3 ஆட்கொணர்வு மனுக்களை முல்லைத்தீவு நீதிமன்றம் நிராகரித்துள்ளது

இறுதி யுத்தத்தின்போது இராணுவத்திடம் சரணடைந்த பின்னர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று ஆட்கொணர்வு மனுக்களை முல்லைத்தீவு நீதிமன்றம் நிராகரித்துள்ளதாகவும், அந்த வழக்குகளின் விசாரணை அறிக்கைகள் தொடர்பில் ஆராய்வதுக்காக, குறித்த வழக்குகள் எதிர்வரும் மே மாதம் 22ஆம் திகதி வவுனியா மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் தெரிவித்தார்.

(“3 ஆட்கொணர்வு மனுக்களை முல்லைத்தீவு நீதிமன்றம் நிராகரித்துள்ளது” தொடர்ந்து வாசிக்க…)

மீண்டும் சாதனை படைத்தார் அனித்தா

தேசிய கனிஷ்ட மெய்வல்லுநர் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் ஜெகதீஸ்வரன் அனித்தா மீண்டும் புதிய சாதனையை படைத்துள்ளார். கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் இன்று ஆரம்பமாகிய தேசிய கனிஷ்ட மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில், 23 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலிலேயே யாழ். மாவட்ட மெய்வல்லுநர் சங்கம் சார்பில் கலந்துகொண்ட ஜெகதீஸ்வரன் அனித்தா 3.55 மீற்றர் உயரத்தைத் தாண்டி தங்கப் பதக்கத்தைப் பெற்றதோடு புதிய சாதனையையும் படைத்துள்ளார். தான் 3.48 மீற்றர் உயரத்தை முன்னர் தேசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் 23 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான பிரிவில் தாண்டி சாதனை படைத்தையே அனித்தா தற்போது முறியடித்துள்ளார்.

கர்நாடகத்தில் பாஜக வெற்றி பெற தேர்தலில் கூட்டணி அவசியம்: கருத்துக் கணிப்பில் தகவல்

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்து, பாஜக ஆட்சி அமைக்க வேண்டுமென்றால், கூட்டணி வைக்காமல் தேர்தலைச் சந்தித்தால் பெரும்பான்மை கிடைக்காது, தோல்வியைத் தழுவும் என்று கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வரும் மே 12-ம் தேதி தேர்தலும், 15-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது. ஆளும் காங்கிரஸ் கட்சி மீண்டும்ஆட்சியைக் கைப்பற்ற தீவிரமான பிரச்சாரத்தில் இறங்கி இருக்கிறது. அதேபோல எதிர்க்கட்சியான பாஜகவும் களத்தில் வேட்பாளர்களை நிறுத்தி, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

(“கர்நாடகத்தில் பாஜக வெற்றி பெற தேர்தலில் கூட்டணி அவசியம்: கருத்துக் கணிப்பில் தகவல்” தொடர்ந்து வாசிக்க…)

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சம்பந்தன் பறிகொடுப்பாரா?

(எம்.எஸ்.எம். ஐயூப்)

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடமிருந்து பறிப்பதற்காக, மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணியினர் மீண்டும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதற்காகச் சம்பந்தனுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை சமர்ப்பிப்பது தொடர்பாக, அவர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர். இதற்கு முன்னரும் அவர்கள் அடிக்கடி இந்தக் கோரிக்கையை முன்வைத்து கோஷம் எழுப்பியிருக்கிறார்கள்.

(“எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சம்பந்தன் பறிகொடுப்பாரா?” தொடர்ந்து வாசிக்க…)

விக்னேஸ்வரனுக்காகக் களமாடுவது யார்?

(புருஜோத்தமன் தங்கமயில்)

தமிழ் மக்கள் பேரவையின் இளைஞர் மாநாடு, எதிர்வரும் ஜூன் மாதமளவில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டை ஒழுங்குபடுத்துவதற்காக ஓய்வுநிலை அதிபர் கந்தையா அருந்தவபாலன், வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் உள்ளிட்டவர்கள் அடங்கிய குழுவொன்றும் நியமிக்கப்பட்டிருக்கின்றது. இரு வாரகால இந்தியப் பயணத்தை முடித்துக் கொண்டு, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நாடு திரும்பிய அன்றே, மாநாட்டுக்கான குழு தொடர்பிலான அறிவிப்பும் வெளியாகி இருக்கின்றது.

(“விக்னேஸ்வரனுக்காகக் களமாடுவது யார்?” தொடர்ந்து வாசிக்க…)

’இறுதி டெஸ்டில் பங்கேற்ற அந்த விசேட விருந்தினர்’ சச்சின் பகிர்வு

“மாஸ்டர் பிளாஸ்டர்” சச்சின் டெண்டுல்கர் தனது இறுதி டெஸ்ட் போட்டியை மும்பையில் நடத்துமாறு கோரியமைக்கான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார். 24 வருடங்கள், இந்திய அணிக்காக விளையாடிய சச்சின் டெண்டுல்கரின் விளையாட்டை அவரது தாய் ஒருமுறையேனும் நேரடியாக பார்த்திராத நிலையில், தனது இறுதி டெஸ்ட் போட்டியினை தனது தாய் இரசிக்க வேண்டுமென்பதற்காகவே இந்த போட்டியை மும்பையில் நடத்தக்கோரியதாகத் தெரிவித்துள்ளார்.

(“’இறுதி டெஸ்டில் பங்கேற்ற அந்த விசேட விருந்தினர்’ சச்சின் பகிர்வு” தொடர்ந்து வாசிக்க…)

முடிந்ததா யுத்தம்? அழிந்ததா புலி?

தமிழ் மக்கள் அழிந்த அதே நாளில் கோடிஸ்வரர்களாகிய இவர்களை பற்றி தெரியுமா?

பல்லாயிரக் கணக்கானோர் உயிர்களை கொடுத்தும், உயிர்களை எடுத்தும் வளர்ந்த விடுதலைப் புலிக…ள் இயக்கம் 2009-ம் ஆண்டு மே மாதம், முள்ளிவாய்க்கால் பகுதியில் கனவு போல மறைந்து போனது. பல ஆண்டுகளாக இயக்கத்தில் இருந்து போராடியவர்கள், உயிரிழந்தோ, சரணடைந்தோ, அல்லது தப்பியோடியோ விட்ட துரதிஷ்டமான நிலையில்…

(“முடிந்ததா யுத்தம்? அழிந்ததா புலி?” தொடர்ந்து வாசிக்க…)

இரணைதீவில் தங்கியிருந்து போராட்டத்தை முன்னெடுத்துள்ள மக்கள்

இரணைதீவு கிராம மக்கள் இன்று (23) இரணைதீவில் தங்கி நின்று போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர். கிளிநொச்சி இரணைதீவு கிராம மக்கள் 1992 ஆம் ஆண்டு தமது சொந்த மண்ணில் இருந்து இடம்பெயர்ந்து சென்று முழங்காவில் கிராமத்தில் உள்ள இரணை மாதா கிராமத்தில் குடியேறியுள்ளனர்.

(“இரணைதீவில் தங்கியிருந்து போராட்டத்தை முன்னெடுத்துள்ள மக்கள்” தொடர்ந்து வாசிக்க…)

இந்திய அரசியலில் ‘ஆளுநர்’ பதவிகள்

(எம். காசிநாதன்)
“தமிழக ஆளுநராக இருக்கும் பன்வாரிலால் புரோகித்தை திரும்பப் பெற வேண்டும்” என்று போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது, ராஜ்பவனில் ஆளுநராக இருந்த சென்னா ரெட்டி மீது, “என்னிடம் தவறாக நடக்க முயன்றார்” என்று குற்றம் சாட்டி, “ஆளுநரை திரும்பப் பெறுங்கள்” என்று, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

(“இந்திய அரசியலில் ‘ஆளுநர்’ பதவிகள்” தொடர்ந்து வாசிக்க…)

முஸ்லிம்களுக்கு வழிகாட்டுகின்ற மிக பொருத்தமான தலைமையாக முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் முகிழ்ப்பு

– அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அஸ்மி பெருமிதம்

அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களுக்கு சரியான அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளதையே நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலின் முடிவுகள் காட்டுகின்றன, அவர்களுக்கு வழிகாட்டுகின்ற மிக பொருத்தமான தலைமையாக முன்னாள் அமைச்சர் ஏ. எல். எம். அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸை அடையாளம் கண்டு ஏற்று அங்கீகரித்து உள்ளனர் என்று அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி தெரிவித்தார்.

(“முஸ்லிம்களுக்கு வழிகாட்டுகின்ற மிக பொருத்தமான தலைமையாக முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் முகிழ்ப்பு” தொடர்ந்து வாசிக்க…)