ஊடகவியலாளர் ஜமாலின் கொலை: ட்ரம்ப்பின் கைகளில் இரத்தம்

(Gopikrishna Kanagalingam)

ஊடகவியலாளர் ஜமாலின் கொலை தொடர்பில், வெள்ளை மாளிகைக்கு வெளியே அண்மையில் (19) இடம்பெற்ற ஆர்ப்பாட்டமொன்றில், ஜனாதிபதி ட்ரம்ப்பைப் போன்று வேடமிட்ட ஒருவர், கைகளில் இரத்தத்தோடு காணப்படுகிறார். சவூதி அரேபியாவைச் சேர்ந்த ஊடகவியலாளரான ஜமால் கஷோக்ஜி, துருக்கியின் இஸ்தான்புல்லிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்துக்குள் சென்ற பின்னர் காணாமற்போன சர்ச்சை, ஒருவாறு முடிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. ஆனால், ஜமால் கொல்லப்பட்டுவிட்டார் என்ற சோகமான தகவல் மூலமாகத் தான், அதன் முடிவை நோக்கிய பயணம் ஏற்பட்டிருக்கிறது என்பது, கவலைக்குரிய ஒன்றாக அமைந்துவிட்டது.

(“ஊடகவியலாளர் ஜமாலின் கொலை: ட்ரம்ப்பின் கைகளில் இரத்தம்” தொடர்ந்து வாசிக்க…)

பிரான்சிஸ் புக்குயாமா: வரலாறு பழிவாங்கும் போது…..

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

காலம் செய்யும் விந்தையை என்னவென்று சொல்வது? காலம், பொறுத்திருந்து நகைத்துத் திருப்பித் தாக்கும்போது, அதை ஒதுங்கியிருந்து வேடிக்கை பார்ப்பதைத் தவிர, வேறெதையும் செய்ய முடிவதில்லை. தன்னை நகைத்தவர்களுக்கான, உலக இயல்பை ஏளனம் செய்தவர்களுக்கான பதிலை வரலாறு, அதிகாரத்துடன் வழங்கிவிட்டு அமர்ந்திருக்கும்போது, ‘எல்லோரும் வரிசையில வாங்கடா’ என்று அழைப்பது போல் இருக்கிறது. இந்தக் கதை சுவையானது; காலம், சலனமெதுவுமின்றி வரலாற்றை மீள எழுதிச் செல்லும் அழகு, இரசிக்க வைக்கிறது. (“பிரான்சிஸ் புக்குயாமா: வரலாறு பழிவாங்கும் போது…..” தொடர்ந்து வாசிக்க…)

அரசியல் கட்சி ஆரம்பிக்கிறார் சி.வி

அரசியல் கட்சியொன்றை ஆரம்பிக்கப் போவதாகவும் அரசியலில் தொடரப் போவதாகவும் வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். நல்லூர் ஆலய வடக்கு வீதியின் அமைந்துள்ள நடராஜா பரமேஸ்வரி மண்டபத்தில் இன்று இடம்பெற்ற தமிழ் மக்களின் தற்போதய பிரதிநிதித்துவ அரசியலானது மக்கள் பங்களிப்புடன் கூடிய ஒரு அரசியல் பயணமாக மாற்றமடைய வேண்டிய காலகட்டத்திலுள்ளது. இந்த மாற்றத்தை
ஏற்படுத்தும் நோக்கிலும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அடைந்துகொள்வதற்கான வழித்தடம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பிலும் இதில் தமிழ் மக்கள் பேரவையின் வகிபாகம் தொடர்பிலும் சில தீர்மானங்களை மேற்கொள்ளும் மக்கள் ஒன்றுகூடலிலேயே மேற்படி கருத்தை தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவரான சி.வி விக்னேஸ்வரன் வெளிப்படுத்தினார். அந்தவகையில், தமிழ் மக்கள் கூட்டணி என்ற பெயரிலேயே தனது கட்சியை விக்னேஸ்வரன் ஆரம்பித்துள்ளார்.

புதிய அரசியல் யாப்பு வரும் என்ற கற்பனையில் காலத்தை வீணடிக்காமல் -SDPT

பத்திரிகைகளுக்கான அறிக்கை 22-10-2018

புதிய அரசியல் யாப்பு வரும் என்ற கற்பனையில் காலத்தை வீணடிக்காமல் இப்போது இருக்கின்ற மாகாண சபை ஆட்சி முறையை சுயாதீனமும் ஆற்றலும் கொண்டதாக ஆக்குவதே தமிழ் மக்களின் உடனடித் தேவை. 2016ம் ஆண்டுக்குள் அரசியற் தீர்வு கிடைக்கும்! 2017ம் ஆண்டுக்குள் அரசியற் தீர்வு வரும்! பின்னர் தமிழர்களின் பிரச்சினைக்கு 2018ம் ஆண்டுக்குள் முடிவுகள் கிட்டும்! என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரசியற் தீர்வு பற்றி ஆண்டுக்காண்டு மாற்றி மாற்றி ஆரூடம் கூறி சத்தியமளித்தனர்.

(“புதிய அரசியல் யாப்பு வரும் என்ற கற்பனையில் காலத்தை வீணடிக்காமல் -SDPT” தொடர்ந்து வாசிக்க…)

ஒரு முடிவில் பிறிதோர் ஆரம்பம்

(காரை துர்க்கா)

வடக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் இன்றுடன் முடிவுக்கு வரவுள்ளது. கிழக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் ஏற்கெனவே முடிவுக்கு வந்து, கொழும்பு, மத்திய அரசாங்கத்தின் நேரடிப் பிரதிநிதியான ஆளுநரின் ஆட்சி நடைபெற்று வருகின்றது. நாளை தொடக்கம், வடக்கு மாகாணத்திலும் இதே நிலைமை ஆரம்பிக்க உள்ளது.

(“ஒரு முடிவில் பிறிதோர் ஆரம்பம்” தொடர்ந்து வாசிக்க…)

சி.வி. விக்னேஸ்வரன் இன்றைக்குக் கூறப்போவது என்ன?

(புருஜோத்தமன் தங்கமயில்)

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், தமிழ் மக்கள் பேரவை ஆரம்பிக்கப்பட்ட போது, அதைத் தேர்தல் அரசியலுக்கான ஒரு பிரபலமான கருவியாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான தரப்புகள் நம்பின. அப்போது, கூட்டமைப்புக்குள் பெரும் அதிருப்தியோடு அல்லாடிக்கொண்டிருந்த ஈ.பி.ஆர்.எல்.எப், பேரவையைத் தனக்கான புதிய போக்கிடமாகவே பார்த்தது. ஆனாலும், தேர்தல் அரசியலை மய்யப்படுத்திய எதிர்பார்ப்புகளோ, செயற்பாடுகளோ தங்களிடத்தில் இல்லை என்று, பேரவையில் அங்கம் வகிக்கும் கல்வியாளர்களும் வைத்தியர்களும் வெளிப்படுத்தியிருந்தனர். (“சி.வி. விக்னேஸ்வரன் இன்றைக்குக் கூறப்போவது என்ன?” தொடர்ந்து வாசிக்க…)

புல்லுமலை தொழிற்சாலைமுற்றாகக் கைவிடப்பட்டது

மட்டக்களப்பு, பெரிய புல்லுமலையில் நிர்மாணிக்கப்பட்டுவந்த, போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர்த் தொழிற்சாலை நிறுவும் பணிகளை, முற்றாகக் கைவிடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக, நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த ரொமன்சியா லங்கா நிறுவனம் அறிவித்துள்ளது. “தொழிற்சாலை அமைக்கப்படுவதை, குறித்த பிரதேச மக்கள் எதிர்த்தனர். அ​தேபோன்று, தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினர் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். இந்த நிலையில், மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் தொழிற்சாலை அமைப்பதில்லை என எமது நிறுவனம் தீர்மானித்துள்ளது” என, அந்நிறுவனத்தின் நிர்வாகிகளின் ஒருவரான முஹம்மட் அப்துல் ஜெஷீம் தெரிவித்தார்.

(“புல்லுமலை தொழிற்சாலைமுற்றாகக் கைவிடப்பட்டது” தொடர்ந்து வாசிக்க…)

தமிழர் அரசியலில் புதிய கட்சி உருவாக்கமும் தடம்மாறும் தலைமைகளும்

(க. அகரன்)

இன்றைய தமிழ்த் தரப்பு அரசியல் களமானது, பரபரப்புகளை மாத்திரம் கொண்டதாகவும் செயற்றிறன் அற்றிருப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாத நியாயப்படுத்தல்களை முன்வைப்பதாகவுமே உள்ளது. பல்வேறு உரிமைக் கோரிக்கைகளை முன்வைத்த தமிழர்கள், அவற்றைப் பெறுவதற்கான போராட்டத்தில் பெரும் பின்னடைவைச் சந்தித்து வரும் நிலையில், அவர்களால் நம்பிக்கை வைக்கப்பட்ட தரப்புகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள போட்டித்தன்மைகளும் அரசியல் காழ்புணர்ச்சிகளும் பழிவாங்கல்களும் ‘தமிழரின் இழி நிலை’ என்ற வகிபாகத்துக்குக் கொண்டு செல்ல நீண்ட காலம் தேவையில்லை என்பதையே சுட்டிக்காட்டுகின்றன.

(“தமிழர் அரசியலில் புதிய கட்சி உருவாக்கமும் தடம்மாறும் தலைமைகளும்” தொடர்ந்து வாசிக்க…)

‘பாஜகவைவீழத்துவதுஇலக்கு; காங்கிரஸ்கட்சியால்சுயமாகஆட்சிக்குவருவதுகடினம்’: மூத்ததலைவர்சல்மான்குர்ஷித்கருத்து

இப்போதுள்ளசூழலில்காங்கிரஸ்கட்சியால்பொதுத்தேர்தலில்சுயமாகவென்று, ஆட்சிக்குவருவதுகடினம், பாஜகவைவீழ்த்தக்கூட்டணிஎன்பதுஅவசியமானதுஎன்றுகாங்கிரஸ்மூத்ததலைவர்சல்மான்குர்ஷித்பகீர்பேட்டிஅளித்துள்ளார்.
காங்கிரஸ்கட்சியின்மூத்ததலைவர்சல்மான்குர்ஷித்பிடிஐநிறுவனத்துக்குபிரத்தியேகபேட்டிஅளித்துள்ளார். அவர்கூறியிருப்பதாவது:
இன்றுள்ளசூழலில்அனைத்துஎதிர்க்கட்சித்தலைவர்களும்மத்தியில்ஆட்சிமாற்றம்தேவை, பாஜவைகண்டிப்பாகத்துரத்தவேண்டும்என்றவிஷயத்தில்தெளிவாகஇருக்கிறார்கள். தியாகம், ஒத்துழைப்பு, கூட்டணிஉருவாகவிட்டுக்கொடுத்தல்என்றுநீங்கள்இதைஎப்படிவேண்டுமானாலும்எடுத்துக்கொள்ளலாம்காங்கிரஸ்கட்சிதயாராகஇருக்கிறது.
எதிர்க்கட்சிகள்அமைக்கும்கூட்டணிகாங்கிரஸ்கட்சிக்காககண்டிப்பாகஇல்லாமல், மத்தியில்பாஜகஆட்சியைஅகற்றவேண்டும்என்றவிருப்பத்தின்அடிப்படையில்இருக்கவேண்டும்.

(“‘பாஜகவைவீழத்துவதுஇலக்கு; காங்கிரஸ்கட்சியால்சுயமாகஆட்சிக்குவருவதுகடினம்’: மூத்ததலைவர்சல்மான்குர்ஷித்கருத்து” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும்(தொடர் – 13)

(Thiruchchelvam Kathiravelippillai)
திருக்கோணமலை மாவட்டத்தில் 1985 காலப்பகுதியில் தமிழ் விடுதலை இயக்கங்களின் செயற்பாடுகள் அதிகரித்த வண்ணமிருந்தன. அதனைக்கட்டுப்படுத்த வேண்டிய நிலை படையினருக்கு ஏற்பட்டது.  1985.11.17ஆம் நாள் ஆலங்கேணி, ஈச்சந்தீவு, இடிமண் ஆகிய தமிழ் மக்கள் செறிந்து வாழுகின்ற ஊர்களை இலக்கு வைத்து 1000இற்கு மேற்பட்ட படையினர் சுரோஸ் காசிம் தலைமையில் சுற்றிவளைத்தனர். இதுவே படையினரின் முதலாவது பாரிய சுற்றிவளைப்பாகும். காடுகள், கடற்கரை, ஆற்றங்கரை, துறையடி என அனைத்து இடங்களிலும் படையினர் செறிவாகக் குவிக்கப்பட்டனர்.
ஆலங்கேணி, ஈச்சந்தீவு ஆகிய ஊர்களில் வசித்த மக்கள் வாழ்வாதாரத்திற்காக ஆலங்கேணியிலிருந்து 12 கி.மீ.தூரத்திலுள்ள கண்டக்காடு, இறவடிச்சேனை, தளவாய், ஜபார்திடல் ஆகிய இடங்களில் கால்நடை வளர்ப்பிலும் நெற்செய்கையிலும் ஈடுபட்டனர். இவ்விடங்களுக்குச் செல்வதற்கு மூன்று வழிகளை மக்கள் பயன்படுத்தினர். மாவுசாப்பா துறை வழி, கண்டக்காட்டு துறை வழி, உப்பாற்றுத்துறை வழி. உப்பாற்றுத்துறை வழியினை மக்கள் அதிகமாகப் பயன்படுத்தவில்லை.

(“தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும்(தொடர் – 13)” தொடர்ந்து வாசிக்க…)