Jaffna Central Old boys

Pls see amended programs for Old Boys Week from 09th of March to 20th of March. [ we have received lots of proposals and act from that]
Kind regards
N Thamil
** Norway is happy to support all the cost, if we all can put few Volley ball Teams play on evenings, and if anyone can organize Basket Ball also. We are happy to accommodate
[ Flood Light]****

(“Jaffna Central Old boys” தொடர்ந்து வாசிக்க…)

மஹிந்த முகவருக்கு இடமாற்றம்!

மஹிந்த அரசினது முக்கிய முகவராக இருந்து யாழ் தொழில் நுட்பக்கல்லூரியில் செயற்பட்டு வந்த அதன் அதிபர் என். யோகராஜன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அசைக்க முடியாததொரு நபராக முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய முதல் இராணுவ அதிகாரிகள் வரை நெருக்கமாக இருந்து வந்திருந்த யோகராஜன் தேர்தல்களிலும் சுதந்திரக்கட்சி சார்பில் போட்டியிட்டு படுதோல்வியும் அடைந்திருந்தார். இந்நிலையில் தொழில்நுட்பக்கல்லூரியில் இடம்பெற்றதாக கூறப்படும் பல கோடி ஊழல்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் யாழ் தொழில் நுட்ப்பக்கல்லூரி பணிப்பாளர் என். யோகராஜன் இன்று (26) திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் தலைமை அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை இராணுவத்திற்காக தமிழ் இளைஞர் யுவதிகளை இணைக்கும் சதி முயற்சியிலும் இணைந்து செயற்பட்டிருந்த அவர் படையில் கூலித்தொழிலாளிகளாக இணைப்பதற்கான மையமாக தொழில்நுட்பக்கல்லூரியை பயன்படுத்த அனுமதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மகிந்தவின் பாதுகாப்பு அதிகாரியின் தோட்டத்தில்

மகிந்த ராஜபக்சவின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி மேஜர் நெவில் வன்னியாராச்சிக்குச் சொந்தமான தென்னந்தோட்டத்தில், சிறிலங்கா காவல்துறையினர் நிலத்தை தோண்டி தேடுதல் நடத்தி வருகின்றனர். மெதமுலானவில் உள்ள மேஜர் நெவில் வன்னியாராச்சியின் மூன்றரை ஏக்கர் தென்னந்தோட்டத்திலேயே இந்த தேடுதல் நடத்தப்படுகிறது. மண்அகழும் இயந்திரங்களைக் கொண்டு நிலத்தை தோண்டி தேடுதல் நடத்தப்படுகிறது. பணம், நகைகள், ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே இந்த தேடுதல் நடத்தப்படுகிறது. மண் அகழப்படும் பகுதிக்கு எவரும் அனுமதிக்கப்படவில்லை.

மீண்டும் கொழும்பில் சீனக் கடற்படைக் கப்பல்?

சீனக் கடற்படையின் மிகப்பெரிய மருத்துவமனைக் கப்பல் ஒன்று கொழும்புத் துறைமுகத்துக்கு இன்று வந்துள்ளது. சீனக் கடற்படைக் கப்பல் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த போது, சிறிலங்கா கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர். வரும் ஞாயிற்றுக்கிழமை வரையில், சீனக் கடற்படைக் கப்பல் கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கவுள்ளது. சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் 865 என்ற இலக்கமுடைய இந்த மருத்துவமனைக் கப்பல், சுமார் 30 ஆயிரம் தொன் எடை கொண்டதாகும். 14 மருத்துவமனை அலகுகளைக் கொண்ட இந்தக் கப்பலில் உலங்குவானூர்தி தளம், மற்றும் கட்டுப்பாட்டுக் கோபும் என்பனவும் உள்ளன. சிறிலங்காவின் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், சீனக் கடற்படைக் கப்பல்கள் கொழும்புத் துறைமுகம் வருவது இது இரண்டாவது தடவையாகும்.

தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் -மந்துவில்( பகுதி 9)

சாதி வெறியர்கள் ஊருக்குள் புகுந்து நடத்த இருந்த திட்டம் தோற்றது.ஆனால் எமது பகுதி இளைஞர்கள் அதே வழியை சிந்திக்க தொடங்கினர்.இதே வேளை இதற்கு தலைமை தாங்கும் எதிரிகளை கொல்லும் முடிவுக்கு வந்தனர்.இது தொடர்பாக இரத்தினத்திடம் கேட்க அவர் மறுத்துவிட்டார்.அப்படி செய்வதாயின் ஒரே நாளில் சத்தமின்றி அவர்களை அழிக்கலாம்.நமது நோக்கம் அதுவல்ல.அவரகளை நம் கண் முன்னே பணிய வைக்க வேண்டும்.

(“தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் -மந்துவில்( பகுதி 9)” தொடர்ந்து வாசிக்க…)

வடமாகாண சபையில் கடும் வாய்த்தர்க்கம்! கருத்து மோதல்!

வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கு எதிராக ஆளுங்கட்சி உறுப்பினர்களால் மாகண சபையின் 45ம் அமர்வில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுத் தீர்மானம் தொடர்பான விவாதம் இன்றைய தினம் நடைபெற்ற மாகாண சபையின் 46வது அமர்விலும் தொடர்ந்தது. ஆளுங்கட்சியினருக்கிடையில் சுமார் 2 மணி நேரம் கடுமையான வாய்த்தர்க்கம் மூண்டதுடன், ஆளுங்கட்சி உறுப்பினர்கள் ஒரு பகுதியினர் முதலமைச்சர், அமைச்சருக்கு எதிராகவும், மற்றொரு பகுதியினர் முதலமைச்சர், அமைச்சருக்கு சார்பாகவும் நின்று ஒருவர் மீது ஒருவர் கடுமையான கருத்துக்களை முன்வைத்து மோதிக்கொண்ட நிலையில், 2 மணி நேரத்தின் பின்னர் அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கூறிய கருத்தையடுத்து வாய்த்தர்க்கம் ஒருவாறாக முடிந்தது.

(“வடமாகாண சபையில் கடும் வாய்த்தர்க்கம்! கருத்து மோதல்!” தொடர்ந்து வாசிக்க…)

இந்தியாவின் காலனித்துவ நாடாகும் சிறிலங்கா?!

கலிங்கப் பேரரசின் காலத்தைப் போன்று, மீண்டும் இந்தியாவின் காலனித்துவ நாடாக சிறிலங்கா மாறும் சூழல் ஏற்பட்டுள்ளதாக எச்சரித்துள்ளார் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், “கலிங்க பேரரசின் காலத்தைப் போன்று மீண்டும் இந்தியாவின் காலனித்துவ நாடாக சிறிலங்கா மாறும் சூழல் தோன்றியுள்ளது. அனுமார் பாலம் தொடக்கம் சீபா ஊடாக இந்திய அம்புலன்ஸ் சேவை வரை பல்வேறுபட்ட சிகப்பு சமிக்ஞைகள் ஒளிர்ந்த வண்ணம் உள்ளன. இந்தியாவினால் நியமிக்கப்பட்ட ஆளுநரைப் போன்று எமது நாட்டு அதிபர் மைத்திரிபால சிறிசேனவினதும், முதலமைச்சரைப் போன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின தும் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன.

(“இந்தியாவின் காலனித்துவ நாடாகும் சிறிலங்கா?!” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் பௌத்தர்கள்? தமிழ் பௌத்த பிக்குகள்?

சிறிலங்காவில் தற்போது, 22,254 தமிழ் பௌத்தர்களும், 11 தமிழ் பௌத்த பிக்குகளும் இருப்பதாக, நாடாளுமன்றத்தில் நேற்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரனவின் கேள்வி ஒன்றுக்கு அமைச்சர் கயந்த கருணாதிலக பதிலளித்த போதே இந்த தகவல்களை வெளியிட்டார். தமிழ் பௌத்தர்கள் பற்றிய கணக்கெடுப்பை புத்தசாசன அமைச்சு மேற்கொள்ளாவிடினும், 2012ஆம் ஆண்டு சனத்தொகைக் கணக்கெடுப்பின் மூலம், நாட்டில் , 22,254 தமிழ் பௌத்தர்களும், 11 தமிழ் பௌத்த பிக்குகளும் இருப்பதாக, தெரியவந்துள்ளது. இவர்களில் 470 தமிழ் பௌத்தர்கள் வடக்கில் வாழ்கின்றனர். சிறிநந்தராம என்ற பெயரில் தமிழ் தம்ம பாடசாலை ஒன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அதில் 80 சிறுவர்கள் கல்வி கற்றனர். தற்போது அது செயலிழந்துள்ளது. தம்ம கல்வியை மீண்டும் வழங்குவதற்கு பொருத்தமான நிலத்தை அடையாளம் காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்

அரசியல் தீர்வு முயற்சிகளை குழப்பக் கூடாது! – இரா.சம்பந்தன்

புதிய அரசியலமைப்பின் மூலம் அரசியல் தீர்வு காண்பதற்கான இணக்கப்பாடு காணப்பட்டுள்ள நிலையில், அந்தப் பணிகளை யாரும் குழப்புவதோ அல்லது காலதாமதப்படுத்துவதோ கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், கோரிக்கை விடுத்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு பேரவையாக மாற்றுவது குறித்த பிரேரணை மீது நேற்று இடம்பெற்ற விவாதத்தின் போது, ஆளும்கட்சிக்கும் ஜேவிபி உறுப்பினர்களுக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்டது. இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கருத்து வெளியிடுகையில், “1978 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அரசியலமைப்பை கைவிடவேண்டுமென அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதற்காக நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு பேரவையாக மாற்ற வேண்டும் என்ற வகையில் நாட்டின் நன்மை கருதி அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம். அதில் குழப்பங்களை ஏற்படுத்தாது, தற்போது ஏற்பட்டுள்ள தக்க தருணத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

வாசு­தேவ நாண­யக்­கார எதிர்ப்பு!

புதிய அர­சி­ய­ல­மைப்பின் பிர­காரம் பிர­த­ம­ருக்கு நிறை­வேற்று அதி­காரம் செல் ­வ­தனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. அதற்கு இச்­ச­பையில் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை பலம் கிடைக்­கா­தென பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வாசு­தேவ நாண­யக்­கார தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தை அர­சி­ய­ல­மைப்பு பேர­வை­யாக மாற்­று­வது குறித்த பிரே­ரணை மீதான விவா­தத்தில் நேற்று புதன்­கி­ழமை கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் உரை­யாற்­று­கையில், புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வதா? தற்­போது காணப்­படும் அர­சி­ய­ல­மைப்பில் திருத்­தங்­களை மேற்­கொள்­வதா? என்­பது தொடர்பில் வேறு­பட்ட கருத்­துக்கள் காணப்­ப­டு­கின்­றன. ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சியும் தற்­போது காணப்­படும் அர­சி­ய­ல­மைப்பில் சில மாற்­றங்­களை மேற்­கொள்­வ­தற்கே இணக்­கப்­பா­டு­களை எட்­டி­யி­ருந்­தன.

(“வாசு­தேவ நாண­யக்­கார எதிர்ப்பு!” தொடர்ந்து வாசிக்க…)