இந்தியாவிலிருந்து திரும்பியோரின் பிள்ளைகள் வடக்கில் புறக்கணிப்பு

யுத்தம் காரணமாக, பாதுகாப்பு நலன் கருதி, வடக்கில் இருந்து இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, பின்னர் யுத்தம் நிறைவுக்கு வந்ததன் பின் மீண்டும் வடக்குக்கு மீள்குடியமர்ந்த மக்கள் பல்வேறு வகையில் புறக்கணிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து, இந்தியாவிலிருந்து வடக்கில் மீள்குடியமர்ந்த மக்கள் கூறியதாவது, இத்தினங்களில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் நாம், குறிப்பாக, தமது பிள்ளைகள் தொடர்பாகவே, அதிகமான நெருக்கடிகளுக்குள்ளாகி வருவதாக, அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எமது பிள்ளைகளை வடக்கிலுள்ள பாடசாலைகளில் கல்வி கற்பதற்காக அனுமதிப்பதற்காக முயல்கின்றபோது, பாடசாலை அதிபர்கள், அந்நாட்டு பிறப்புச் சான்றிதழை காரணம் காட்டி, எமது பிள்ளைகளுக்கு கல்வி கற்பதற்கான அனுமதியை மறுத்து வருகின்றனர் என, பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.