நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ஆற்றிய முழுமையான உரை (பகுதி – 2)

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ஆற்றிய முழுமையான உரை (பகுதி – 2)

அந்த நன்றிக்கடன் செலுத்த வேண்டும் என்ற உயரிய பண்பினை நான் பின்பற்றியதால் ஒருபுறத்தில் நாட்டுக்கு பாரிய தீங்கு விளைவிக்கப்பட்ட அதே சந்தர்ப்பத்தில்; மறுபுறத்தில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தான் விரும்பியவாறு சில வேளைகளில் ஜனாதிபதி அதிகாரங்களைக் கூட உபயோகப்படுத்திக் கொள்வதற்கு அவருக்கு நான் அதிகாரத்தைக் கொடுத்திருந்தேன். இதனால் ஏற்பட்ட விளைவுகள் என்ன? கடந்த மூன்று வருட காலத்தில் ஏற்பட்ட பல்வேறு சம்பவங்கள் காரணமாக மிக மோசமான அவல நிலையே ஏற்பட்டிருக்கின்றது. எனது உரை இன்னும் நீடிக்கும் என்பதால் காலத்தை நான் வீண்விரயம் செய்ய விரும்பவில்லை. ஆயினும் எதிர்வரும் காலங்களில் அவ்வப்போது அந்த விடயங்களைப்பற்றி நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்கவேண்டும் என நான் எண்ணியிருக்கின்றேன். இந்த சம்பவங்களின் பின்னணியில் இரண்டு நாட்களுக்கு முன் நான் எடுத்த தீர்மானம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களை பிரதமர் பதவியில் அமர்த்துவதற்கும் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களை பிரதமர் பதவியில் இருந்து நீக்குவதற்குமான முடிவை நான் எடுப்பதற்கு மிக முக்கியமான காரணத்தை மிகுந்த மதிப்புடன் நான் உங்களுக்கு விளக்கிக் கூற விரும்புகின்றேன்.

(“நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ஆற்றிய முழுமையான உரை (பகுதி – 2)” தொடர்ந்து வாசிக்க…)

வலிய வந்த எம்.பீயை விரட்டியடித்த மகிந்த!

(எஸ். ஹமீத்)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினரான வீ.சி. இஸ்மாயில் பிரதியமைச்சர் பதவி தனக்குத் தருவதாக இருந்தால் மகிந்த-மைத்திரி தரப்புக்கு ஆதரவு வழங்கத் தான் தயார் என்று கூறி, மகிந்த தரப்பினரைத் தொடர்பு கொண்டுள்ளார். இந்தத் தொடர்பை ஏற்படுத்துவதில் பெரும்பான்மையின அமைச்சர் ஒருவரும் மற்றுமொரு முஸ்லிம் இராஜாங்க அமைச்சரும் செயற்பட்டுள்ளனர்.

(“வலிய வந்த எம்.பீயை விரட்டியடித்த மகிந்த!” தொடர்ந்து வாசிக்க…)

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ஆற்றிய முழுமையான உரை (பகுதி – 1)

என்னைக் கொலை செய்வதற்கான சதித்திட்டம் பற்றிய மிக முக்கியமான தகவல்கள் வெளிவந்திருக்கும் நிலையில் என் முன் எஞ்சியிருந்த ஒரே தீர்வு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களை அழைத்து அவரை பிரதமர் பதவியில் அமர்த்தி புதிய அரசாங்கத்தை அமைப்பது மாத்திரமே ஆகும். இந்த புதிய அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற மதிப்பிற்குரிய 225 அங்கத்தவர்களுக்கும் வெளிப்படையாக நான் அழைப்பு விடுக்கின்றேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

(“நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ஆற்றிய முழுமையான உரை (பகுதி – 1)” தொடர்ந்து வாசிக்க…)

இத்தனை குழப்பங்களுக்கும் யார் பொறுப்பு?

ஒக்டோபர் 26ஆம் திகதி மாலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரங்கேற்றிய எதிர்பாராததொரு நாடகத்தின் அதிர்ச்சியில் இருந்து, இன்னமும் பலர் வெளிவரவில்லை; வெளிவர முடியாமல் தவிக்கிறார்கள்.   “அவர் இப்படி ஏமாற்றுவார் என்று, நாங்கள் நினைக்கவில்லை. கழுத்தறுத்து விட்டுப் போய்விட்டார்” என்று புலம்புகின்ற நிலை, அரசியல் கட்சிகளிடத்தில் மாத்திரமன்றி, அவருக்கு வாக்களித்த மக்களில் பெரும்பாலானோருக்கும் இருக்கிறது.

(“இத்தனை குழப்பங்களுக்கும் யார் பொறுப்பு?” தொடர்ந்து வாசிக்க…)

அலசல்: இலங்கையில் என்ன நடக்கிறது?

இலங்கையில், கடந்த வெள்ளிக்கிழமை (26) மாலை ஏற்படுத்தப்பட்ட அரசியல் மாற்றம், பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கையில் அரசியல் குழப்ப நிலை அல்லது அரசியல் நெருக்கடி இருப்பதை அநேகர் உணர்ந்தாலும் ஏற்றுக் கொண்டாலும், அதைத் தாண்டிய பல்வேறு கேள்விகளும் சந்தேகங்களும், பலரிடத்தில் இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. எனவே, இலங்கையின் அரசியல் நெருக்கடி நிலைமை தொடர்பாக, கடந்த சில நாள்களில் ஏற்பட்ட மாற்றங்கள் தொடர்பாக, இப்பகுதி ஆராய்கிறது.

(“அலசல்: இலங்கையில் என்ன நடக்கிறது?” தொடர்ந்து வாசிக்க…)

‘தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கே அமைச்சுப் பதவியை ஏற்றேன்’

கிழக்குத் தமிழர்களின் இருப்புக்கும், அரசியல் ரீதியான அபிலாஷையுடன் கூடிய எண்ணத்துடன், தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கும்தான் நான் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றுள்ளேன் என, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கிழக்குப் பிராந்திய அபிவிருத்திப் பிரதியமைச்சருமான எஸ்.வியாளேந்திரன் (அமல்) தெரிவித்தார். கிழக்குப் பிராந்திய அபிவிருத்திப் பிரதியமைச்சராக பதவியை பொறுப்பேற்றமை குறித்து, இன்று (3) அவரை தொடர்புகொண்டு கேட்டபோதே, அவரை இவ்வாறு குறிப்பிட்டார்.

(“‘தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கே அமைச்சுப் பதவியை ஏற்றேன்’” தொடர்ந்து வாசிக்க…)

‘வியாழேந்திரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்’

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், புதிய அரசாங்கத்தில் பிரதியமைச்சர் பதவியை ஏற்றுள்ளமைக்கு கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அவருக்கு எதிரான உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சித் தலைவர்களின் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம், நேற்று (02) பிற்பகல் நடைபெற்றது. இது தொடர்பில் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

(“‘வியாழேந்திரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்’” தொடர்ந்து வாசிக்க…)

சம்பந்தரின் “கரும்புலிகள்”

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒருகாலத்தில் வன்னியில் பலநூற்றுக்கணக்கான கரும்புலிகளுடனும் – முப்படையினருடனும் – இருந்துகொண்டு தென்னிலங்கை தரப்பினரை எவ்வாறு தன் காலடியில் வைத்திருந்தாரோ, அதேயளவு பலத்துடன் தற்போது சம்பந்தன் காணப்படுகிறார். காலதேவன் மீண்டுமொருதடவை தமிழர் தரப்பின் குரலுக்கான அடையாளத்தை காணப்பித்திருக்கிறான். தென்னிலங்கை ஆட்சிக்கதிரையின் ஒருகால் அல்ல, இரண்டு கால்களாகவும் சம்பந்தன் இருந்துகொண்டிருக்கிறார் என்பதை தற்போதைய குழப்பங்கள் அடையாளம் காண்பித்திருக்கின்றன. இனி சம்பந்தர் என்ன செய்யப்போகிறார் என்பதுதான் கேள்வி. இன்று சமூக வலைத்தளங்கள் முதல் ஊடகங்களின் ஆசிரியர் தலையங்கங்கள்வரை எல்லாமே, சம்பந்தர் பலமோடு இருக்கிறார் என்று சொல்கின்றன. அவ்வாறு சொல்வது மிக எளிதானதும்கூட. ஆனால், அவர் என்ன செய்யவேண்டும் என்று சொல்வதுதான் கடினம். அதனை எவருமே சொன்னதாக காணவில்லை. (“சம்பந்தரின் “கரும்புலிகள்”” தொடர்ந்து வாசிக்க…)

மலையகத் தொழிலாளர்களின் கூலி உயர்வுக்கான போராட்டத்துக்கு எமது பூரண – SDPT

பத்திரிகைகளுக்காக வெளியிடப்படும் அறிக்கை – 29-10-2018

மலையகத் தொழிலாளர்களின் கூலி உயர்வுக்கான போராட்டத்துக்கு
எமது பூரண ஆதரவைத் தெரிவிக்கிறோம்
மலையக தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஆயிரம் ரூபா நாளாந்தக் கூலி கேட்டுப் போராடி வருகிறார்கள். மலையகத்தில் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர்.  மேலும், கொழும்பு காலி முகத் திடலில் பல்லாயிரக்கணக்கில் அணி திரண்டு தமது கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார்கள். தேயிலைத் தொழிலாளர் சங்கங்களுக்;கும் தேயிலைப் பெருந்தோட்ட கம்பனிகளுக்கும் இடையே தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு தொடர்பான ஒப்பந்தம் ஏற்படும் வரை அவர்களின் போராட்டம் மேலும் வீறு கொண்டதாகத் தொடரும் என்பதில் சந்தேகமில்லை.
தோட்டத் தொழிலாளர்களின் தொழிற்சங்கள் தத்தமது அரசியல் வேறுபாடுகளுக்கு ஏற்ப  தனியாகவும், வௌ;வேறாக கூட்டிணைந்தும் தொழிலாளர்களைத் திரட்டி வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். தேயிலைத் தோட்டத்தொழிலாளர்களின் கூலி உயர்வுப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதிலுமுள்ள பல்வேறு அரசியல் சமூக அமைப்புக்களும் தலைவர்களும் குரலெழுப்பி வருகின்றனர். இருந்தும் இந்த விடயத்தில் அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்களின் கூலி உயர்வுக்கான முன்னெடுப்பு எதனையும் இதுவரை மேற்கொள்ளாதது கவலையைத் தருகின்றது. மத்திய அரசாங்கத்தின் ஆட்சி அதிகாரம் தொடர்பாக தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகள் தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கை மீது அரசாங்கத்தின் அக்கறையை காலதாமதாக்கி விடுமோ என்ற அச்சம் பரவலாக ஏற்பட்டுள்ளது.

(“மலையகத் தொழிலாளர்களின் கூலி உயர்வுக்கான போராட்டத்துக்கு எமது பூரண – SDPT” தொடர்ந்து வாசிக்க…)

புலிகள் எப்படி ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள் (Part11)

சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி, மாலதி படையணி போன்றவையும் முன்னரே பெருமளவுக்குச் சிதைந்துவிட்டன. இந்த நிலையிலும் அவர்கள் வெளியுலகுக்குத் தவறான தகவல்களையே சொல்லிக்கொண்டிருந்தனர். பதிலாக சிறிலங்கா அரசு இன்னும் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியது. இப்போது இறுதிக்கட்ட நடவடிக்கைக்குப் படைத்தரப்பு தன்னைத் தயார்படுத்தியது. அதுதான் புதுமாத்தளன் மற்றும் அம்பலவன் பொக்களையில் படைத்தரப்பு நுழைந்து ஒருலட்சத்திற்கும் அதிகமான சனங்களை மீட்ட நடவடிக்கை. உண்மையில் புலிகளின் பிடியிலிருக்கும்போது தம்மை முழுதாகப் பணயக் கைதிகளாகவே அந்த மக்கள் எண்ணியிருந்தனர். அந்த நிலையிலேயே அவர்களைப் புலிகள் நடத்தினார்கள். உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான பணயக்கைதிகள். (இப்போது அத்தனை பேரும் தடுப்புமுகாம்களில் தடைக்கைதிகளாக அரசாங்கத்தால் வைக்கப்பட்டுள்ளனர்.) இந்தப் பணயக் கைதிகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஆயிரத்துக்கும் அதிகமான சனங்கள் கொல்லப்பட்டனர்.

(“புலிகள் எப்படி ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள் (Part11)” தொடர்ந்து வாசிக்க…)