‘பதிலளிக்கத் தேவையில்லை’

“தேவையற்ற கருத்துக்களுக்கு பதிலளிக்க வேண்டிய தேவை இல்லையென” நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை (30) யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, “தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னரே விடுதலை புலிகளின் முக்கிய தளபதிகளை இலக்கு வைத்து இராணுவத்தினர் தாக்குதல் நடத்தினார்கள்” என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் எம்.ரெமிடியஸ் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனிடம் கேட்டபோது, “தேவையற்ற கருத்துக்களுக்கு பதிலளிக்க வேண்டிய தேவை இல்லையென” தெரிவித்துள்ளார்.