முல்லைத்தீவில் பெரமுனவின் ஆண்டு விழா

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நான்கு வருடங்கள் பூர்த்தியை முன்னிட்டு, முல்லைத்தீவு மாவட்ட இளைஞர், யுவதிகள் மாநாடும் முல்லைத்தீவு தொகுதிக்கான சம்மேளனக் கூட்டமும், முல்லைத்தீவு நகர பிரதேச சபை மண்டபத்தில் நேற்று (31) நடைபெற்றுள்ளது.

கிழக்கு முனையம் தொடர்பில் பிரதமரின் உறுதிமொழி

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையம் முழுமையாக இலங்கை துறைமுக அதிகார சபையின் கட்டுப்பட்டிலேயே இருக்கும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ உறுதியளித்துள்ளார். கிழக்கு முனையத்தை பாதுகாப்பதற்கான தொழிற்சங்கங்களின் கூட்டணியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போதே பிரதமர் இந்த உறுதி மொழியை வழங்கியுள்ளார். அலரிமாளிகையில் இன்று(01) முற்பகல் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

348 பேருக்குக் கொரோனா

பெலியாகொட கொரோனா கொத்தணியைச் சேர்ந்த மேலும் 348 பேருக்குக் இன்று (01) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்து 174ஆக அதிகரித்துள்ளது.

பௌத்தமயமாக்கலுக்கு எதிரான போராட்டத்துக்கு அழைப்பு

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் விஸ்வரூபம் எடுத்து வரும் தமிழின அழிப்பு மற்றும் பௌத்தமயமாக்கலுக்கு எதிராக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான கவனயீர்ப்பு போராட்டத்துக்கு தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றுதிரளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய முடிவுகளை 21 ஆம் திகதி வெளியிடுகிறார் – கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சி சட்டமன்ற தேர்தலை சந்திக்க தீவிரமாகி வருகிறது. அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்றாக தமிழகத்தில் வலுவான 3ஆவது அணி அமையும் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து கூறி வருகிறார். அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள சில கட்சிகள் கடைசி நேரத்தில் கூட்டணியில் இருந்து வெளியேற வாய்ப்பு இருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தொடர்ந்து கூறி வருகிறார்கள்.

‘39 விமானங்களில் 135 பேர் பயணம்’

இலங்கையில், இன்று (31) காலை 8.30 வரையான 24 மணிநேரத்தில், 39 விமான சேவையூடாக, 135 பேர் பயணங்களை மேற்கொண்டுள்ளனர் என, கட்டுநாயக்க விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

’கிழக்கு மாகாணத்துக்கு 14,010 தடுப்பூசிகள் கிடைத்தன’

கிழக்கு மாகாணத்தில் 14,010 கொவிட் 19 தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.லதாகரன் தெரிவித்தார்.

த.தே.ம.மு உறுப்பினர்கள் 9 பேர் நீக்கம்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உள்ளுராட்சி உறுப்பினர்கள் 09 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தரப்புடன் இணைந்து செயற்பட்டக் குற்றச்சாட்டின் கீழேயே, இவர்கள் உறுப்பினர்களே நீக்கப்பட்டுள்ளனர்.

ஜனசக்தி தோழர் ராஜ்மோகன் அவர்களுக்கு அஞ்சலி

(சாகரன்)
இந்திய சுதந்திர போராட்டத்தில் காந்திஜி இன் அகிம்சாவழி சத்தியாக்கிரகப் போராட்டம் எவ்வளவிற்கு வலிமையானதாக இருந்ததோ அதற்கு எந்த அளவிலும் சளைக்காமல் இடதுசாரிகளின் பொது உடமைவாதிகளின் போராட்டம் இந்திய தேசத்தில் பிரித்தானியாவின் காலனி ஆதிகத்திற்கு எதிரான போரில் இரு முனைத் துப்பாக்கி போல் இருந்தது.

விவசாயிகளின் கோபத்தை தூண்டியது பாஜக

விவசாயிகளிடம் கோபத்தை தூண்டி, வன்முறையை இறக்கியது பாஜகதான், விவசாயிகள் நடத்தி வரும் வேளாண் போராட்டத்தை களங்கப்படுத்த முயல்கிறது என்று சிவசேனா கட்சி குற்றம்சாட்டியுள்ளது.