குஜராத் : மோடி வகை ஆட்சியின் தர்க்க பூர்வமான முடிவு..

காஷ்மீர் மட்டுமல்ல இன்று குஜராத்தும் பற்றி எரிகிறது. வரலாறு காணாத தலித் எழுச்சி இன்று அந்த மாநில முதல்வர் ஆனந்திபென் படேலைக் காவு கொண்டுள்ளது. அவரது பதவி விலகலுக்குப் பின் குஜராத்துக்குப் பொறுப்பேற்க பாஜகவில் எல்லோருக்கும் தயக்கம். அமித் ஷா பெயர் சொல்லப்பட்டவுடன் அவரும் தயாராக இல்லை என உடன் செய்திகள் வெளியாகின்றன. ஒரு பக்கம் படேல்களின் போராட்டம். படேல்கள் அங்கு 17 சதம்; தலித்கள் 7 சதம். காலம் காலமாக படேல்கள் பாஜகவின் ஓட்டு வங்கியாக இருந்தவர்கள். இன்று அவர்களும் பகையாய்ப் போன சூழல்.

(“குஜராத் : மோடி வகை ஆட்சியின் தர்க்க பூர்வமான முடிவு..” தொடர்ந்து வாசிக்க…)

நாம் நிராகரிக்கப்பட்டு விட்டோம், கவனிப்பாரற்று கிடக்க விடப்பட்டுள்ளோம்! – வடக்கு முதலமைச்சர்

(Mithunan )
இன்றைய உலகில் பலர் நாம் நிராகரிக்கப்பட்டு விட்டோம், கவனிப்பார் அற்றுக் கிடக்க விடப்பட்டுள்ளோம், கைவிடப்பட்டுள்ளோம் என்ற ஒரு பாரிய மனச் சுமையை மனதில் சுமக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்து வருகின்றார்கள். குடும்பங்களில் பல காரணங்களால் இப்பேர்ப்பட்டநிலை ஏற்படலாம். ஆனால் சமூக ரீதியாக நாம் அவ்வாறு சிந்திப்பவர்களின் ஏக்கத்தைப் போக்க வேண்டிய ஒரு கடப்பாட்டில் நின்று  கொண்டிருக்கின்றோம். பாதிக்கப்பட்டவர்கள் ஆபத்தான போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களாக இருக்கலாம், போரினால் அங்கவீனர்களாக ஆக்கப்பட்டவர்களாக இருக்கலாம், விசேடதேவைகள் உள்ளவர்களாக இருக்கலாம், இளம் விதவைகளாக இருக்கலாம், குடும்பப் பாரத்தைத் தனியே சுமக்கும் பெண்களாக இருக்கலாம், வயோதிபர்களாக இருக்கலாம், வேறு பல விதங்களில் உடலாலும் மனதாலும் பாதிக்கப்பட்டவர்களாகவும் இருக்கலாம். இவர்கள் யாவரையும் அணைத்துச் சென்று மனதில் அமைதியையும் நிறைவையும் ஏற்படுத்தவே சமூகசேவைகள் திணைக்களம் செயற்பட்டு வருகின்றது.

(“நாம் நிராகரிக்கப்பட்டு விட்டோம், கவனிப்பாரற்று கிடக்க விடப்பட்டுள்ளோம்! – வடக்கு முதலமைச்சர்” தொடர்ந்து வாசிக்க…)

1990 காத்தான்குடி பள்ளி வாசல் படுகொலைகள், பயனடைந்தது யார் ?

விடுதலைப்புலிகள் திட்டவட்டமாக மறுத்தும் இந்த படுகொலைகளுக்கு தங்கள் கண்டனத்தை பதிவு செய்தபோதும் இதனை தமிழீழ விடுதலைப்புலிகளே அரங்கேற்றியதாக இந்நாள் வரையிலும் சிலரால் பரப்புரை செய்யப்படுகிறது. 1980 களின் பிற்பகுதிகளில் தொடங்கி தமிழீழ மண்ணில் நீர் பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருந்த தமிழர் இசுலாமியர் பிரச்சனையை புரிதலில்லாத பரப்புரைகள் மூலம் நிரந்தர பகைமையாக மாற்ற பெரும் பங்களித்தது இந்நிகழ்வு.

(“1990 காத்தான்குடி பள்ளி வாசல் படுகொலைகள், பயனடைந்தது யார் ?” தொடர்ந்து வாசிக்க…)

சீமானும் லீகுவான்யூ உம்

சிங்கப்பூரில் புலிகளின் பெயரை சொல்லி நிதி சேகரித்த நாம் தமிழர் கட்சியினர் நாடுகடத்தப் பட்டனர்! ஆனாலும் அடிமைகளிடம் மானத்தை எதிர்பார்ப்பது மடமைத்தனம். சிங்கப்பூர் சர்வாதிகாரி லீகுவான்யூ மறைந்த நேரம், சீமான் அவரை “தமிழர்களின் நண்பன்” என்று புகழ்ந்து அஞ்சலி செலுத்தினார்.

(“சீமானும் லீகுவான்யூ உம்” தொடர்ந்து வாசிக்க…)

ஆத்ம திருப்தியை மட்டும் தந்த பாத யாத்திரை

அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒன்றிணைந்த எதிர்க் கட்சியின் மஹிந்த ராஜபக்ஷ அணியினர், கடந்த வியாழக்கிழமை பேராதனை கெட்டம்பே விஹாரையிலிருந்து கொழும்புக்கு ஐந்து நாள் பாத யாத்திரை ஒன்றை ஆரம்பித்தனர். பாத யாத்திரை என்னும் போது தமிழ் மக்களில் பெரும்பாலானவர்களுக்கு 1957 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன மேற்கொண்ட பாத யாத்திரையே ஞாபகத்துக்கு வரும்.

(“ஆத்ம திருப்தியை மட்டும் தந்த பாத யாத்திரை” தொடர்ந்து வாசிக்க…)

275 பயணிகளுடன் பயணித்த விமானம் தரையிறங்கும்போது விபத்து

இந்தியாவின் திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்ட எமிரேட்ஸ் எயார்லைன் விமானமொன்று டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் பாதிப்பில்லை, விமானத்தில் பயணித்த 275 பயணிகளும் பாதுகாப்புடன் உள்ளனனர் என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. போயிங் 777 ரக விமானமே தரையிறங்கும் போது தீபற்றி விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானம் தரையிறங்கிய இடத்தைச் சுற்றி புகை மண்டலம் வான்நோக்கி மேலெழுந்துள்ளது.

விடுதலைப் புலிகளின் 103 போராளிகளின் மரணம்: உணமைகளை மறைப்பதற்கான கூட்டுச் சதி?

இலங்கை அரசின் தடுப்பு முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டு ஒரு வகையான பய உணர்வை உருவாக்கி விடுதலை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் போராளிகள் மர்மமான நோய்களினால் மரணமடைவதாக கடந்த சில வாரங்களாகத் தகவல்கள் வெளியாகின்றன. இதற்காக சர்வதேச விசாரணை வேண்டும் என்று மற்றொரு சிலர் அறிக்கை வெளியிட ஆரம்பித்துவிட்டனர்.

(“விடுதலைப் புலிகளின் 103 போராளிகளின் மரணம்: உணமைகளை மறைப்பதற்கான கூட்டுச் சதி?” தொடர்ந்து வாசிக்க…)

விடுதலை புலிகளின் மிக கொடூரமான வரலாற்றுப்பக்கள்.

விடுதலை புலிகளின் மிக கொடூரமான வரலாற்றுப்பக்கங்களை இதே போன்றதொரு ஆகஸ்ட் 3ல் 26வருடங்களுக்கு முன்பு காத்தான்குடி மண்ணில் அவர்களின் துப்பாக்கிகள் எழுதியிருந்தன .மத வழிபாட்டில் ஈ்டு பட்டிருந்த சக மனிதர்களையும் குழந்தைகளையும் மிக குரூரமாக படு கொலை செய்ததனர் புலிகள் இந்த வக்கிர நிகழ்வு தற்செயலான ஒன்றாக பார்த்துவிட முடியாது விடுதலை புலிகளின் வலிந்து பெற்றுக்கொண்ட ஓர் போர் தந்திரம் என்று தான் சொல்ல வேண்டும் ஓர் கட்டுக்கோப்பான அமைப்பாக இருந்த புலிகள் தலமையின் உத்தரவை பெறாமல் இந்த மிலேச்சதனமான தாக்குதலை அவ்வளவு நேர்த்தியாக செய்திருக்க முடியாது .பின் நாட்களில் விடுதலை புலிகள் மிக மோசமான அழிவை (பொது மக்கள் அல்ல) சந்தித்தற்க்கு இந்த குரூரமான சம்பவத்திற்க்கு பின்னர் கணவனை இழந்த மனைவியோ ,தகப்பனை இழந்த பிள்ளைகளோ ,பிள்ளைகளை இழந்த பெற்றோர்களோ இட்ட சாபமாகத்தான் இருக்க வேண்டும்.

(“விடுதலை புலிகளின் மிக கொடூரமான வரலாற்றுப்பக்கள்.” தொடர்ந்து வாசிக்க…)

உங்கள் மீதான மதிப்பை நிர்ணயிப்பது உங்கள் பதவியோ,வசதி வாய்ப்போ அல்ல

காட்டிலிருந்து புலி ஒன்று வழி தவறி ஒரு கம்பெனியின் ஓய்வு அறைக்குள் நுழைந்துவிட்டது. பதட்டத்துடன் இருந்த அந்த புலி அந்த அறையின் இருட்டு மூலையில் பதுங்கிக்கொண்டது. மூன்று நாட்கள் சத்தம் போடாமல் இருந்த புலிக்கு பசி எடுத்தது. நான்காவது நாள்,பசி தாங்க முடியாமல்,ஓய்வு அறைக்குள் தனியாக வந்த ஒருவரை அடித்துச் சாப்பிட்டது.அவர்,அந்த நிறுவனத்தின் அசிஸ்டென்ட் ஜெனரல் மேனேஜர்.அவர் காணாமல் போனது அலுவலகத்தில் யாருக்கும் தெரியாது,யாருமே கண்டு கொள்ளவில்லை.

(“உங்கள் மீதான மதிப்பை நிர்ணயிப்பது உங்கள் பதவியோ,வசதி வாய்ப்போ அல்ல” தொடர்ந்து வாசிக்க…)

சென்னையில் இலங்கை தமிழ் அகதிகள் அமைதி பேரணி

 

தமக்கு இந்தியக் குடியுரிமை வழங்கக் கோரியும், நாடு திரும்ப விரும்புவோருக்கான தண்டப்பணத்தை குறைக்க வேண்டும் என்று கோரியும் சென்னையில் நேற்று இலங்கை தமிழ் அகதிகள் அமைதிப் பேரணி ஒன்றை நடத்தினர்.srilankan-refugee-protest

சுமார் 600 இலங்கைத் தமிழ் அகதிகள் பங்கேற்றிருந்த இந்தப் பேரணியின் முடிவில், தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவொன்றை முதலமைச்சர் பணியகத்தில் கையளித்தனர்.

அந்த மனுவில், தமிழ்நாட்டில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும், முகாம்களுக்கு வெளியே வசிக்கும் அகதிகள் நாடு திரும்பும் போது செலுத்த வேண்டிய தண்டப்பணத்தைக் குறைக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

இந்தப் பேரணியில் பங்கேற்ற ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியின் செயலர் ஞானராஜ்,

‘முகாம்களுக்கு வெளியில் உள்ள அகதிகள் நாடு திரும்பும் போது, இந்தியாவில் தங்கியிருந்த காலம் தொடக்கம் ஆண்டு ஒன்றுக்கு 3600 ரூபாவைத் தண்டப்பணமாகவும், நுழைவிசைவுக் கட்டணமாக 13,500 ரூபாவையும் செலுத்த வேண்டியுள்ளது.

நீண்டகாலமாக இந்தியாவில் தங்கியுள்ளவர்கள் இதற்காக இலட்சக்கணக்கான ரூபாவைச் செலுத்த வேண்டியிருக்கும்.

நாடு திரும்புவதற்கு விரும்பும் பலர், தண்டப்பணம் செலுத்த வசதியில்லாததால், தமிழ்நாட்டிலேயே தங்கியிருக்கின்றனர்” என்று குறிப்பிட்டார்.