நேற்று பிரித்தானியா; இன்று அவுஸ்திரேலியா

(ப. தெய்வீகன்)

பிரித்தானியாவில் ஏற்பட்ட அரசியல் ஸ்திரமற்ற நிலையை தொடர்ந்து உலகெங்கும் பாரிய பொருளாதார அதிர்வுகள் பரவும் என்ற அச்சம் உருவாகியிருக்கிறது. இதன் பின்னணியில், அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற இரட்டை தேர்தலானது மிகவும் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டது. பிரித்தானிய விடயங்களில் இருந்த முற்றிலும் வேறுபட்ட காரணங்களினால் குழப்பநிலையில் காணப்பட்ட அவுஸ்திரேலியாவின் நாடாளுமன்ற அதிகார சமநிலையை நேர் சீராக்குவதற்காக இந்த தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால், தேர்தல் நடைபெற்று எட்டு நாட்களாக ஒரு முடிவை காணமுடியாமல் தேர்தல் திணைக்களம் திணறிக்கொண்டிருந்தது.

(“நேற்று பிரித்தானியா; இன்று அவுஸ்திரேலியா” தொடர்ந்து வாசிக்க…)

நாமல், முஸம்மில் ஒரே சிறை பிரிவில்

பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால், நேற்றுத் திங்கட்கிழமை (11) முற்பகல் கைது செய்யப்பட்ட, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, வெலிக்கடை சிறைச்சாலையில் ஈ பிரிவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். அதே ஈ பிரிவில், தேசிய சுதந்திர  முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முஸம்மிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். அத்துடன், குறித்த பிரிவில் சுமார் 20 பேர்வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் அனைவருக்கும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

70 மில்லியன் ரூபாயினை தவறாகப் பயன்படுத்தினார் மற்றும் பணச் சலவையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில், பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால், நேற்றுத் திங்கட்கிழமை கைதுசெய்யப்பட்டார். தனது மகனான நாமல் ராஜபக்ஷவை முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ வெலிக்கடை சிறைச்சாலையில் வைத்து நேற்று திங்கட்கிழமை (11) இரவு பார்வையிட்டார்.

கரும்புலிகள் தின [மாறுபட்ட] பார்வை!

கரும்புலிகள் தினம் வருடம் தோறும் நெகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் வேளை, அதனை இகழ்ச்சியுடன் பார்க்கும் நிலையும் இன்றுவரை தொடர்கின்றது. காரணம் ஈழ விடுதலையில் தங்களை ஆகுருதியாக்க தாம் அறிந்த, விரும்பிய போராட்ட இயக்கங்களில் இணைந்த எண்ணற்ற இளம் குருத்துக்கள் பிரபாகரனின் பரநோய்ட் [Paranoid] எனும் மனநோய் காரணமாக அவர் கட்டளைப்படி கொன்று குதறப்பட்டமை. தன்னை சுற்றி இருப்பவரால் கூட தனக்கு ஆபத்து நேரலாம் என்ற அவரின் மனப்பயம் ஏனைய இயக்க போராளிகளையும், அவ்வாறே நோக்கச் செய்தன் விளைவுதான், வடமராச்சி மண்ணில் ஆக்கிரமிப்பு ராணுவம் காலடி பதித்தமை.

(“கரும்புலிகள் தின [மாறுபட்ட] பார்வை!” தொடர்ந்து வாசிக்க…)

வவுனியாவில் நடைபெறவுள்ள, “புளொட்டின்” 27ஆவது வீரமக்கள் தின நிகழ்வுகள்.. (அறிவித்தல்)

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டுதோறும் அனுஷ்டித்துவரும் வீரமக்கள் தினம் எதிர்வரும் 13ம்திகதி புதன்கிழமை முதல் எதிர்வரும் 16ம் திகதி சனிக்கிழமை வரையில் அனுஸ்டிக்கப்படவுள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் உயிர்நீத்த தினமான ஜூலை 13ம்திகதி முதல் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) செயலதிபர் கதிர்காமர் உமாமகேஸ்வரன் அவர்கள் உயிர்நீத்த தினமான ஜூலை 16ம்திகதி வரையிலான காலப்பகுதியை வீரமக்கள் தினமாக “புளொட்” அமைப்பு பிரகடனப்படுத்தி வருடாந்தம் அனுஷ்டித்து வருகின்றது. 27ஆவது வீரமக்கள் தினத்தின் ஆரம்ப நிகழ்வுகளாக எதிர்வரும் 13ஆம் திகதி வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள புளொட் செயலதிபர் அமரர் உமாமகேஸ்வரன் அவர்களின் இல்லத்தில் மௌன அஞ்சலியும், மலரஞ்சலியும் செலுத்தப்படவுள்ளது. இதில் புளொட் முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர். வீரமக்கள் தினத்தின் இறுதிநாளான 16ம்திகதி அன்று செயலதிபர் உமாமகேஸ்வரன் இல்லத்தில் மலரஞ்சலி மற்றும் மௌன அஞ்சலி செலுத்தப்படுவதுடன் அஞ்சலிக் கூட்டமும் இடம்பெறவுள்ளது.

தகவல்.. “புளொட்” ஊடகப்பிரிவு.

தமிழ் கூட்டமைப்பு, ஜே.வி.பி. யுடன் இணைந்து நாட்டை முன்னேற்றுவேன்

திருமலை துறைமுகத்தை அண்மித்து பொருளாதார வலயம்

அம்பாந்தோட்டை துறைமுகத்தை கப்பல்களால் நிரப்புபோம்

மத்தல விமான நிலையத்துக்கு  50 விமானங்கள் வரும்

இந்தியாவுடன்  பொருளாதார உடன்படிக்கை

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி என அனைவரிடமும் இணைந்து நாட்டை முன்னேற்றவே நான் முயற்சிக்கின்றேன் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

(“தமிழ் கூட்டமைப்பு, ஜே.வி.பி. யுடன் இணைந்து நாட்டை முன்னேற்றுவேன்” தொடர்ந்து வாசிக்க…)

சிங்களம் பேசுகின்ற சிற்றூழியர்கள் நியமிக்கப்படுவதனால் பிரச்சினைகள் பல உருவாவகும் : ஆர். துரைரெட்ணடம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சிற்றூழியர் வெற்றிடங்கள் சிங்களம் பேசுகின்ற சிற்றூழியர்கள் நியமிக்கப்படுவதனால் பிரச்சினைகள் பல உருவாவகும் என்பதுடன் நல்லாட்சியை தவறாக வழிநடத்தும் முறையாகவும் அமையும் என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.துரைரெட்ணம் தெரிவித்துள்ளார். மத்திய அரசுக்குப் பகிரங்க வேண்டுகோள் என்ற தலைப்பில் ஜனாதிபதிக்கு இன்றைய தினம் (03) ஆம் திகதி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.துரைரெட்ணம் அனுப்பி வைத்துள்ள அவசரக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

(“சிங்களம் பேசுகின்ற சிற்றூழியர்கள் நியமிக்கப்படுவதனால் பிரச்சினைகள் பல உருவாவகும் : ஆர். துரைரெட்ணடம்” தொடர்ந்து வாசிக்க…)

கிளிநொச்சி நகர அபிவிருத்திக்கு இராணுவ முகாம்களினால் இடையூறு!

கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்திக்கு இராணுவ முகாங்களினால் இடையூறுகள் காணப்படுவதாக யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற கிளிநொச்சி நகர அபிவிருத்தி திட்டம் தொடர்பில் ஆராயும் முகாமைத்துக் குழுவின் கூட்டத்தில் தலைமை வகித்து உரையாற்றியபோதே அவர் இதனைத் கூறியுள்ளார்.

(“கிளிநொச்சி நகர அபிவிருத்திக்கு இராணுவ முகாம்களினால் இடையூறு!” தொடர்ந்து வாசிக்க…)

Lankan ministers respond to UK Tamil diaspora concerns in London

For the first-ever time since the civil war ended, a delegation of Sri Lankan ministers met with the UK Tamil diaspora in a public forum and responded to their concerns in London last week. Deputy Foreign Minister Dr Harsha de Silva and Mrs Rosie Senanayake, Deputy Chief of Staff of the Prime Minister’s Office met with a wide gathering of Tamils at a meeting organized by the Non Resident Tamils of Sri Lanka (NRTSL) at Sangam Hall, Burnt Oak, Edgware, Middlesex.

(“Lankan ministers respond to UK Tamil diaspora concerns in London” தொடர்ந்து வாசிக்க…)

விண்துகள்கள் : ‘நாசா’வின் சக்தி வாய்ந்த ராக்கெட்!

அமெரிக்காவிலுள்ள யூட்டா மாகாணத்தின், புரோமோன்டோரி பாலைவனப் பகுதியில், உலகின் மிகப் பெரிய ராக்கெட் உந்து இயந்திரத்தை, ‘நாசா’ நேற்று வெற்றிகரமாக பரிசோதித்தது. ‘ஆர்பிட்டல் யு.டி.கே.,’ என்ற தனியார் நிறுவனம் இந்த ராக்கெட்டை தயாரித்துள்ளது. கடந்த மார்ச், 2015ல், இதே திட எரிபொருள் ராக்கெட் இயந்திரத்தை வெப்பமூட்டிய நிலையில் வெற்றிகரமாக நாசா சோதித்தது. சமீபத்திய சோதனை மிகவும் குளிரூட்டப்பட்ட நிலையில் நடந்தது. இரு சோதனைகளுமே வெற்றி கரமாக நடந்ததால், இதுவே இறுதி சோதனை. இந்த ராக்கெட் இயந்திரத்திற்கு, 16.33 லட்சம் கிலோ உந்து சக்தி கொண்டது. செப்டம்பர் 2018ல், செவ்வாய் கிரகத்திற்கு ஆளில்லா விண்கலனையும், 2025ல் மனிதர்கள் உள்ள விண்கலனை ஒரு விண்கல்லின் மீது தரையிறக்கவும், பின், 2030ல் செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பவும், மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப இத்தகைய உந்து இயந்திரங்களையே நாசா பயன்படுத்தும்.

மரண அறிவித்தல் இலவசம்.!!!

சூத்திரம் இணையத்தில் மரண அறிவித்தல்கள் இலவசமாகப் பிரசுரிக்கப்படும்.
அறிவித்தல் பக்கத்தைத் தயார் செய்து கீழ் உள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
உறுதிப்படுத்துவதற்காக 3 பேர்களின் தொலைபேசி இலக்கங்களையும் இணைத்து அனுப்பவும். நீங்களாகவே பக்கத்தைத் தயார் செய்து அனுப்பும் பட்சத்தில் எவ்வித கட்டணமும் அறவிடப்படமாட்டாது. அறிவித்தல்கள் தொடர்ந்து 3 நாட்களுக்கு  இடம்பெறும்.
அனுப்ப வேண்டிய முகவரி
sooddram3@gmail.com