சபதம் புகழ் சசிகலாவும் சயனைட் மல்லிகாவும்!

(எஸ். ஹமீத்)

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை செல்லும் முன்னம் ஜெயலலிதாவின் சமாதியில் ஆக்ரோஷமாகக் கையால் அடித்துச் சபதம் செய்து, அஞ்சா நெஞ்சினளாகத் தன்னைக் காட்டிக் கொண்ட சசிகலாவை, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் நடுநடுங்கச் செய்து கொண்டிருந்தவர் வேறு யாருமல்ல. ஆறு கொலைகளைச் செய்துவிட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் சயனைடு மல்லிகாதான். அதுசரி…யார் இந்தச் சயனைட் மல்லிகா…?

(“சபதம் புகழ் சசிகலாவும் சயனைட் மல்லிகாவும்!” தொடர்ந்து வாசிக்க…)

யாழ் பல்கலைக்கழக துணைவேந்தருக்கான 3 விண்ணப்பதாரிகள்

யாழ் பல்கலைக்கழக துணைவேந்தருக்கான 3 விண்ணப்பதாரிகளாக தெரிவுசெய்யப்பட்டு
சனாதிபதியின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ள 3 வரில் அதிக வாக்குபெற்றவரான சற்குணராசா பின்வரும் காரணங்களால் ஆபத்தானவர்.
1. சிங்களமாணவர் மீதான தாக்குதலுக்கு காரணமானவர்களில் ஒருவர்.
2. சாதிவெறியும் மதவெறியுமுடையவர்.
3. ஊழல் நிறைந்தவர். திறமையான தனதுமாணவர்களை பழிவாங்குபவர். (“யாழ் பல்கலைக்கழக துணைவேந்தருக்கான 3 விண்ணப்பதாரிகள்” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் (பகுதி 109 )

1989 பொது தேர்த்லில் ஈ.பி.ஆர் எல் எப் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து அதன் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது.இந்த தேர்தலில் இவர்களை வெல்ல விடாமல் தடுக்க புலிகள் முடிவு செய்தனர்.எனினும் தோல்வி பயம் காரணமாக தமது ஆதரவாளர்களை களம் இறக்கப் பயந்தனர்.எனவே அவர்களின் பினாமிகளாக ஈரோஸ் அமைப்பை களம் இறக்கினார்கள்.

(“பற்குணம் (பகுதி 109 )” தொடர்ந்து வாசிக்க…)

169 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்ட சாதனை மனிதர் ‘நெல்’ ஜெயராமன்

தமிழகம் முழுவதும் கடந்த 15 ஆண்டுகளாக பயணம் செய்து, 169 அபூர்வ நெல் வகைகளை மீட்டெடுத்த ‘நெல்’ ஜெயராமன், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகிறார். 1,000 ஆண்டுகள் பழமையும், பாரம்பரியமும் கொண்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் வகைகள் நம் முன்னோரிடம் புழக்கத்தில் இருந்ததாகக் கூறப் படுகிறது. காலனி ஆதிக்க காலம் தொடங்கியதில் இருந்து, நமது பாரம்பரிய நெல் வகைகள் படிப் படியாக மறைந்தன. குறிப்பாக கடந்த 50 ஆண்டுகளில் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்ட பசுமைப் புரட்சியால்தான் பாரம்பரிய நெல் ரகங்கள் பெருமளவு அழிந்ததாக சூழலியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

(“169 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்ட சாதனை மனிதர் ‘நெல்’ ஜெயராமன்” தொடர்ந்து வாசிக்க…)

வரலாற்று முரண்- துயர்

உலகம் முழுவதும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களிடம் இருந்து தீவிரமான கண்டனங்கள் எழுந்த காலத்தில1980 களின் நடுப்பகுதி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் எது வித மனக் கிலேசமும் குற்ற உணர்ச்சியும் இன்றி தண்டனை வழங்கியவர் இன்று தமிழர்தலைவர்??
பயங்கரவாத தடைச்சட்டத்தின் மரணித்தவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் கொடூரமான சித்திரவதைகளை அனுபவித்தவர்கள் பெரும்பாலானோர் இலங்கை- இந்தியா உலகம் முழுவதும மனஅழுத்தங்களுடன் வாழ்கிறார்கள். அலைகிறார்கள். மனித உரிமை பற்றிய அவரின் போதனைகளும் ஆரவாரமும் தாங்க முடியவில்லை. , நாடகபாணி கபடத்தனம் என்பதில் பகுத்தறிவுள்ள ஜென்மங்கள் துளியளவு சந்தேகம் கொள்ளமாட்டார்கள். தமிழர் அரசியலும் மனித உரிமையும் அவருக்கு ஓய்வூதியகால பொழுது போக்கு. அவரை தமிழ் கடவுள் முருகனாக துதிக்கும் தமிழர்களின் மூடநம்பிக்கையை என்னென்று அழைப்பது???
“விதியே விதியே தமிழ் சாதியை என்செய நினைத்தாய்”- பாரதி

எண்ணெய் வள நாடான சவூதி அரேபியாவில் கேள்வி குறியாகும் வெளிநாட்டு ஊழியர்களின் எதிர்காலம்?

17 வருடம் தனது குடும்பத்தினருடன் சவூதி அரேபியாவில் வசித்து வந்த டொமினிக் ஸ்டெக் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சொந்த நாடான ஜெர்மனிக்கு திரும்பச் செல்ல இருக்கிறார். ஒரு குடும்பம் தனது சொந்த நாட்டுக்கு திரும்ப போவது ஒரு சாதாரண செய்தியாக கடந்து போய்விட முடியாது. வலுவான சமூக காரணங்களோ அல்லது பொருளாதார காரணங்களோ இல்லாமல் ஒரு இடப் பெயர்வு நடந்தேறி விடாது. ஆனால் செல்வந்தர்கள் வசிக்கும் சவூதி அரேபியாவில் இருந்து இடம்பெயர்ந்தார் என்ற செய்தி கொஞ்சம் யோசிக்க வைத்தது.

(“எண்ணெய் வள நாடான சவூதி அரேபியாவில் கேள்வி குறியாகும் வெளிநாட்டு ஊழியர்களின் எதிர்காலம்?” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் (பகுதி 108 )

ஒரு நாள் என்னைக் காணவந்தார்.நான் ஒரு கார் வாங்கப்போகிறேன்.நீயும் வாறியா எனக் கேட்டார்.நானும் சம்மதித்தேன்.அப்போது கார் யாருக்கு என்றேன்.மாகாண சபைக்கு என்றார்.

(“பற்குணம் (பகுதி 108 )” தொடர்ந்து வாசிக்க…)

கேப்பாப்பிலவு – பிலவுக்குடியிருப்பில் என்ன நடக்கப்போகிறது?”

இதுவே இன்றைய பெரிய கேள்வி. ஏனென்றால் தங்களுக்கான தீர்வு கிடைக்கவில்லை என்றால், அடுத்ததாக படைமுகாம்களாக இருக்கும் காணிகளுக்குள் நுழையப்போவதாக அங்கே போராடிக்கொண்டிருக்கின்ற மக்கள் சொல்லியிருக்கிறார்கள். இதை அவர்கள் செய்யும் நிலையே இன்றுள்ளது. எத்தனை நாட்களுக்குத்தான் அவர்கள் இப்படி வீதியில் இரவும் பகலும் காத்திருக்க முடியும்? ஆனால், அப்படி யாராவது காணிகளுக்குள் நுழைந்தால் அது பெரிய விபரீதமான விளைவுகளை உண்டாக்கும் என்று எச்சரித்திருக்கிறது படைத்தரப்பு.

(“கேப்பாப்பிலவு – பிலவுக்குடியிருப்பில் என்ன நடக்கப்போகிறது?”” தொடர்ந்து வாசிக்க…)

சுவிஸ் நாட்டிலேயே மிகப் பெரிய வழக்கு!! : போலி ஆவணங்கள் மூலம் புலிகளுக்கு 15 மில்லியன் பணம் வசூலித்த 12 தமிழர்கள் நீதிமன்றத்தில் !!

• தமிழர்களை ஏமாற்றி போலி ஆவணங்கள் மூலம் புலிகளுக்குப் 15 மில்லியன் சுவிஸ் பிறாங் பணம் வசூலிப்பு

• சுவிஸ் நாட்டில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (WTCC) கமிட்டியின் 12பேர் சமஷ்டி குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
• சுவிஸ் நாட்டின் மிகப் பெரும் விசாரணையாக இது இருக்குமென கருதப்படுகிறது.
இது ஒரு அசுர முயற்சி என சுவிஸ் பொலீஸ் கூறுகிறது. சுமார் 8 வருட முயற்சியின் பின்னர் பயங்கரவாதிகளுக்குப் பணம் திரட்டியதாக சுவிற்ஸலாந்து உயர் நீதிமன்றத்தில் 13 பேர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதில் 12பேர் தமிழர்கள். ஒருவர் ஜேர்மானியர்.
இலங்கையில் 26 ஆண்டுகளுக்கு மேலான போரில் சுமார் 100,000 உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளன.

(“சுவிஸ் நாட்டிலேயே மிகப் பெரிய வழக்கு!! : போலி ஆவணங்கள் மூலம் புலிகளுக்கு 15 மில்லியன் பணம் வசூலித்த 12 தமிழர்கள் நீதிமன்றத்தில் !!” தொடர்ந்து வாசிக்க…)