட்டிலில், இந்தச் சக்திகள் ஏற்றின.

இலங்கை: கொரனா செய்திகள்

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, நாட்டிலுள்ள சகல திரையரங்குகள் மற்றும் சிறுவர் பூங்காக்கள் ஆகியன மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருக்கும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்தியா: உதவிக்கரம் நீட்டும் உலக நாடுகள்

இந்தியாவில் அண்மைக்காலமாகக் கொரோனாத் தொற்றின் பரவலானது தீவிரமடைந்துவருகின்றது. இதன் காரணமாக அங்குள்ள வைத்தியசாலைகளில் படுக்கைகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான பற்றாக்குறை நிலவிவருகின்றது. குறிப்பாக வைத்தியசாலைகளில் ஒட்சிசன் பற்றாக்குறை காணப்படுவதால் வைத்தியசாலைகள் அண்மைக்காலமாகத் திணறிவருகின்றன. இந் நிலையில் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட உலக நாடுகள் இந்தியாவுக்கு உதவ முன்வந்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ்வர்தன் ஸ்ரிங்லா தெரிவித்துள்ளார்.

மியான்மார் விமானத்தளங்கள் மீது றொக்கெட்டுகள் ஏவப்பட்டன

மியான்மாரின் இரண்டு விமானத் தளங்கள் மீது அடையாளந் தெரியாத தாக்குதலாளிகள் இன்று றொக்கெட்டுகளை ஏவியபோதும் எதுவித உயிரிழப்புகளும் ஏற்படாததோடு, சிறியளவிலான சேதமே ஏற்பட்டுள்ளது. தாக்குதல்களுக்கு எவரும் உரிமை கோராத நிலையில், செய்தியாளர் சந்திப்பொன்றில் தாக்குதல்களை மியான்மார் இராணுவம் உறுதிப்படுத்தியிருந்தது.

இலங்கை: கொரனா செய்திகள்

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக சகல வைபவங்களும் திருமணங்களும் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளன. இந்த தடை திங்கள் முதல் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலம் கல்யாணசுந்தரம்

பில் கிளிண்டன்(US President) இந்தியா வந்தபோது அரசு சாரா இருவரை சந்திக்க விரும்பினார். ஒருவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் இன்னொருவர் பாலம் கலியாண சுந்தரம் ?

35 ஆண்டுகள் பேராசிரியர் பதவியில் பணிபுரிந்து, பெற்ற சம்பளம் அனைத்தையும் ஏழை மக்களின் நலனுக்காக செலவிட்டு, தமது சொந்தச் செலவிற்கு ஒரு உணவகத்தில் சர்வராக வேலை பார்த்தவர். இவ்வாறு 35 ஆண்டுகளாகத் தான் பெற்ற ஊதியம் 30,00,000/- (ரூபாய் முப்பது லட்சத்தையும்) முழுமையாகக் கொடுத்து வரலாறு படைத்தார். பாலம் கல்யாண சுந்தரம் ஐயா.

அர்ஜுன் மகேந்திரன் இன்றி வழக்கை முன்னெடுக்க தீர்மானம்

மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணை முறி மோசடி தொடர்பான வழக்கை முன்னெடுத்து செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது. வழக்கின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் மற்றும் ஜி. புஞ்சிஹேவா ஆகியோர் இன்றி தொடர்ந்தும் வழங்கினை முன்னெடுத்து செல்லவே தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் இன்று (29) வழங்கியுள்ளது. வழக்கின் மேலதிக விசாரணை அடுத்த மாதம் 19ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைத் தேர்தல்: பொறியில் சிக்கிய அரசாங்கம்

(எம்.எஸ்.எம். ஐயூப்)

தற்போதைய அரசாங்கத்தின் தலைவர்கள், நாட்டு மக்கள் மனதில் கட்டி எழுப்பிய, “எமது பதவிக் காலத்தில், மாகாண சபை முறைமையை இரத்துச் செய்வோம்” என்ற அபிப்பிராயம், முற்றாக ஒழிந்துவிட்டது. மாகாண சபைகளை இரத்துச் செய்வதைப் பற்றி, அரசாங்கத்தின் தலைவர்களில் எவரும் இப்போது பேசுவதில்லை. மாறாக, மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதைப் பற்றியே, இப்போது கலந்தாலோசித்து வருகிறார்கள்.