பாடும்மீன்கள் – கனடா 2016

‘மட்டக்களப்பு தமிழகம்’ என அழைக்கப்படும் வெருகல்முதல் பாணமை ஈறாக வாழும் எல்லா ஊர்மக்களும் மகிழ்வுடன் கூடிக் களித்திடும் பாடும்மீன்கள் பொழுது தமது வருடாந்த நிகழ்வினை கடந்த ஆகஸ்ட் 13 – 2016 அன்று கடும் மழைக்கு மத்தியிலும் வெகுசிறப்புடன் உற்சாகமாகக் கூடிக் கொண்டாடினர். தொடர்ச்சியாக இந்நிகழ்வினை தவறாது ஒழுங்கு செய்து நடத்தும் குழுவினர்களின் ஒன்றுபட்ட கூட்டான முயற்சியே இந்த வெற்றி.

(“பாடும்மீன்கள் – கனடா 2016” தொடர்ந்து வாசிக்க…)

ஐ.நாவிலிருந்து விலகுவதாக பிலிப்பைன்ஸ் எச்சரிக்கை

பிலிப்பைன்ஸின் உள்விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் தலையிடுவதாக மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ள பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி றொட்ரிகோ டுட்டேர்ட்டே, ஐக்கிய நாடுகளிலிருந்து விலகுவதைப் பற்றிச் சிந்திக்க வேண்டியேற்படும் என எச்சரித்துள்ளார்.

(“ஐ.நாவிலிருந்து விலகுவதாக பிலிப்பைன்ஸ் எச்சரிக்கை” தொடர்ந்து வாசிக்க…)

கடவுச்சீட்டுத் திணைக்களம் இடமாறுகிறது

மக்கள் நலன் கருதி, வினைத்திறனுடன் கூடிய செயற்பாட்டினை முன்னெடுத்துச் செல்லும் பொருட்டு, குடிவரவு – குடியகழ்வுத் திணைக்களம், பத்தரமுல்ல, ‘சுஹுருபாய’ புதிய கட்டத்தொகுதிக்கு, எதிர்வரும் 29ஆம் திகதியிலிருந்து இடமாற்றப்படவுள்ளது. ஆகையால், கொழும்பு -10, ஆனந்த ராஜகருணா மாவத்தை இல: 41 இல், அமைந்துள்ள பிரதான காரியாலம் மற்றும் கண்டி, மாத்தறை, வவுனியா ஆகிய பிரதேச காரியாலயங்கள், எதிர்வரும் 26ஆம் திகதியிலிருந்து மூடப்படும்.

(“கடவுச்சீட்டுத் திணைக்களம் இடமாறுகிறது” தொடர்ந்து வாசிக்க…)

பொய்க் குற்றச்சாட்டுகள்

1980 ஆம் ஆண்டளவில் பருத்தித்துறையில் கமலம் என்கிற பாடசாலை மாணவி அவரின் ஒன்றுவிட்ட அண்ண்ன் துணையுடன் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.இவரது சடலம் ஆனைவிழுந்தான் மணற்காட்டில் புதைக்கப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டது.

(“பொய்க் குற்றச்சாட்டுகள்” தொடர்ந்து வாசிக்க…)

கொழும்பு மாநகர சபையின் புதிய மேயராக ரோஸி?

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஸி சேனநாயக்க, கொழும்பு மாநகர சபையின் புதிய மேயராக நியமனம் செய்வதற்கு பரிந்துரைக்கப்படவுள்ளதாக அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் அலுவலகத்தின் துணைத்தலைவியாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஊடகப்பேச்சாளராகவும் கடமையாற்றி வரும் இவர், ஏ.ஜே.எம். முஸமில்லுக்கு பதிலாக நியமிக்கப்படவுள்ளார்.

(“கொழும்பு மாநகர சபையின் புதிய மேயராக ரோஸி?” தொடர்ந்து வாசிக்க…)

உலகை உருக வைத்த அழுகை!

 

ஒலிம்பிக்கில் முதன் முறையாக ஒரு ஆப்பிரிக்க – அமெரிக்க கறுப்பின நீச்சல் வீராங்கனை, தங்கம் வென்றதோடு, ஒலிம்பிக் சாதனையும் படைத்துள்ளார்.

(“உலகை உருக வைத்த அழுகை!” தொடர்ந்து வாசிக்க…)

மெத்தப் படித்தவர்கள் தலைமையில்! வடக்கு மாகாண சபையின் நிலை? [நீட்சி 4]

இந்திய இராணுவ அதிகாரிகள் எல்லாம் ஆங்கில அறிவு கொண்டவர்கள் என்பதால் எனக்கு தெரியாத ஹிந்தியில் மாரடிக்கவேண்டிய நிலை ஏற்ப்படவில்லை. நான் யார், இந்திய தூதரகத்துடனான எனது தொடர்பு பற்றி கூறியபின்பே அமர ஆசனம் தந்தார் அந்த அதிகாரி. ஜோர்ஜ் பற்றி விசாரித்தபோது பல குற்றசாட்டுக்களை அடுக்கினார். அந்த நேரம் புலிகளின் எடுபிடிகள் சில காரியங்களை ஊரில் செய்து பழி எம்மவர் மேல் விழுந்து, இந்திய அமைதிப் படையுடனான எமது உறவை சீர்குலைக்கும் நரித்தனம் புரிந்தனர். அவ்வாறான புலிகள் செய்த நிகழ்வொன்றில் மாட்டிவிடப்பட்டவர் ஜோர்ஜ் என்பதை அவருக்கு விளக்கினேன். சிறிது நேரத்தில் ஜோர்ஜ் இராணுவ ஜீப்பில் அழைத்துவரப்பட்டார். முகம் சிவந்திருந்தது. அப்போது தங்கமகேந்திரனின் தங்கை சாந்தி என்னிடம் ஜோர்ஜை இந்திய அதிகாரி ஒருவர் செருப்பால் அடித்ததாக குற்றம் சாட்டினார்.

(“மெத்தப் படித்தவர்கள் தலைமையில்! வடக்கு மாகாண சபையின் நிலை? [நீட்சி 4]” தொடர்ந்து வாசிக்க…)

பயிரை மேய்ந்த வேலிகள்..(8)

(முறிக்கப்பட்ட கோடாரி காம்புகள்)

புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில வாழ்ந்த மக்களை பொதுவாக பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

1.புலிகள் மற்றும் அவர்களின் நேரடி குடும்பத்தினர்.

2.போராளிகுடும்பத்தினர்.

3.மாவீரர்குடுப்பத்தினர்.

4.புலிகள் அமைப்பில் பல்வேறு பணிகளில் இருந்த பணியாளர்கள்.

5.வியாபாரம் போன்ற தொழில் நிமிர்த்தம் புலிகளுடன் இணக்கமாக செயற்பாடாதோர்.

6.எல்லைப்படை போன்ற அமைப்புகளின் குடுப்பத்தினர்.

7.புலிகளின் புலனாய்வு பிரிவினருடன் தொடர்புகளை வைத்திருந்த்து தகவல்களை சேகரித்து அவர்களுக்கு வழங்கி வந்தவர்கள்.

8.தாம் செய்கின்ற தவறுகளில் இருந்து தப்பித்துக்கொள்ள புலிகளுக்கு ஆதரவாளர்களாக செயற்படுவாதாக தம்மை வெளிப்படுத்திக்கொண்டோர்.

9.புலிகளுடன் எவ்வகையிலும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளவிரும்பாதவர்கள்.

(“பயிரை மேய்ந்த வேலிகள்..(8)” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் A.F.C (பகுதி 60 )

தேர்தல்கள் முடிந்தபின் பற்குணம் பழையபடி கொழும்பில் பணியாற்றினார்.ஆனாலும் சில தேர்தல் சம்பந்தமான வழக்குகள்,காரணமாக நுவரெலியா போய்வருவார்அதுபோலவே உணவுத்திணைக்கள வழக்குகள் காரணமாகவும் அடிக்கடி திருகோணமலை போய்வருவார். ஒரு நாள் தேர்தல் வழக்கு காரணமாக நுவரெலியா போகவேண்டி இருந்தது.வேறு தேவைகள் காரணமாக அதை தள்ளிப்போட்டு வீட்டில் நின்றார்.

(“பற்குணம் A.F.C (பகுதி 60 )” தொடர்ந்து வாசிக்க…)