வெளிவந்துவிட்டது வானவில் 75: மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களுக்கு சரியான தலைமையும் வழிகாட்டலும் அவசியம்

இலங்கையில் இப்பொழுது எங்கு திரும்பினாலும் ஒரே போராட்டமயமாக இருக்கின்றது. முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு மக்கள் நாளாந்தம் போராட்டக்களங்களை நோக்கி அணி வகுத்துச் செல்வதைக் காண முடிகிறது. இலங்கையில் மாத்திரமின்றி, உலகம் முழுவதும் 1960களின் பிற்பகுதியில் ஏற்பட்டது போன்ற மக்கள் எழுச்சி ஒன்றுக்குத் தயாராகி வருவதாகத் தெரிகிறது. கடந்த சில மாதங்களில் நமது அண்டை நாடான இந்தியாவின் தமிழக மாநிலத்தில் ஜல்லிக்கட்டு உரிமைக்கான போராட்டம் (ஜல்லிக்கட்டு பற்றிய எமது கருத்து
வேறாக இருந்தபோதும்), நெடுவாசல் இயற்கை எரிவாயுத் திட்டத்துக்கு எதிரான போராட்டம் என இரண்டு மிகப் பிரமாண்டமான மக்கள் தன்னெழுச்சிப் போராட்டங்கள் நடைபெற்று ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளன. (மேலும்….)