என் மாமா…

(கமலாகரன்)

 

ஈழவிடுதலைப் போராட்டம் தந்த ஒப்பற்ற உறவு.
தேசத்தின் அனர்த்தங்கள் விளைவித்த நாசம்… நேசம் துறந்து உறவுகளைப் பிரிந்து தமிழகம் வந்தேன்.
வாராது வந்த மாமணியாய் வந்தாள் என் வாழ்வில் ஒரு சமூகவிடுதலைப் போராளிப் பெண்.
எல்லாம் இழந்த மனோ நிலையில் ஒரு மன நோயாளிபோல் வாழ்ந்து திரிந்த என்னை தன் துணையாய் ஏற்க முன் வந்தாள்.
நான் யார். என் நிலை என்ன என்பது பற்றி எல்லாம் நான் சொல்லாமலே எல்லாம் அறிந்திருந்தாள் முன்கூட்டி என்னைப் பற்றி.
திருமணம் வரை நகர்ந்த எம்முறவில் முதன் முதலில் என் மாமனாரை பார்த்தது என் திருமணத்தன்றுதான்.

(“என் மாமா…” தொடர்ந்து வாசிக்க…)

நம் நடிகர் திலகத்தின் பிறந்த நாள் இன்று 01.10.2016

அற்புதமான நடிகன் என்பதோடு நான் மானசீகமாக அவரை என் நடிப்புக் குருவாகவும் ஏற்றுக் கொண்டவன்.அவர் நினைவை ஒரு கட்டுரையின் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் ஸ்ரனிஸ்லாவ்ஸ்கியும்

இருவருமே நடிப்பு என்று பேசும் போது சாதனை படைத்தவர்கள்.ஒருவகையில் இருவருமே கண்டு பிடிப்பாளர்கள்தான்.லாஸ்கி நடிகனின் மனம் அதன் வழி வரும் முறை நடிப்பு அதற்கான பயிற்சிகள் என அவர் இன்று வரை நடிகர்களுக்கான ஒரு கையேடு.

(“நம் நடிகர் திலகத்தின் பிறந்த நாள் இன்று 01.10.2016” தொடர்ந்து வாசிக்க…)

இது ஒரு பெண் போராளியின் வரலாறு வாக்கு மூலம்…..(பகுதி 1)

(சிவகாமி)

வாழ்வின் பின்னோக்கிய பயணமிது

சிவகாமிக்கு தான் பிறந்த தன் குக்கிராமத்தைப் பற்றி நிறையவே பெருமை தான்.இயற்கையானவளின் அற்புதப் படைத்தலின் கைவண்ணம் அந்தக் கிராமத்தில் நிறையவே உண்டு.அடிப்படை வசதிகள் மிக மிக குறைந்த ஓர் கிராமம் அது. மரங்கள் ,வயல்கள் ,காடுகள், தென்னம் தோப்புகள் ,தோட்டங்கள் ஆறுகள் ,சிறிய குளங்கள் ,கடல் என்று அந்தக் கிராமத்தை சுற்றி அண்டையில் காணப்படும் இயற்கை தந்த கொடை. அதே போல் அங்கு வாழ்ந்த மக்களும் எந்தக் கள்ளம் கபடமுமின்றி தாமும் தம்பாடும் உண்டு என்று வாழ்ந்தார்கள்.

(“இது ஒரு பெண் போராளியின் வரலாறு வாக்கு மூலம்…..(பகுதி 1)” தொடர்ந்து வாசிக்க…)

யாழ்ப்பாணத்தில் சம உரிமை இயக்கம் நடத்தும் கலாசார விழாவில் கலந்து கொண்டபோது…

 

தெற்கிலிருந்து இந்தக் கலாசார விழாவுக்காக லால் ஹாகொட, ரோஹன பொதுலியத்த உள்பட சுமார் பத்துக் கவிஞர்கள் யாழ்ப்பாணம் வந்திருக்கின்றனர். கவிஞர்கள் மட்டுமில்லை, அசோக ஹந்தகம, பிரசன்ன விதானகே, கிங்ரத்னம் போன்ற புகழ்பெற்ற சினிமா இயக்குநர்கள், இசைக்கலைஞர்கள், ஒப்படக்கலைஞர்கள் எனப் பல சமாதான விரும்பிகளும் வந்துள்ளனர். குழந்தைகள், பெண்கள், முதியோர் என ஏறக்குறைய 300 பேருக்கும் மேல்.

(“யாழ்ப்பாணத்தில் சம உரிமை இயக்கம் நடத்தும் கலாசார விழாவில் கலந்து கொண்டபோது…” தொடர்ந்து வாசிக்க…)

எழுக தமிழ் கனடாவில் எழுமா.???

நான் எனது சமுத்துவமற்ற, சகோதரத்துவமற்ற, சமுதாயத்திற்கு என்னென்னவோ சொல்ல முயல்கிறேன். அவை புத்திமதிகள் அல்ல, அவை எச்சரிக்கையுமல்ல, அவற்றால் எந்தப்பயனுமில்லை என்பதை நான் நன்கு அறிவேன். ஆனாலும் நமது மக்கள் நம்மைப் பற்றி அறியவேண்டிய பல உண்மைகள் நிறைய உள்ளன என்பதை ஆணித்தரமாக அடித்துச்சொல்ல ஆசைப்படுகிறேன்..

(“எழுக தமிழ் கனடாவில் எழுமா.???” தொடர்ந்து வாசிக்க…)

நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் அனந்தி சசீதரனிடம் விசாரணை செய்ய உத்தரவு

வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக அவரை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு நீதவான் வியாழனன்று புலனாய்வு பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

(“நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் அனந்தி சசீதரனிடம் விசாரணை செய்ய உத்தரவு” தொடர்ந்து வாசிக்க…)

ஒரு அனுபவப் பகிர்வு: இன்றைய நாள் பத்து வருடங்களுக்கு முன் 30.09.2006

வாழ்வில் எல்லோருக்கும் மறக்க முடியாத நாள் ஒன்றிருக்கும் ஆனால் ஒரு சிலருக்குத்தான் இப்படியான மறக்க முடியாத நாள் வரும். என் வாழ்வு திசை மாறிய நாள்.மரண பயம் என்பதை அறிந்த நாள். என் மகள் சுனாமியில் இறந்தபின் மகன் பிறப்பில் மகிழ்ச்சியயை சுவாசிக்க தொடங்கிய நாட்கள். மட்டக்களப்பில் நடந்த விழா ஒன்றில் பிரதம அதிதியாய் கலந்து சிறப்பித்து விட்டு வீட்டில் மகனோடு இரவு சந்தோசமாக போய்க் கொண்டிருந்தது.வீடு முழுவதும் விருந்தினர்களால் நிறைந்திருந்தது.மூதூரிலிருந்து அகதியாய் வந்த என் உறவினர்கள் நூறுக்கு மேல் தங்கியிருந்தனர்.

(“ஒரு அனுபவப் பகிர்வு: இன்றைய நாள் பத்து வருடங்களுக்கு முன் 30.09.2006” தொடர்ந்து வாசிக்க…)

ஊதிக் கெடுத்தல்

(முகம்மது தம்பி மரைக்கார்)

சும்மா கிடந்த சங்கை, ஊதிக் கெடுக்கும் வேலையினை வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் செய்து வருகிறாரோ எனும், அரசியல் ரீதியான அச்சம் அவ்வப்போது தோன்றுகிறது. விக்னேஸ்வரனின் பேச்சுக்களையும் அரசியல் நடத்தைகளையும் கூர்ந்து அவதானிக்கும் போது, இந்த அச்சம் தவிர்க்க முடியாமல் எழுகிறது.

(“ஊதிக் கெடுத்தல்” தொடர்ந்து வாசிக்க…)

எழுக தமிழ் பேரணி ஏற்படுத்தியுள்ள அரசியல் அதிர்வுகள்

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவையினால், யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட “எழுக தமிழ்” பேரணி, அரசாங்கத்துக்கு நெருக்குதல் ஏற்படுத்தும் நோக்கத்தில் நடத்தப்பட்டு இருந்தால் அந்த நோக்கம் எந்தளவுக்கு நிறைவேறியது என்பதை, எதிர்காலத்தில் தான் பார்க்கக் கூடியதாக இருக்கும்.

(“எழுக தமிழ் பேரணி ஏற்படுத்தியுள்ள அரசியல் அதிர்வுகள்” தொடர்ந்து வாசிக்க…)

தோழர் விசுவானந்ததேவன் நினைவு நூல் வெளிவந்துள்ளது

 

இலங்கை மார்க்சிய – லெனினிசக்கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும், ‘தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி’யின் முக்கிய செயற்பட்டாளரும், ‘தமிழீழத் தேசிய விடுதலை முன்னணி’ (NLFT) ‘தமிழீழ மக்கள் விடுதலை முன்னணி’ (PLFT) என்ற அமைப்புகளை ஸ்தாபித்து வழிநடாத்தியவருமான தோழர் வி.விசுவானந்ததேவன் மறைந்து இவ்வருடம் (15.10.2016) முப்பது ஆண்டுகளாகின்றன.

(“தோழர் விசுவானந்ததேவன் நினைவு நூல் வெளிவந்துள்ளது” தொடர்ந்து வாசிக்க…)