‘பலாலி விமான நிலையம் சிறந்த உறவுப்பாலமாக அமையும்’

பலாலி விமான நிலையத்தை, சர்வதேச விமான நிலையமாக மாற்றுவது இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையே சிறந்த உறவுப்பாலமாக அமையுமென, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.

3 வாரங்களில் 9,410 பேர் கைது

ஜூன் மாதம் 9 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட, போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ், கடந்த மூன்று வார காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது, போதைப்பொருளுடன் தொடர்புடைய 9,410 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பலாலி விமான நிலையம் மீள கையளிப்பு

யுத்தக் காலப்பகுதியில் இலங்கை இராணுவம் பொறுப்பேற்றிருந்த பலாலி விமான நிலையம், இன்று (05) மீண்டும் சிவில் விமான சேவைகள் அதிகார சபைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

5G தொழில்நுட்பம்: மனித குலத்தின் எதிரி?

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
மனிதகுலத்தின் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்கக்கூடிய, சர்வரோக நிவாரணியாகத் தொழில்நுட்பத்தைக் கருதுவோர் உள்ளனர். கடந்த சில தசாப்தங்களாக, மனிதகுலம் ஏராளமான புதிய நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. அவற்றில் பல, தொழில்நுட்பத்தின் மீது, அளவுகடந்த நம்பிக்கையின் விளைவால் உருவானவை ஆகும்.

யாழ்ப்பாணத்திலுள்ள ஜனாதிபதி மாளிகை காணிகள் விடுவிப்பு

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்குப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகையைச் சூழவுள்ள பொதுமக்களின் காணிகளை இனங்காணும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. வலிகாமம் வடக்கு – காங்கேசன்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையைச் சூழவுள்ள பொதுமக்களின் 62 ஏக்கர் தனியார்க் காணிகளை விடுவிக்கும் நடவடிக்கையின் ஆரம்பகட்டமான காணிகளை இனங்காணும் நடவடிக்கை, வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் பங்குபற்றலுடன், நேற்று (04) ஆரம்பமாகின.

பலாலி விமான நிலையப் புனரமைப்புப் பணிகள் இன்று ஆரம்பம்

சர்வதேசப் பிராந்திய விமான நிலையமாகத் தரமுயர்த்தப்படும் பலாலி விமான நிலையத்திலிருந்து, இந்தியாவுக்கான முதலாவது விமானச் சேவை, ஓகஸ்ட் மாதம் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மூன்றாவது பன்னாட்டு விமான நிலையமாக, பலாலி விமானச் நிலையத்தை அபிவிருத்திச் செய்யும் பணிகள், இன்று வெள்ளிக்கிழமை (05), சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளன.

’ஒன்றுபட்டால் ஆகிரமிப்புகளை தடுக்க முடியும்’

முல்லைத்தீவு – செம்மலை நீராவியடிப் பிள்ளையார் கோவிலும் தென்னவன் மரவாடி முருகன் கோவில் ஆகிய தமிழர்களின் பூர்விக மதவழிபாட்டு இடங்கள், இன்று பௌத்த மத ஆக்கிரமிப்புகளால் பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளன என்று தெ​​ரிவித்த வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவஜிலிங்கம், ஒன்றுபட்டு ஒரேகுரலில் நின்றால்தான், ஆகிரமிப்புகளைத் தடுத்து நிறுத்த முடியுமென்றுக் கூறினார்.

பலாலி விமான நிலைய அபிவிருத்தி ஆரம்பம்

பலாலி விமான நிலையத்தை, சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள், ஜுலை மாதம் 5ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது என, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார். இதன் நிர்மாணப் பணிகள் இரண்டு அல்லது மூன்று மாத காலத்துக்குள் பூர்த்தி செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்க – ஈரான் நெருக்கடி: முடிவில்லாத போருக்கான அறைகூவல் FacebookTwitter

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

போரொன்றைத் தொடக்குதல் கடினமல்ல. ஆனால், அதை முடிவுக்குக் கொண்டுவருதல் எளிதல்ல. போரின் பாதிப்புகள், தலைமுறை தாண்டி நிலைப்பன. ஆனால், போருக்கான பறையை அறைபவர்களின் எண்ணங்களில், இவை இல்லை. வரலாற்றின் முக்கியமான நிகழ்வுகள், முதலில் அவலத்திலும் இரண்டாவது முறை பேரழிவிலும் முடிகின்றன. அந்தப் பேரழிவைத் தமது கேலிக்கூத்துகளின் மூலம், சிலர் சாத்தியமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். எங்கள் குழந்தைகளுக்கு, வாழ்வதற்கு உதவாத உலகைப் பரிசளிப்பதற்கு, இவர்கள் முண்டியடிக்கிறார்கள்.

கூட்டணியாகப் போட்டியிட மொட்டு தீர்மானம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் உள்ளிட்ட அனைத்துத் தேர்தல்களின் போதும், கூட்டணியாகப் போட்டியிடுவதற்கு, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியும் ஒன்றிணைந்த எதிரணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளும் தீர்மானித்துள்ளன. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், புதிய கூட்டணியைப் பதிவு செய்வது குறித்துக் கலந்துரையாடப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.