சாதி ஒடுக்குமுறையும் பெக்கோ தேரிழுப்பும்

(எஸ். கனகரத்தினம்)

சாதி ஒடுக்குமுறையை நவீன வடிவத்தில் முன்னெடுத்துச் செல்வதில் தென்மராட்சி வாழ் சாதிமான்களும், அவர்களை மறைமுகமாக வழிநடாத்திச் செல்லும் அரசியல் வாதிகளும் முக்கிய பங்கு வகித்து வந்துள்ளனர். அண்மையில் வரணி கண்ணகி அம்மன் ஆலய உற்சவத்தின் போது ஒடுக்கப்பட்ட மக்களும் வடம் பிடித்து தேரை இளுக்க முஸ்தீபு மேற்கொண்டு வருவதாக அறிந்த ஆலய நிர்வாகிகளும், சாதிமான்களும் இணைந்து இத்தகைய நடவடிக்கையை தடுத்து நிறுத்தும் பொருட்டு பெக்கோ (ஜேசிபி) இயந்திரத்தின் மூலம் தேரை இளுத்துச் சென்ற செய்தி பத்திரிகைகள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக வெளிவந்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

(“சாதி ஒடுக்குமுறையும் பெக்கோ தேரிழுப்பும்” தொடர்ந்து வாசிக்க…)

இந்தியாவிலிருந்து திரும்பியோரின் பிள்ளைகள் வடக்கில் புறக்கணிப்பு

யுத்தம் காரணமாக, பாதுகாப்பு நலன் கருதி, வடக்கில் இருந்து இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, பின்னர் யுத்தம் நிறைவுக்கு வந்ததன் பின் மீண்டும் வடக்குக்கு மீள்குடியமர்ந்த மக்கள் பல்வேறு வகையில் புறக்கணிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

(“இந்தியாவிலிருந்து திரும்பியோரின் பிள்ளைகள் வடக்கில் புறக்கணிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

விக்னேஷ்வரனை முன்னாள் போராளிகள் கன்னத்தில் அறைந்துள்ளனர்’

சிவில் பாதுகாப்புப் படையின் கேர்ணல் ரத்னபிரிய பந்துவுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் கண்ணீருடன் வழஙகிய பிரியாவிடை வழங்கி, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர் எம்,கே.சிவாஜிலிங்கம் ஆகியோரை கன்னத்தில் அறைந்துள்ளதாக ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

(“விக்னேஷ்வரனை முன்னாள் போராளிகள் கன்னத்தில் அறைந்துள்ளனர்’” தொடர்ந்து வாசிக்க…)

‘சொந்த மண் அழுகிறது; விரைந்து வாரீர்’

அண்மையில், யாழ்ப்பாணத்தில் உள்ள நண்பரின் வீட்டுக்குச் செல்லும் சந்தர்ப்பம் கிடைத்தது. சமகால அரசியல் உட்பட பல விடயங்களை அலசிக்கொண்டிருந்தோம். அவ்வேளையில், மழை பெய்து கொண்டிருந்தது. காண்டாவனத்திலும் கனமழை கொட்டுது என்றவாறு, பக்கத்து வீட்டு அம்மா ஓடிவந்தார்.

(“‘சொந்த மண் அழுகிறது; விரைந்து வாரீர்’” தொடர்ந்து வாசிக்க…)

‘அடேய் பாவிங்களா!’

 

தமிழ்நாட்டில் மூளைச் சாவுக்கு உள்ளான நபர்களிடமிருந்து உறுப்புகளை தானம் பெற்று, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன.

(“‘அடேய் பாவிங்களா!’” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கு – கிழக்கு தமிழ் இளைஞர்களின் எதிர்காலம் பற்றி சமூக அரசியற் தலைவர்கள் அக்கறை செலுத்த வேண்டும்

தமிழ் இளைஞர்கள் போதைப் பொருட்களைப் பாவிக்கிறார்கள் – வாள்வெட்டு குழுக்களாக செயற்படுகிறார்கள் – அவர்கள் உடலுழைப்புக்குத் தயாராக இல்லை என பலவாறாக தமிழர் சமூக அரசியற் தலைவர்களும் தமிழ் ஊடகங்களும் அடிக்கடி குற்றம் சாட்டுவதைக் காண்கிறோம். மேலும் தமிழ் பட்டதாரி இளைஞர்கள் அரசாங்க உத்தியோகங்களைத் தவிர வேறெதற்கும் தயாராக இல்லை – இங்கு தனியார் துறைகளில் பல்வேறு வேலை வாய்ப்புகள் இருந்தும் தமிழர்கள் ஒழுங்காகவும் ஈடுபாட்டுடனும் வேலை செய்வதற்கு மிகக் குறைவானவர்களே தயாராக உள்ளனர். கட்டிடத் தொழில், மரவேலைகள், மின்சார இணைப்பு வேலைகள், உலோக வேலைகள், போன்றவற்றில் திறன் வாய்ந்த உழைப்பாளர்களை தமிழர்கள் மத்தியிலிருந்து பெறுவது மிகவும் சிரமமாக உள்ளது என அபிப்பிராயங்கள்; இங்கு பரவலாக உள்ளன. விவசாயக் கூலி அதிகமாக உள்ள அதேவேளை விவசாய வேலைகளுக்கான கூலித் தொழிலாளர்கள் கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளது, அப்படித்தான் கிடைத்தாலும் அவர்களை முழு நேரமும் கவனிக்காவிட்டால் அவர்களிடமிருந்து உரிய அளவு வேலைகளைப் பெற முடியாதுள்ளது என விவசாயத் துறையில் உள்ளவர்கள் குறைப்பட்டுக் கொள்வதையும், உணவுக் கடைகள், பல சரக்குக் கடைகள், புடவைக் கடைகள் என பல்வேறு வர்த்தக நிலையங்களிலும் வேலை செய்வதற்கு ஊழியர்கள் கிடைப்பது சிரமமாக உள்ளதாகவும் அப்படிக் கிடைத்தாலும் அவர்கள் சில நாட்களுக்குள்ளேயே வேலையை விட்டு ஓடி விடுகிறரகள் என வௌ;வேறு வர்த்தகர்கள் குறை சொல்வதையும் தமிழர் சமூகத்தில் அடிக்கடி கேட்கக் கூடியதாக உள்ளது.

(“வடக்கு – கிழக்கு தமிழ் இளைஞர்களின் எதிர்காலம் பற்றி சமூக அரசியற் தலைவர்கள் அக்கறை செலுத்த வேண்டும்” தொடர்ந்து வாசிக்க…)

ஜப்பானைத் தனிமைப்படுத்தும் சிங்கப்பூர் சந்திப்பு

(ஜனகன் முத்துக்குமார்)

வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையிலான அண்மைக்காலத்து சமாதான இணக்கப்பாடுகளைத் தொடர்ந்து, வடகொரியத் தலைவருக்கும் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதிக்கும் இடையில் சிங்கப்பூரில் சந்திப்பு நடைபெறவிருக்கும் நிலையில், குறித்த இரண்டு விடயங்களிலும் தனது பங்கு இல்லாமல் போனமை குறித்து, ஜப்பான் கவலை தெரிவித்துள்ளமை, சர்வதேச விவகாரங்களில் மிகவும் உன்னிப்பாகப் பார்க்கப்பட வேண்டியதாகவும்.

(“ஜப்பானைத் தனிமைப்படுத்தும் சிங்கப்பூர் சந்திப்பு” தொடர்ந்து வாசிக்க…)

மாமனிதன் …தமிழ்மக்கள் கொடுத்த பட்டம் ….!!!!

!!!..சிவில் பாதுகாப்பு திணைக்கள முன்னால் போராளி ஒருவரின் முகநூலிருந்து கண்ணீர் சிந்தியதுக்கான காரணத்தை இவ்வாறு பதிவிட்டிருந்தார்.
.
.
சிவில் பாதுகாப்பு திணைக்கள இணைந்த கட்டளை அதிகாரி W.W Rathnapriya Bandu அவர்களை #தமிழ் #மக்கள் #கண்ணீரோடுவழியனுப்ப காரணம் என்ன…
(“மாமனிதன் …தமிழ்மக்கள் கொடுத்த பட்டம் ….!!!!” தொடர்ந்து வாசிக்க…)