டி. எஸ். சேனாநாயக்கவின் தலைமையில் ஐதேக பின்னர் அவரது மகன் டட்லி சேனநாயக்கவின் தலைமையின் பின்னர் அந்த கட்சியை இதுவரை ஜயவர்தன குடும்ப சொத்தாகவே இருந்து வந்துள்ளது, இலங்கையில் ஒரு தலைவருக்கான அதி கூடிய அதிகாரத்தை நாடாளுமன்றம் மூலமும் மக்களின் வாக்களிப்பு மூலமும் பெற்றுக்கொண்ட முதல் மனிதர் ஜெ ஆர் ஜயவர்தன, ரணில் அவர்களின் மாமா, இடையில் பிரேமதாசாவின் இடைவிடாத முயற்சியின் பலனாக அவர் ஜனாதிபதியாக வந்தார், எனினும் ஐதேக ஜேஆர் குடும்பத்தை விட்டு வேற்று மனிதர்களிடம் கைமாறிவிடவில்லை அதன் தலைமையை ரணில் விக்கிரம சிங்க பொறுப்பேற்றார், இவரது தலைமைக்கு எதிராக பிரேமதாசாவின் புதல்வர் எத்தனை முறை முயற்சித்தும் அது கைக்கூடவில்லை, இப்போது பிரதமர் பதவியை துறக்க வேண்டும் என கோரி ரணில் அவர்களுக்கு எதிரான பிரேரணை நாடாளுமன்றுக்கு வந்துள்ளது.
(“ரணில் காப்பாற்றப்பட்டாலும் கைவிடப்பட்டாலும் நமக்கு எந்த நன்மையும் இல்லை!” தொடர்ந்து வாசிக்க…)