மொட்டில் தமிழீழமும் நச்சு அரசியலும்

(Gopikrishna Kanagalingam)
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மீது, தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்றத்தில் முன்வைத்த விமர்சனங்கள், மிக முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. வடக்கிலும் கிழக்கிலும் தமிழீழம் மலரப் போகிறது என, மஹிந்த ராஜபக்‌ஷவும் அவரது பிரிவினரும், தேர்தல் பிரசாரக் காலத்தில் முன்வைத்த பிரசாரங்களுக்கான பதிலடியாகவே, எதிர்க்கட்சித் தலைவரின் பதிலடி அமைந்திருந்தது.

(“மொட்டில் தமிழீழமும் நச்சு அரசியலும்” தொடர்ந்து வாசிக்க…)

அஞ்சலி: எழுத்தாளர் தோழர் விதுரன் (இராசையா தங்கேஸ்வரன்) மறைவு!

“ஓ! மனிதர்களே நம்புங்கள்.

நான்,
பிரபஞ்சத்தில் ஒளி தேடுபவன்.
சிறந்த சித்தாந்தத்தின் புத்தன்.
இப்பூவுலகம் என் போதிமரம்.” – விதுரன் 

(“அஞ்சலி: எழுத்தாளர் தோழர் விதுரன் (இராசையா தங்கேஸ்வரன்) மறைவு!” தொடர்ந்து வாசிக்க…)

தொண்டையில் சிக்கிய முள்

(முகம்மது தம்பி மரைக்கார்)
‘பிச்சை வேண்டாம் நாயைப் பிடி’ என்கிற நிலையை, நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தியிருக்கின்றன. “உள்ளூராட்சித் தேர்தலை நடத்துங்கள்” என்று, தேர்தலுக்கு முன்னர் கூச்சலிட்டவர்கள், தேர்தல் நடந்த பிறகு, அதன் விசித்திர முடிவுகளால், விழி பிதுங்கி நிற்கின்றனர். அரசியல் கட்சிகளின் உள்ளும் புறமும், உடைவுகளை ஏற்படுத்தி விடும் அபாயகரமான நிலைவரங்களை, உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தியிருக்கின்றன.

(“தொண்டையில் சிக்கிய முள்” தொடர்ந்து வாசிக்க…)

‘ஈழம் கரைகிறது’ மஹிந்தவின் வாக்குப் பலிக்குமா?

(காரை துர்க்கா)
இலங்கையில், அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் அதிர்வலைகள் இன்னமும் ஓயந்தபாடில்லை. ஓயாத அலைகளாகவே அலை மோதுகின்றது. மேலும், ஓயப்போவதில்லை என்பது போலவே அரசியல் போக்குகள் தெரிகின்றன. கிராமிய மக்கள் மன்றங்கள் என அழைக்கப்படுகின்ற உள்ளூர் பிரதேசங்களை அபிவிருத்தி செய்யும், பிரதேச சபைகளுக்கான தேர்தல் முடிவுகள், முழு நாட்டையும் உலுப்பி விட்டிருக்கின்றன.

(“‘ஈழம் கரைகிறது’ மஹிந்தவின் வாக்குப் பலிக்குமா?” தொடர்ந்து வாசிக்க…)

‘நாம் மக்களிடமிருந்து ஒதுக்கப்படுவோம்’

“மன்னார் மாவட்டம் 42 ஆண்டுகளுக்கு பிறகு தேசியக் கட்சி ஒன்றால் வென்றெடுக்கப்பட்டமைக்கு தற்போதைய தமிழ்த் தலைமைகளும் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகளும் பொறுப்புக் கூற வேண்டும்” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம் தெரிவித்தார். அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் மன்னார் மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் பற்றி வினவியபோதே அவர் மேற்படி கருத்தை வெளிப்படுத்தினார்.

வல்வெட்டித்துறையில் ஆட்சியமைப்பது குறித்து சுயேட்சையுடன் கூட்டமைப்பு பேச்சுகளில்

அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில், வல்வெட்டித்துறை நகர சபை, காரைநகர் பிரதேச சபை, நெடுந்தீவு பிரதேச சபை, வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உள்ளிட்ட உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது குறித்து சுயேட்சைக் குழுக்களுடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பேச்சுகளை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

(“வல்வெட்டித்துறையில் ஆட்சியமைப்பது குறித்து சுயேட்சையுடன் கூட்டமைப்பு பேச்சுகளில்” தொடர்ந்து வாசிக்க…)

அரசியல் நெருக்கடி: 3 மணிநேரம் விவாதிக்க இணக்கம்

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் ​நெருக்கடி தொடர்பில், நாடாளுமன்றத்தில் இன்றுமாலை 4 மணிமுதல் 7 மணிவரையில் விவாதிப்பதற்கு, கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிணைந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, இந்த அரசியல் நெருக்கடி தொடர்பில் விவாதம் நடத்துவதற்கு, நேரம் ஒதுக்கித்தருமாறு கோரியிருந்தார். அந்தக் கோரிக்கையை அடுத்து, சபையில் அசாதாரண நிலைமையொன்று ஏற்பட்டது. அதன்பின்னர், சபை நடவடிக்கைகள் 15 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு, கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் நடத்தப்பட்டது. அக்கூட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாட்டை அடுத்தே, அரசியல் நெருக்கடி தொடர்பில், மூன்று மணிநேரம் சபை ஒத்திவைப்பு வேளை விவாதமாக, நடத்தப்படவுள்ளது.

‘கூட்டமைப்பு அரசாங்கம் நாளை மலரும்’

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் ஆதரவுடன், கூட்டமைப்பு அரசாங்கம் நாளை (20) செவ்வாய்க்கிழமை அமைக்கப்படும்” என தென் மாகாண ஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.நேற்று (18) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

(“‘கூட்டமைப்பு அரசாங்கம் நாளை மலரும்’” தொடர்ந்து வாசிக்க…)

தோழர் ஜோ! ஞாபக வெளியில் இருந்து……

பீக்கிங் சார்பு கம்யூனிஸ்ட கட்சியினூடாக தனது சமூக அரசியல் பிரவேசத்தை மேற்கொண்ட தோழர் ஜோ செனிவிரட்ண 60களின் பிற்பகுதியில் அதிலிருந்து வெளியேறி 1970 களின் முற்பகுதியில் ஏற்பட்ட இளைஞர் எழுச்சி காலத்தில் புதிய தேடல்களில் ஈடுபட்டார்.
1970 களின் முற்பகுதியில் இன சமூக ஒற்றுமைக்கு சவாலான நிலைமைகள் உருவான போது இன சமூக நல்லுறவிற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டார்.

(“தோழர் ஜோ! ஞாபக வெளியில் இருந்து……” தொடர்ந்து வாசிக்க…)