அர்ஜுன் மகேந்திரன் இன்றி வழக்கை முன்னெடுக்க தீர்மானம்

மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணை முறி மோசடி தொடர்பான வழக்கை முன்னெடுத்து செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது. வழக்கின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் மற்றும் ஜி. புஞ்சிஹேவா ஆகியோர் இன்றி தொடர்ந்தும் வழங்கினை முன்னெடுத்து செல்லவே தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் இன்று (29) வழங்கியுள்ளது. வழக்கின் மேலதிக விசாரணை அடுத்த மாதம் 19ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.