ராஜிவ் காந்தி கொலை வழக்கு ஆயுட்கைதிகள் விடுதலை

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுட்தண்டனைத் தீர்ப்புப் பெற்ற ஏழு பேரை விடுவிக்கும் தீர்மானம் தொடர்பாக நளினி தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து இன்று (29) உத்தரவிட்டது.

பொங்கு தமிழும் எழுக தமிழும்; தடுமாறும் தமிழர் அரசியல்

(இலட்சுமணன்)

தமிழர் விடுதலைப் போராட்டம் உச்சநிலையை அடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் காலகட்டத்தில், போராட்டத்தின் கொள்கை முரண்பாடுகளாலும் போராட்ட வன்முறைகளாலும் சிதறுண்ட தமிழ் மக்களின் அரசியல் நிலைமைகளை ஸ்திரப்படுத்தவும், தமிழர்களின் போராட்டம் நியாயமானது உண்மையானது, உணர்வுபூர்வமானது என்பதை சர்வதேசத்துக்கு உரத்துச் சொல்லவும், தமிழீழ விடுதலைப் புலிகள், வெகுஜனப் போராட்டமாக ‘பொங்கு தமிழ்”ஐ ஏற்படுத்தினர்.

‘அரசியல்வாதிகளே மக்களை ஏமாற்றுகின்றனர்’

நடைமுறையில் உள்ள முறையில் ஆட்சியை தொடரும் நோக்கிலேயே அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்த சட்டத்தரணி நாகாநந்த கொடிதுவக்கு, தான் அவ்வாறு இல்லாமல் புதிய அரசியலமைப்பினை உருவாக்கி நாட்டில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளதாக தெரிவித்தார். இதுவே தனக்கும் ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் உள்ள பாரிய வேறுபாடு என்றும் அவர் கூறினார்.

செயற்கை நுண்ணறிவு; மனிதனை மனிதனே பலியெடுத்தல்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
மனிதகுல வரலாற்றின் முன்னேற்றத்துக்கும் வளர்ச்சிக்கும், பகுத்தறிவினதும் அறிவியல் வளர்ச்சியினதும் பங்கு பெரிது. இன்று, மனிதகுலம் கண்டிருக்கிற வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சியின் வலிமையால் சாத்தியப்பட்டது. 25 ஆண்டுகளுக்கு முன் கற்பனை செய்து பார்க்கக்கூட முடியாத ஒன்று, இன்று சாத்தியமாகியிருக்கிறது. அறிவியல், மிக வேகமாகக் கடந்த அரை நூற்றாண்டுக் காலத்தில் வளர்ந்துள்ளது. இப்போது, அடுத்த 10 ஆண்டுகளுக்கு எதிர்ப்புக் கூறக்கூட முடியாத வகையில், அறிவியல் பல திசைகளிலும் பரந்து விரிந்துள்ளது.

தோல்வியின் விளிம்பில் ‘எழுக தமிழ்’

(புருஜோத்தமன் தங்கமயில்)

கடந்த வாரம், நல்லூர் கந்தசுவாமி கோவிலில் வழிபாடுகளை முடித்துக் கொண்டு, மூன்றாவது, ‘எழுக தமிழ்’ பேரணிக்கான பிரசாரப் பயணத்தை சி.வி. விக்னேஸ்வரன் ஆரம்பித்தார். அவரோடு, சுரேஷ் பிரேமசந்திரனும் இருந்தார். முதலாவது, ‘எழுக தமிழ்’ பேரணி, 2016 செப்டெம்பரில் நடைபெற்றது. மூன்றாவது, ‘எழுக தமிழ்’ பேரணி, செப்டெம்பர் மாதம் ஏழாம் திகதி நடைபெறவிருக்கிறது. ஆக, ‘எழுக தமிழ்’ போராட்ட வடிவத்துக்கான வரலாறு, மூன்று வருடங்கள் மட்டுமே!

‘தமிழ் மக்களின் ஆதரவு கிட்டினால் தீர்வும் கிட்டும்’

நேர்காணல்: மேனகா மூக்காண்டி

13ஆவது திருத்தமோ எதுவோ, மக்களுக்கு இப்போது எது தேவையோ, அதை வழங்க வேண்டும். எமக்கு வாக்களிக்காமல், எம்மிடம் அந்தத் தீர்வை, தமிழ் மக்கள் எதிர்பார்க்க முடியாது. வடக்கிலுள்ள மக்களும் சரி, மக்கள் பிரதிநிதிகளும் சரி, எம்மோடு இணைந்துகொண்டு, தீர்வை நோக்கி நகர வேண்டுமெனத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, தவிர, தங்களுக்கு எதிராகச் சென்று எதையும் சாதிக்க முடியாதென்றும் தங்களுக்கு எதிராகச் சென்று, பிரச்சினைகளுக்கான தீர்வுகளை தங்களிடமிருந்து எதிர்பார்க்க முடியாதென்பதை தமிழ் அரசியல் தலைமைகள் புரிந்துகொள்ள வேண்டுமென்றும் சுட்டிக்காட்டினார்.

தமிழீழ ஆதரவும் திருமாவளவனும்

ஆரம்பகாலங்களில் போராட்டத்தை திமுக ஆதரித்ததுபோல நடித்தாலும் ஆதரிக்கவே இல்லை.ஆனால் திமுகவின் தொண்டர்கள் மனப்பூர்வமாக ஆதரவைத் தந்தனர்.இதே நேரம் திராவிடர் கழகம் ஆதரித்தபோதும் ஈழ ஆதரவை வைத்து பொருளாதார வளங்களைத் தேடினார்கள்.இதற்கு புலிகளையும் திமுக தொண்டர்களையும் பயன்படுத்தினார்கள்.

பொய்கள்

(Vijaya Baskaran)

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் யோகேஷ் வராதே என்ற பீகார்வாசி இந்திய சாதிக்கொடுமைகள் சம்பந்தமான சிறிய கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தார்.நானும் போயிருந்தேன் அங்கே வந்த இந்தியர்கள் நாங்கள் இலங்கையர்கள் என்றதும் அன்போடு வரவேற்றார்கள்.புலிகளின் போராட்டம் இன ஒற்றுமை பற்றி புகழ்ந்தார்கள்.சாதிவேறுபாடின்றி ஒற்றுமையாக போராடுவதாக பெருமைப்பட்டார்கள்.

பிரபாகரன் இறந்த செய்தியை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல்

(George RC)
அமிர்தலிங்கம் கொல்லப்பட்டபோது, ரொறன்ரோவில் நடந்த அஞ்சலிக் கூட்டத்தில் புலிக் காடையர்கள் பின்னால் நின்று தமிழ்ப் பட வில்லன்கள் மாதிரி பார்வை பார்த்து சீன் போட்டதை நேரில் காண நேர்ந்தது. அவர்களுக்குப் பயந்து, ‘என் தலைவன் இறந்து விட்டான். அவனை நினைத்து அழும் உரிமையைத் தாருங்கள்’ என்று யாசித்து நின்ற கணம் பற்றி எழுதியிருக்கிறேன்… பிரபாகரன் இறந்த செய்தியை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் விக்கித்துப் போய் நின்ற புலிக் கூட்டம் பற்றி எழுதிய போது!

பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியா நோக்கி பயணம் மேற்கொள்ள நடவடிக்கை

பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவிற்கு பயணத்தை மேற்கொள்வதற்கு இந்திய தனியார் நிறுவனம் ஒன்று விருப்பம் தெரிவித்துள்ளது. குறித்த விமான சேவைகளை எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளது.