புளொட் பிரதிநிதிகளை பேரவையினர் வெளியேற்றியுள்ளனர்

தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்துக்குச் சென்ற புளொட் அமைப்பின் பிரதிநிதிகளை, பேரவையினர் வெளியேற்றியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம், பலாலி வீதியிலுள்ள தமிழ் மக்கள் பேரவையின் அலுவலகத்தில் பேரவையின் கூட்டம் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்தது. இக்கூட்டத்துக்கு பேரவையில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கும் பொது அமைப்புகளின் பிரதிதிநிதிகள் பேரவை உறுப்பினர்கள் எனப் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

(“புளொட் பிரதிநிதிகளை பேரவையினர் வெளியேற்றியுள்ளனர்” தொடர்ந்து வாசிக்க…)

ரணில் எனும் பச்சைக் கள்ளன்?

இலங்கை அரசியலில் சுமார் நாற்பதாண்டுகளிற்கு மேலான அனுபவமுள்ள ரணில் விக்கிரமசிங்க இதுவரை அரசியலில் சாதித்தது தான் என்ன? இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவல்ல முதிர்ச்சிடைந்த தலைமைப் பண்பு (statesmanship) அவரிடம் இருக்கிறதா? இலங்கையையின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்களை தீட்டி நடைமுறைப்படுத்த வல்ல ஆற்றல் (ability) அவரிடம் இருக்கிறதா போன்ற கேள்விகள் வியாபிக்கத் தொடங்கியிருக்கிறது.

(“ரணில் எனும் பச்சைக் கள்ளன்?” தொடர்ந்து வாசிக்க…)

தோழமை தினம்

திருகோணமலையில் நாளை (19.11.2018) தோழர் பத்தமநாபாவின் 67வது பிறந்த நாளையொட்டி தோழமை தினம் நினைவு கூரப்படுகின்றது. வருடம் தோறும் நினைவுகூரப்படும் இத்தோழமை தினம் இம்முறை திருகோணமலையில் நினைவு கூரப்படுவதுடன் தோழர் பத்மநாபாவின் உருவச்சிலையும் திறந்து வைக்கப்படவிருக்கின்றது.இதற்கான செயற்பாடுகளை தமிழர் சமுக ஜனநாயக கட்சியின்(SDPT) திருமலை மாவட்ட செயலாளர் தோழர் சத்தியன்( சி.சிவகுமார் ) தலைமையில் தோழர்கள் முன்னெடுத்து வருகின்றார்கள்.

பொறுமை இழக்கலாமா?

நாட்டில் இப்போது என்ன நடக்கிறது? ஒவ்வொரு பிரஜையும் எழுப்புகின்ற கேள்வி இது. உயரிய மக்கள் சபையான பாராளுமன்றம் கூட்டப்படுவதும், அடிதடி சண்டைகளுடன் ஒத்திவைக்கப்படுவதும் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. மக்கள் பிரதிநிதிகள் சபையொன்றில் நடக்கின்ற மயிர்க் கூச்செறியும் சண்டைக் காட்சிகளை மக்கள் தினமும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். என்றாலும் ஏக்கப் பெருமூச்சு ஒன்றுதான் அவர்களது உணர்வு வெளிப்பாடாக இருக்கின்றது.

(“பொறுமை இழக்கலாமா?” தொடர்ந்து வாசிக்க…)

ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை மீண்டும் செயற்பட வேண்டும்

தங்கள் ஏழ்மையை ஓரளவுக்கு இது துடைக்கும் என்கிறார்கள் இப்பகுதி மக்கள்

(யது பாஸ்கரன்)

இலங்கையின் மிகவும் வறுமை மிகுந்த மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டம் காணப்படுகின்றது. இவ்வாறு இந்த மாவட்டத்தின் வறுமைக்கு, முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் பதினேழாயிரத்துக்கும் அதிகளவான இளைஞர் யுவதிகள் தொழில் வாய்ப்பின்றி இருப்பதே காரணமாக அறிய முடிகின்றது. அதுபோல மாவட்டத்தில் தொழில் வாய்ப்பின்மை காரணமாக வறிய மற்றும் நடுத்தர குடும்பங்கள் அல்லப்படுகின்றன.

(“ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை மீண்டும் செயற்பட வேண்டும்” தொடர்ந்து வாசிக்க…)

இன்றைய உடனடித் தேவை பரந்துபட்ட கூட்டணியே

70 ஆண்டு சுதந்திரத்தின் உச்ச கட்ட சீரழிவு

(சிராஜ் மஷ்ஹூர்)

1948 இல் இலங்கை பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்றது. இப்போது 2018 இல் இருக்கிறோம். இந்த 70 ஆண்டு கால சுதந்திரத்திற்குப் பிந்திய இலங்கையின் அரசியல் வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், தீர்க்க முடியாத பாரிய இழப்புகளும் வேதனைகளுமே எஞ்சியிருக்கின்றன. மிகப்பெரும் சீரழிவுகளே தொடர்கதையாகி வருகிறது. ஐ.தே.க. வும், சு.க வுமே இந்தச் சீரழிவின் பிரதான பங்குதாரர்கள்.

(“இன்றைய உடனடித் தேவை பரந்துபட்ட கூட்டணியே” தொடர்ந்து வாசிக்க…)

புலிகள் எப்படி ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள் (Part14)

இதேவேளை இந்த இராணுவத் தாக்குதல்களால் புலிகளின் நிர்வாகக் கட்டமைப்புகள் மட்டுமல்லாமல் இராணுவக் கட்டமைப்பும் ஆட்டம் கண்டது. குறிப்பாகப் புலிகளின் வெடிபொருட் தொழிற்சாலைகள் இடப்பெயர்வுக்கும் குண்டுவீச்சுக்கும் இலக்காகின. புது மாத்தளன், அம்பலவன் பொக்களையில் ஏப்ரல் 19, 20ஆம் திகதிகளில் இராணுவமும் உள்நுழைந்தவுடன் மாறிய நிலைமைகள் புலிகளுக்கு மேலும் நெருக்கடிகளைக் கொடுத்தன. கடலில் தீவிரக் கண்காணிப்பு, சிறிய நிலப்பகுதி, வெளிச்செல்ல முடியாத அளவுக்குச் சுற்றிவளைப்புஇராணுவ வளையத்தின் இறுக்கம், தளர்வடைந்த தளபதிகள், எந்தப் போருபாயத்தாலும் இனி வெற்றி கொள்ள முடியாது என்ற நிலை நிச்சயமாகிவிட்டது. ஆனால், அப்போதும் தங்களால் போரில் வெற்றிபெற முடியும் என அவர்கள் சனங்களுக்குச் சொல்லிக்கொண்டேயிருந்தார்கள். புலிகளின் குரல் வானொலி போர் வெற்றி குறித்த நம்பிக்கையூட்டும் நிகழ்ச்சிகளையும் அறிவிப்புகளையும் செய்துகொண்டேயிருந்தது. ஆட்பிடிப்பும் குறைவில்லை. அதேவேளை புலிகள் தாக்குதல்களை நடத்திக் கொண்டேயிருந்தனர்.

(“புலிகள் எப்படி ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள் (Part14)” தொடர்ந்து வாசிக்க…)

புலிகள் எப்படி ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள் (Part13)

புலம்பெயர் மக்களின் போராட்டம் நிச்சயமாக ஏதாவது நல்விளைவுகளைத் தரும் என்று பிரபாகரன் நம்பினார். முதல் தடவையாக அவர் துப்பாக்கிகளிலும் பீரங்கிகளிலும் நம்பிக்கை இழந்த நிகழ்ச்சி இது. அதுவரையும் எப்படியும் இராணுவத்தை ஏதாவது ஒரு புள்ளியில் வைத்து முறியடித்துத் தோல்வியைத் தழுவச் செய்யலாம் என்று இருந்த நம்பிக்கையைப் பிரபாகரன் மெல்ல மெல்ல இழந்திருந்தார்.

(“புலிகள் எப்படி ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள் (Part13)” தொடர்ந்து வாசிக்க…)

‘கூட்டமைப்போடு இணைய வேண்டுமென்ற அவசியமில்லை’

மக்களாலேயே தான் நாடாளுமன்ற உறுப்பினராகவும் மக்கள் கேட்டுக்கொண்டதாலேயே தான் இன்று பிரதிஅமைச்சு பதவியை பெற்றுக்கொண்டதாகவும் கிழக்கு அபிவிருத்திப் பிரதியமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் வியாழேந்திரன் மீண்டும் இணைய முற்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து, இன்று (17) அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

(“‘கூட்டமைப்போடு இணைய வேண்டுமென்ற அவசியமில்லை’” தொடர்ந்து வாசிக்க…)