யாழ்.அல்லைப்பிட்டியில் கொப்பேகடுவ தலமையிலான படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட 600 இளைஞர்களில் என்னுடைய 3 பிள்ளைகள், என் சகோதரியின் 3 பிள்ளைகள். அவர்களை டக்ளஸ் தேவானந்தா தருவார் என கொப்பேகடுவ கூறினார். அவர்கள் எங்கே? எங்களுடைய பிள்ளைகளை மீட்டுக் கொடுங்கள் என தாயொருவர் வேண்டுகோள் விடுத்தார். மேற்கண்டவாறு திருமதி சூசைதாஸ் யேசுரட்ணம் என்ற தாய் காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஆணைக்குழு முன்னிலையில் இன்று சாட்சியமளித்துள்ளார்.
(“பிள்ளைகளை டக்ளஸ் தருவார் என கொப்பேகடுவ கூறினார்! அவர்கள் எங்கே?!” தொடர்ந்து வாசிக்க…)