தென்சூடானில் தாக்குதலொன்றில் ஆறு தொண்டுப் பணியாளர்கள் கொல்லப்பட்டனர்

தென்சூடான் தலைநகர் ஜுபாவிலிருந்து பிபோர் நகரத்துக்குச் சென்றுகொண்டிருந்தபோது, கடந்த சனிக்கிழமை (25) இடம்பெற்ற தாக்குதலொன்றில், ஆறு தொண்டுப் பணியாளர்கள் கொல்லப்பட்டதாக, ஐக்கிய நாடுகள், நேற்று முன்தினம் (26) தெரிவித்துள்ளது. எவ்வாறெனினும், கொல்லப்பட்டவர்கள், ஐக்கிய நாடுகளுக்காகப் பணியாற்றினார்களா என்று ஐக்கிய நாடுகள் குறிப்பிட்டி -ருக்கவில்லையென்பதுடன், மேலதிக விவரங்கள் எதனையும் வழங்கியிருக்கவில்லை.

(“தென்சூடானில் தாக்குதலொன்றில் ஆறு தொண்டுப் பணியாளர்கள் கொல்லப்பட்டனர்” தொடர்ந்து வாசிக்க…)

பலி ஆடுகள் ஆக்கப்பட்ட தமிழர்கள்

(கே.சஞ்சயன்)

ஆலயத்தில் பலியிடுவதற்காகக் கொண்டு செல்லப்படும் ஆட்டின் தலையில் பூசாரி மஞ்சள் தண்ணீரைத் தெளிப்பார். தண்ணீர் பட்ட சிலிர்ப்பில் ஆடு தலையை ஒருமுறை ஆட்டி அதனை உதற முனையும். அதுதான் ஆடு செய்யும் தவறு. தன்னைப் பலிகொடுப்பதற்கு ஆடு விடை கொடுத்து விட்டதாக யாரோ ஒருவர் கூறுவார். அவ்வளவு தான், அத்தோடு முடிந்தது ஆட்டின் கதை. பலிகொடுப்பதற்குத் தன்னிடம் அனுமதி கேட்பதற்காகத் தான், தன் மீது மஞ்சள் தண்ணீர் தெளிக்கப்படுகிறது என்று ஆட்டுக்குத் தெரியாது. அவ்வாறு தெரிந்திருந்தால் ஆடு அதற்கு ஒருபோதும் தலையாட்டியிருக்காது. ஆட்டிடம் கேட்காமலேயே, அதன் ஒப்புதலைப் பெற்றது போலத்தான் இப்போது போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களின் நிலையும் உள்ளது.

(“பலி ஆடுகள் ஆக்கப்பட்ட தமிழர்கள்” தொடர்ந்து வாசிக்க…)

தமிழகத்தில் தமிழீழத்தின் நிலை!

தமிழீழம் குறித்து பேசும் எந்தவொரு தமிழக மேடை பேச்சாள அரசியல்வாதிகளும் திரும்பியே பார்க்காத ஒரு பக்கம்!
தமிழக முகாம்களில் ஈழ அகதிகள் படும் அவலம்! வெளிவராத பல உண்மைகள் அம்பலம்!
தமிழகத்திற்கு அகதிகளாக வந்த இந்த 26 வருடங்களில் மூன்று வேளை சாப்பாட்டுக்காக மட்டுமே எங்களுடைய போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது
திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் வசிக்கும் இலங்கை தமிழ் மக்கள் இவ்வாறு தெரிவிக்கின்றனர்.

(“தமிழகத்தில் தமிழீழத்தின் நிலை!” தொடர்ந்து வாசிக்க…)

விமான சேவை 6இல் வழமைக்கு திரும்பும்

கட்டுநாயக்க – பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விமான சேவைகள், வழமைபோல எதிர்வரும் 6ஆம் திகதியில் இருந்து முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள், தற்போது இறுதிக் கட்டத்தை எய்தியுள்ளதாக விமான நிலையத்தின் பிரதான கட்டுமானப் பொறியியலாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது. விமான ஓடு பாதையின் பணிகளும் நவீன தொழில்நுட்ப ரீதியான சமிக்ஞைக் கட்டமைப்பும், தற்போது பொருத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(“விமான சேவை 6இல் வழமைக்கு திரும்பும்” தொடர்ந்து வாசிக்க…)

சந்திரிகாவின் தெல்லிப்பழை விஜயம்…

தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்துக்குமான பணியகத்தின் தலைவியும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, இன்று சனிக்கிழமை (25) யாழ்ப்பாணத்துக்கு விஐயம் மேற்கொண்டு, பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொண்டார். தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவுக்குபட்பட்ட வீமன்காமம் பகுதியில் புதிதாக அமைக்கப்படவிருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அடிக்கல்லை நாட்டி வைத்தார். இதன்பின்னர், வலிகாமம் வடக்கு மக்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார். இதனைத் தொடர்ந்து தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்தினால் தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வுகளிலும் கலந்துகொண்டார்.

 

நம்பிக்கை தரும் மனுஷி சந்திரிகா

(சாகரன்)
மீண்டும் ஒரு தடவை நம்பிக்கை தரும் வார்த்தைகளை உதிர்திருக்கின்றார் சந்திரிகா குமாரரணதுங்க பண்டாரநாயக்கா. “…இலங்கையில் உள்ள இரு பெரும் பெரும்பான்மைக்ட கட்சிகள் இலங்கை சுதந்திரம் அடைந்து 70 வருடங்கள் ஆகியும் தமிழர்களின் அரசசியல் பிரச்சனைக்கு தீர்வு காணத் தவறிவிட்டனர் மாறி மாறி ஆட்சிக்குவரும் போது ஒருவர் தீர்வுகளை முன்வைக்கும் போது மற்றயவர் எதிர்ப்பதன் மூலம் இது நடைபெற்றது. தற்போது இரு பெரும் கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்திருப்பது தமிருக்கான தீர்வை வழங்க வாய்ப்ப ஏற்பட்டிருக்கின்றது….” என்ற விடயத்தை இது தவறும் பட்சத்தில் காரணம் கூறமுடியாத விடயம் இங்க ஒழித்திருக்கும் என்பதை தனது நம்பிக்கையும் நம்பிக்கையீனத்தையும் இணைத்து குற்றம் சாட்டும் பாணியிலிருந்து தவிர்த்து யதார்தத்தை கூறியுள்ளார்.

(“நம்பிக்கை தரும் மனுஷி சந்திரிகா” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கைப் பயணத்தை இரத்துச் செய்தார் ரஜினி

தமிழக அரசியல்வாதிகள் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நடிகர் ரஜினிகாந்த், தனது இலங்கைப் பயணத்தை இரத்து செய்துள்ளதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வீடுகளை இழந்து தவிக்கும் ஏழை மக்களுக்காக வவுனியாவில் கட்டப்பட்ட வீடுகளைக் கையளிக்க தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகவும், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி போன்ற இடங்களுக்குச் சென்று மக்களைச் சந்திக்கத் தாம் இலங்கை செல்ல சம்மதித்ததாகவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். தாம் அரசியல்வாதியல்ல எனச் சுட்டிக்காட்டியுள்ள ரஜினிகாந்த், இனிவரும் காலங்களில் இலங்கை வந்து, புனிதப்போர் நிகழ்ந்த பூமியைக் காணும் பாக்கியம் தமக்குக் கிடைத்தால், அரசியல் காரணங்களுக்காகப் போகவிடாமல் செய்து விடாதீர்கள் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

‘இரண்டு வருடங்களில் பெருமளவு காணிகள் விடுவிப்பு’

வலிகாமம் வடக்கில் இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் இருக்கின்ற காணிகளை விடுவித்து தங்களை மீளக்குடியமர்த்துமாறு, யாழ். வந்திருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் வலிகாமம் வடக்கிலிருந்த இடம்பெயரந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகத்தினால் யாழில் அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காக முன்னாள் ஜனாதிபதியும் மேற்படி பணியகத்தின் தலைவியுமான சந்திரிகா, யாழுக்கு இன்று (25) வருகை தந்திருந்தார்.

(“‘இரண்டு வருடங்களில் பெருமளவு காணிகள் விடுவிப்பு’” தொடர்ந்து வாசிக்க…)

வெளிவந்துவிட்டது வானவில் 75: மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களுக்கு சரியான தலைமையும் வழிகாட்டலும் அவசியம்

இலங்கையில் இப்பொழுது எங்கு திரும்பினாலும் ஒரே போராட்டமயமாக இருக்கின்றது. முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு மக்கள் நாளாந்தம் போராட்டக்களங்களை நோக்கி அணி வகுத்துச் செல்வதைக் காண முடிகிறது. இலங்கையில் மாத்திரமின்றி, உலகம் முழுவதும் 1960களின் பிற்பகுதியில் ஏற்பட்டது போன்ற மக்கள் எழுச்சி ஒன்றுக்குத் தயாராகி வருவதாகத் தெரிகிறது. கடந்த சில மாதங்களில் நமது அண்டை நாடான இந்தியாவின் தமிழக மாநிலத்தில் ஜல்லிக்கட்டு உரிமைக்கான போராட்டம் (ஜல்லிக்கட்டு பற்றிய எமது கருத்து
வேறாக இருந்தபோதும்), நெடுவாசல் இயற்கை எரிவாயுத் திட்டத்துக்கு எதிரான போராட்டம் என இரண்டு மிகப் பிரமாண்டமான மக்கள் தன்னெழுச்சிப் போராட்டங்கள் நடைபெற்று ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளன. (மேலும்….)

ரஜனி மீது முதலமைச்சர் சீ.வி பாச்சல்!எதிர்ப்பு

வருகின்றார் என்கிற செய்தி வந்ததிலிருந்து அதற்குக் தமிழ் ஆர்வலர்களிடமிருந்து கடும் எதிர்ப்புகளும் விமர்சனங்களும் எழுந்திருந்த நிலையில் அந்த நிகழ்விற்கு வடமாகாண முதலமைச்சரும் தனது எதிர்ப்பினை வெளிக்காட்டி நிகழ்வினை புறக்கணித்துள்ளார் என தெரியவருகின்றது.

(“ரஜனி மீது முதலமைச்சர் சீ.வி பாச்சல்!எதிர்ப்பு” தொடர்ந்து வாசிக்க…)