சிம்பாப்வே: ஆபிரிக்காவின் கலகக்காரன்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

உலக அரசியல் அரங்கில் கலகக்காரர்களுக்கு தனியான இடமுண்டு. கலகக்காரர்கள் எல்லோரும் ஓரே இயல்புடையவர்கள் அல்லர். அவர்கள் வாழ்ந்த காலம், இடம், உலகச் சூழல் என்பனவும் அவர்களின் நடத்தையுமே அனைத்தையும் தீர்மானிக்கிறது. கலகக்காரர்களே உலக அரசியல் அரங்கை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள் என்பதைத் துணிந்து சொல்லவியலும். அவர்கள் இல்லாவிடின் ஒற்றைப் பரிமாண உலக அரசியலை சத்தமின்றி ஏற்று நடக்கும் இயல்புடனேயே உலகம் இயங்கிக் கொண்டிருக்கும். ஆனால், உலகம் இப்போது அவ்வாறு இயங்குவதில்லை. அவ்வாறு இயங்குவதையே அதிகார மையங்கள் விரும்புகின்ற போதும் அது சாத்தியமாவதில்லை.

(“சிம்பாப்வே: ஆபிரிக்காவின் கலகக்காரன்” தொடர்ந்து வாசிக்க…)

வெளிவந்துவிட்டது வானவில் 74….: புதிய அரசியலமைப்பு ஜே.ஆரினதை விட மோசமாக இருக்கப் போகிறது!

மாகாண சபைகளை கலைக்க அல்லது அவற்றின் அதிகாரங்களை மீளப்பெற மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது என்ற விடயத்தில்
அரசியலமைப்புச் சபையின் வழிப்படுத்தல் குழு இணக்கம் தெரிவித்திருக்கிறது என அரசியலமைப்புச் சட்டத்தரணியும், ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயம்பதி விக்கிரமரத்ன தெரிவித்திருக்கிறார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய விக்கிரமரத்ன, நாட்டின் ஐக்கியம், ஆட்புல ஒருமைப்பாடு மற்றும்
நாட்டின் சுதந்திரம் என்பனவற்றுக்கு எதிராக செயற்படும் எந்தவொரு
மாகாண சபையையும் கலைப்பதற்கோ அல்லது அதனது அதிகாரங்களை மீளப் பெறுவதற்கோ மத்திய அரசுக்கு அதிகாரம்
அளிக்கும் யோசனையொன்றை புதிய அரசியல் அமைப்பில் உள்ளடக்குவதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். (தொடர்ந்து வாசிக்க….)

தொழில்சாலைகளை திருப்பி அனுப்பி வடமாகாண சபையின் சாதனை!

வடமாகாண சபை இளைஞர் யுவதிகளிற்கான வேலைவாய்ப்பை உருவாக்க கூடிய எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.எந்த ஒரு தொழில்சாலைகளும் உருவாக்கப்படவில்லை வடக்கை நோக்கி வந்த தொழில்சாலைகளையும் என்ன காரணங்களை காட்டி திருப்ப முடியுமோ அவ்வாறான காரணங்களை காட்டி திருப்பியதுதான் மாகாண சபையின் சாதனை. என வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் ச.சுகிர்தன் பகிரங்க குற்றசாட்டை முன் வைத்துள்ளார்.

(“தொழில்சாலைகளை திருப்பி அனுப்பி வடமாகாண சபையின் சாதனை!” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கிலும் கிழக்கிலும் கூட திராவிட மொழிகள்..

இன்றைய The Hindu நாளிதழில் ஒரு செய்தி. மே.வங்க மாநிலத்தின் வட புலத்தில் (Dooars) வசிக்கும் ‘ஓரோய்ன்’ (Oraon) எனும் பழங்குடியினர் பேசுகிற ‘குருக்’ (Kurukh) எனும் மொழியை திருனாமுல் காங்கிரஸ் அரசு மாநில ஆட்சி மொழிகளில் ஒன்றாக அறிவித்துள்ளது. அப்பகுதியில் வாழும் 17 இலட்சம் பழங்குடியினர் அம்மொழியைப் பேசுபவர்களாம். மம்தா அரசு மேற்கொண்டுள்ள இந் நடவடிக்கை அம் மொழியை அழிவின் விளிம்பிலிருந்து காப்பற்றியுள்ளது. பாராட்டுக்கள்.

(“வடக்கிலும் கிழக்கிலும் கூட திராவிட மொழிகள்..” தொடர்ந்து வாசிக்க…)

ஆர்மியோடு சிறியரை சரியாசனம் வைத்த ……நல்லிணக்கம்!!!

கோவிலில பரிவட்டம் கட்டுறதுக்கு ஆர்மியை கூப்பிட்ட அந்த கோயில் நிர்வாகம் திருந்தணும். இல்ல அவங்களுக்குத்தான் அறிவில்ல எண்டு பார்த்தால் , மேடைவழிய ,நேர்சரி விளையாட்டுப்போட்டிகூட மிச்சம்வைக்காமல் கிடைக்கிற மேடையெல்லாம் வாய்கிழிய தேசியம் கதைக்கிற ( கவனிக்க “கதைக்கிர ” மட்டும்) சிறியருக்காவது புத்திவேண்டாம்??
ஆர்மியை கூப்பிட விடாமல் செய்திருக்கணும், இல்ல ஆர்மிக்கு பரிவட்டம் கட்டினால் தான் வரமாட்டன் எண்டு சொல்லி வெளியில நிண்டிருக்கணும். அப்ப்டி வெளியில நிண்டிருந்தால் சனத்துக்கும் ஒரு பாடமாக அமைஞ்சிருக்கும். இனிமேல் இப்படி செய்யாமல் விட்டிருப்பினம். ஆனால் , முன்னுக்கு நிண்டு விலாசம் காட்டணும் எண்டு துடிக்கிற சிறியர் , தான் வெளியில போனால், இன்னொருத்தன் வந்திடுவான் எண்ட பயத்தில ஆர்மியெண்டால் என்ன் எண்டு எங்கட வன்னி மண்ணிலயே அவனோடு சேர்ந்து பரிவட்டம் கட்டி இனத்தை கேவலப்படுத்துறார்.
ஜமீன் டிசைன் அப்படி

11ஆயிரம் புலிகள் இணைந்து இலங்கையில் புதிய தமிழர் கட்சி!

விடுதலைபுலிகள் அமைப்பின் பழைய உறுப்பினர்கள் இணைந்து திரிகோணமலையின் சாம்பூரில் “மறுவாழ்வளிக்கப்பட்ட ஐக்கிய புலிகள் முன்னணி” என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளனர். தமிழர்கள் பெயரில் இயங்கும் பிரதான கட்சிகள் தமிழர்களின் பிரச்சனைகளை கண்டுகொள்ளாததால் மக்கள் விரக்தியடைந்துள்ளதாக புதிய அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. அவர்களுக்கு மாற்று சக்தியாக இந்த கட்சி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். இதில் தற்போது வரை புலிகள் அமைப்பில் இருந்து விலகிய 11 ஆயிரம் பேர் இணைந்துள்ளனர். இந்த அமைப்பின் உதயத்தால் மீண்டும் புலிகள் அமைப்பு உருவாகிவிடுமோ என்ற அச்சத்தில் இலங்கை அரசு உள்ளதாக தி இந்து ஆங்கில இதழ் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

என் தலைக்கு ரூ. 1 கோடி பரிசா? : மிரட்டலுக்கு பயப்படமட்டேன் என்கிறார் பினராயி

கேரள முதல்வர் பினராயி விஜயனின் தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ. 1கோடி பரிசளிக்கப்படும் என ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் பினராயி விஜயன் தலைமையிலான இடது சாரிகளின் ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் பினராயி விஜயன், ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க.-வுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை தெரிவித்தார். இந்நிலையில் மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைனையைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் குந்தன் சந்திரவாத் என்பவர், கேரள முதல்வர் பினராயி விஜயன் தலையை வெட்டி கொண்டு வருபவர்களுக்கு ரூ. 1 கோடி பரிசு அளிக்கப்படும் என்றார். இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து குந்தன் சந்திரவாத் கூறுகையில், நான் தெரிவித்தது என்னுடைய சொந்த கருத்து என்றார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், “சங்பரிவார் அமைப்புகள் ஏற்கனவே பலரது தலைகளை எடுத்துள்ளது. அவர்கள் மிரட்டலுக்கெல்லாம் நான் பயப்படப் போவதில்லை” என்றார்.

பற்குணம் ( பகுதி 113 )

வட கிழக்கு மாகாண ஆளுனர் அவர்களின் அழைப்பை ஏற்று பற்குணம் மீண்டும் மாகாண சபைக்குத் திரும்பினார்.பற்குணத்தின் பாதுகாப்புக்கும் அவரே உத்தரவாதம் அளித்தார். பற்குணம் குடியிருந்த வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் புலிகளின் புலனாய்வுத்துறை அள்ளிச் சென்றுவிட்டது.அவருடைய மகளின் சிறுவயது சம்பாசனைகள் பதிவுசெய்யப்பட்ட ஒலிப்பதிவு நாடாக்கள் கூட புலிகளால் எடுத்துச் செல்லப்பட்டது.எதுவும் மிஞ்சவில்லை.

(“பற்குணம் ( பகுதி 113 )” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் (பகுதி 112 )

நான் 1989 புரட்டாசி மாதம் கனடா வந்துவிட்டேன்.அதன்பின்பாக இலங்கை இந்திய அரசியலில் முறுகல் நிலை தொடங்கியது.புலிகளும் பிரேமதாசாவும் தேன்நிலவு கொண்டாட மாகாண சபை நிலைமை கேள்விக்குறியானது.இந்தியாவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்திய படைகள் வாபஸ் உறுதியானது.

(“பற்குணம் (பகுதி 112 )” தொடர்ந்து வாசிக்க…)

பேரா. சிவசேகரத்தின் அசிங்கம்.

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவில் ஒரு பேரவை உறுப்பினராக சிவசேகரம் தன் தனிப்பட்ட காழ்ப்புணர்வுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக நலன்களை ஒதுக்கி செயற்பட்டுவருவது யாழிலிருந்துவரும் நம்பகரமான செய்திகளாக இருக்கிறது. 2015 சனவரியில் மைத்திரி சனாதிபதியானபின் டக்களசின் கைப்பாவைகளாக இருந்த பேரவை உறுப்பினர்கள் கலைக்கப்பட்டு தமிழரசுக்கட்சி சிபார்சு செய்த பெரும்பாலான படித்த நேர்மையானவர்கள் பேரவை உறுப்பினர்களாக்கப்பட்டார்கள்.

(“பேரா. சிவசேகரத்தின் அசிங்கம்.” தொடர்ந்து வாசிக்க…)