ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிக்கான தூதுவராகிறார் மலாலா யூசுப்!

பாகிஸ்தானைச் சேர்ந்த சிறுமி மலாலா 2012 ம் தலிபான்களினால் தலையில் சுடப்பட்டு உயிருக்குப் போராடிய நிலையில் அவசர அவசரமாக விமானத்தில் இங்கிலாந்துக்குக் கொண்டுவரப்பட்டு சத்திர சிகிச்சை பெற்றுக் குணமானதன் பின்னர் இங்கிலாந்திலேயே தனது குடும்பத்தினருடன் தங்கியிருந்து கல்வி கற்று வருகிறார். இஸ்லாமியப் பெண்கள் கல்வி கற்க வேண்டுமென்ற கோஷத்துடன் போராடிய மலாலா தனக்கெதிரான தலிபான்களின் தாக்குதலின் பின்னர் தனது போராட்டத்தை இங்கிலாந்திலிருந்தபடியே முன்னெடுத்தார்.

(“ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிக்கான தூதுவராகிறார் மலாலா யூசுப்!” தொடர்ந்து வாசிக்க…)

வெருகல் படுகொலை

இன்று வெருகல் படுகொலை நினைவு நாள். கடந்த மாதம் 30ந் திகதி நாம் கந்தன் கருணைப் படுகொலை நினைவு நாளை நினைவு கொண்டு கடந்திருந்தோம். ஈழவிடுதலைப் போராட்டத்தின் பெயரில் விடுதலை இயக்கங்களால் செய்யப்பட்ட கூட்டுப் படுகொலைகளை கணக்கெடுக்க வேண்டிய காலம் இது. இந்தப் படுகொலைகளில்கொ ல்லப்பட்டவர்களது பெயர் விபரங்களை முழுவதுமாகத் திரட்டியே ஆக வேண்டும். இந்தச் சம்பவங்களில் பங்கு பற்றியவர்கள் மற்றும் சம்பவங்களிலிருந்து தப்பியவர்கள் என்று தற்போது எஞ்சியிருப்பவர்கள் மிகவும் குறைவானவர்களே. அவர்களிடமிருந்து கேட்டறிவதற்கும் அவற்றைத் தகுந்த முறையில் பதிவு செய்வதற்கும் இருக்கின்ற நாட்கள் மிக மிகக் குறைவே.

(“வெருகல் படுகொலை” தொடர்ந்து வாசிக்க…)

மத்திய அரசாங்கத்துக்கே பொறுப்பு; நழுவுகிறார் சி.வி

“மீள்குடியேறும் மக்களுக்கு அடிப்படை வசதிகளை உடனடியாக பெற்று கொடுக்க வேண்டியது, அரசாங்கத்தின் கடப்பாடு. அதில் நாம் தான்தோன்றித்தனமாகத் தலையீடு செய்ய இயலாது. அவ்வாறு மத்திய அரசாங்கம் தனது கடப்பாட்டைச் செய்யவில்லை என்பதை, மக்கள் எமக்கு எழுத்துமூலமாகத் தெரியப்படுத்தினால், அது தொடர்பாக மத்திய அரசாங்கத்துடன் பேசி மக்களுக்குரிய உதவிகளை பெற்று கொடுப்பதற்கு, எங்களால் ஆவன செய்ய இயலும்” என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். (“மத்திய அரசாங்கத்துக்கே பொறுப்பு; நழுவுகிறார் சி.வி” தொடர்ந்து வாசிக்க…)

பகடிவதை சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்களுக்கு வகுப்புத் தடை

பகடிவதை சம்பவத்துடன் தொடர்புடைய தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அறிவியல் பீடத்தின் 18 மாணவிகள் உள்ளிட்ட 28 மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.    அறிவியல் பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட இந்த வகுப்புத்தடை, ஏப்ரல் 7ஆம் திகதிமுதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
புதிய மாணவர்களை கடந்த 6ஆம் திகதியன்று பகடிவதைக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில், 18 மாணவிகள் மற்றும் 10 மாணவர்கள், பகடி வதைக்கு பயன்படுத்தப்பட்ட சில உபகரணங்களுடன், பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.

(“பகடிவதை சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்களுக்கு வகுப்புத் தடை” தொடர்ந்து வாசிக்க…)

இந்திய உளவாளிக்கு பாகிஸ்தானில் மரண தண்டனை!

(எஸ். ஹமீத்)

உளவு பார்த்ததாக பிடிபட்ட இந்தியருக்கு பாகிஸ்தானில் மரணதண்டனை விதிப்பு பாகிஸ்தானில் உளவு வேலை பார்த்ததாகக் கைது செய்யப்பட்டிருந்த இந்தியருக்கு இன்று பாகிஸ்தானின் இராணுவ நீதிமன்றம் மரண தண்டனை அளித்துத் தீர்ப்பு வழங்கியுள்ளது.

(“இந்திய உளவாளிக்கு பாகிஸ்தானில் மரண தண்டனை!” தொடர்ந்து வாசிக்க…)

”அமெரிக்காவைக் கதறச் செய்யுங்கள்!” ரஷ்யாவிடம் ஈரான் ஜனாதிபதி வேண்டுகோள்!

(எஸ். ஹமீத்.)

”சிரியாவில் ஜனாதிபதி அசாத்துக்கு எதிராகக் குண்டு வீசிய அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுத்துக் கதறச்செய்யுங்கள். தமது நடவடிக்கைக்காக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும் அமெரிக்காவும் வருந்தக் கூடிய நிலையை ஏற்படுத்துங்கள்.” மேற்கண்டவாறு ரஷ்யப் பிரதமர் விளாதிமிர் புட்டினிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி.

(“”அமெரிக்காவைக் கதறச் செய்யுங்கள்!” ரஷ்யாவிடம் ஈரான் ஜனாதிபதி வேண்டுகோள்!” தொடர்ந்து வாசிக்க…)

Syria: UN Mission Report Confirms that “Opposition” Rebels Used Chemical Weapons against Civilians and Government Forces

(By Carla Stea, Global Research, April 08, 2017)

There is no basis to the Trump Administration’s accusations that the government of Bashar al Assad was involved in deliberately triggering a chemical weapons attack with a view to killing Syrian civilians. This December 2013 article by Global Research’s Correspondent Carla Stea at UN Headquarters confirms that the “Opposition” rebels were in possession of chemical weapons. According to the UN mission report, Syrian soldiers as well as civilians were the target of chemical weapons attacks led by opposition rebels.

(“Syria: UN Mission Report Confirms that “Opposition” Rebels Used Chemical Weapons against Civilians and Government Forces” தொடர்ந்து வாசிக்க…)

ஈக்குவடோர்: இன்னொரு லெனினின் வருகை

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

நாடுகள் அளவில் சிறியதாய் இருந்தாலும் அவற்றில் ஏற்படும் மாற்றங்கள் பிராந்தியத்தையே திரும்பிப் பார்க்க வைத்துவிடும். தன்னளவில் அரசியல் ரீதியான கவனம்பெறுவதற்கு, நாட்டின் நிலப்பிரதேசத்தின் அளவோ சனத்தொகையின் அளவோ முக்கியமல்ல என்பதைப் பல உதாரணங்கள் தொடர்ந்தும் நிறுவியுள்ளன. அரசியலில் ‘அலை’ ஒரு முக்கியமான குறிகாட்டி. குறித்த ஒரு திசைவழியில் அரசியல் அலை வீசத் தொடங்குகின்ற போது, அது நாட்டின் எல்லைகளைக் கடந்து வீசும். அவ்வாறான ஒரு சூழலில் அவ்வலைக்கு எதிராகப் பயணித்தல் மிகக் கடுமையான காரியம். அதைச் செய்ய இயலுமானவர்கள், பல தருணங்களில் உலக அரங்கின் எதிர்காலத்தின் பாதையைச் செதுக்க வல்லவர்கள்.

(“ஈக்குவடோர்: இன்னொரு லெனினின் வருகை” தொடர்ந்து வாசிக்க…)

உணவு விஷமான விவகாரம்: பாதித்தோர் எண்ணிக்கை 1,005ஆக உயர்வு

அம்பாறை, இறக்காமம், வாங்காமம் பிரதேசத்தில் உணவு ஒவ்வாமை காரணமாக சுகவீனம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 1,005ஆக உயர்வடைந்துள்ளது என, வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.    வாங்காமம் பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் கந்தூரி வைபவத்தையிட்டு, கடந்த புதன்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது. இதன்போது, உணவு ஒவ்வாமையால் 950 பேர் பாதிக்கப்பட்டனர். அதில், 3 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மேலும் 55 பேர், வைத்தியசாலைகளில் சனிக்கிழமை (8) இரவு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு பகுதியினர், அம்பாறை பொது வைத்தியசாலையிலும் இன்னுமொரு பகுதியினர், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  தற்போதைய நிலையில், அம்பாறை பொது வைத்தியசாலையில் 18 பேரும், இறக்காமம் பிரதேச வைத்தியசாலையில் 25 பேரும், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் 35 பேரும், மற்றும் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் 27 பேருமென 105 பேர் மட்டுமே, தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதேவேளை, இந்தச் சம்பவத்தையடுத்து, கந்தூரிக்காக சமையல் வேலைகளில் ஈடுபட்டிருந்தவர்களில் சமையற்காரர்கள் இருவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று கைதுசெய்யப்பட்டனர்.