இலங்கையை அமெரிக்காவிடம் விற்ற முயலும் ரணில் அரசும் எதிர்கட்சிகளும்

(சாகரன்)

ஜேஆர் காலத்திற்கு பின்பு இலங்கையில் தனக்கு வேண்டி ஒரு ஆளை அமெரிக்கா, இதன் நேச நேட்டோ அமைப்பு நாடுகளினால் இலங்கையில் தலமைப் பொறுப்பில் ஏற்படுத்த முடியவில்லை. கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்தது. இதன் வெளிப்பாடுதான் சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து ஒருவரை முன்னிலைப்படுத்தி இதற்கு கீழ் ரணில் விக்கரமசிங்காவை உருவாக்க ரணிலின்(ஐ.தே. கட்சியின்) 19 வது தோல்விக்கு பின்னரான ஒரு வெற்றியை எற்படுத்திய சூட்சமத்தின் பின்புலம் ஆகும். இதற்கு கொழும்பில் பாவித்த அலுவலகம் சாந்தி சச்சிசானந்தத்தின் அலுவலகம். இயல்பில் சிறீலங்கா சுதந்திரக் கட்சி சீன சார்பு இடதுசாரிக் கட்சிகளின் செல்வாக்கிற்கும் இந்திய ஆதரவு நிலைப்பாட்டையும் உடைய வெளிநாட்டுக் கொள்கையை உடையது.

(“இலங்கையை அமெரிக்காவிடம் விற்ற முயலும் ரணில் அரசும் எதிர்கட்சிகளும்” தொடர்ந்து வாசிக்க…)

யாழில் தோன்றியுள்ள வாள் வெட்டு…. வாய் வெட்டுக் குழுகள்….!

கிறீஸ் பேய் -வாழ்வீச்சுக்காரர்கள் போதை வஸ்து வரை சமூகத்தை சீரழிப்பதற்கென்றே தலை நிமிர்ந்து நிற்பதற்கான சீராக வளர்ச்சி பெறுவதற்கான நிலைமைகளை இல்லாமல்செய்வதற்கான தீய எண்ணம் கொண்ட சக்திகளின் சதியின் அங்கமோ என நியாயமான சந்தேகம் எழுகிறது.

(“யாழில் தோன்றியுள்ள வாள் வெட்டு…. வாய் வெட்டுக் குழுகள்….!” தொடர்ந்து வாசிக்க…)

போராடிய சமூகம் என்று சொல்லப்பட்டதில் கடைசியில் மிச்சம் வெட்டுவாழ்வீச்சு, வெடி துவக்குகளுடன்.

தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வை வென்றெடுப்பது_ இருப்பதை கொண்டு சமூக பொருளாத அபிவிருத்தி என்பதை விட தத்தமது புஜ பல பராக்கிரமத்தை காட்டுவது குடுமிபிடிச் சண்டை கழுத்தறுப்பு என்பனவே தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னணி நிகழ்ச்சி நிரலாக இருந்து கொண்டிருக்கிறது. முதலமைச்சர் சம்பந்தர் அணிகளுக்கிடையிலான சச்சரவு தீவிரமடைந்திருக்கிறது
வடக்கு மாகாண சபையில் ஒரு பிரதி சபாநாயகரை நியமிப்பதற்கே குத்தி முறிகிறார்கள். கூட்டத்தில் கூடி நின்று கூவி பிதற்றல் அன்றி நாட்டத்தில் கொள்ளாத சபையாக சீரழிகிறது. கிழக்கு மாகாண சபையைப் பற்றி பேசவே வேண்டாம். பெரும்பாலான தமிழ்மக்கள் பிரதி நிதிகள் அதிகாரபோதை பதவி சொகுசு ஊழலில் திளைக்கிறார்கள். போராடிய சமூகம் என்று சொல்லப்பட்டதில் கடைசியில் இவை தான் மிச்சம் வெட்டுவாழ்வீச்சு- வெடி துவக்குகளுடன்.

(Sritharan Thirunavukarasu)

தமிழீழ விடுதலைப் புலிகளுக்குள் வல்வெட்டித்துறையின் ஆதிக்கம்….

தமிழீழ விடுதலைப் புலிகளுக்குள் வல்வெட்டித்துறையின் ஆதிக்கம் தொடர்பாக யூலை 7 2009இல் எழுதப்பட்ட VVT Eஆக மாறும் LTTE என்ற கட்டுரையில் இருந்து சில பகுதிகள்:

(“தமிழீழ விடுதலைப் புலிகளுக்குள் வல்வெட்டித்துறையின் ஆதிக்கம்….” தொடர்ந்து வாசிக்க…)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் முடக்கம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அனைத்துச் செயற்பாடுகளையும் முடக்கும் வகையில், இன்றுத் திங்கட்கிழமை (31) பல்கலைக்கழகத்தின் வாயில் கதவுக்கு பூட்டுப் போட்டு, எவரையும் உள்ளே செல்லாதவாறு மாணவர்கள் தடைவிதித்துள்ளனர். இதனால், பல்கலைக்கழக ஊழியர்கள் எவரும் உட்செல்ல முடியாமல் வாயில் கதவில் நிற்கின்றனர்.

(“யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் முடக்கம்” தொடர்ந்து வாசிக்க…)

அறிவு என்பது நம் அறியாமையை நாம் அறிந்துகொள்வதே…

டபிஷ் கேர் பிஹாரில் பிறந்தவர். கவிஞர், புனைவு மற்றும் புனைவு சாரா எழுத்தாளர். முக்கிய நூல்கள் பலவற்றின் ஆசிரியர். டென்மார்க் பல்கலைக்கழகம் ஒன்றில் ஆங்கிலப் பேராசிரியர். அவரது சுவையான, சிந்தனையைத் தூண்டும் கட்டுரை ஒன்று இன்றைய The Hindu நாளிதழில் வந்துள்ளது.

(“அறிவு என்பது நம் அறியாமையை நாம் அறிந்துகொள்வதே…” தொடர்ந்து வாசிக்க…)

எழுப்பபடும் சந்தேகங்கள்

கொக்குவில்லில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பயிலும் இரண்டு மாணவர்கள் மீது காவல்துறையினரால் நிகழ்த்தப்பட்ட சர்ச்சைக்குரிய துப்பாக்கிச் சூடு

(டி.பி.எஸ் ஜெயராஜ்)

பகுதி – 1

கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் யாழ்பபாண பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் இரண்டு இளநிலை பட்டதாரி மாணவர்கள் தங்கள் உயிர்களைப் பலி கொடுத்துள்ளார்கள், காவல்துறையினரால் நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்படும் துப்பாக்கிச் சூடு ஆத்திரமூட்டும் அரசியல் சர்ச்சை எழுவதற்கு காரணமாக அமைந்துள்ளது. ஆரம்பத்தில் அந்த மரணங்கள் ஒரு விபத்து காரணமாக ஏற்பட்டது என்று அறிவிக்கப்பட்டது ஆனால் அதைத் தொடர்ந்து உந்துருளியில் பயணம் செய்த இரண்டு பேருக்கு காவல்துறையினர் நிறுத்தும்படி வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அவர்கள் கீழ்படிய மறுத்ததினால் காவல்துறையினர் அவர்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக பின்னர் தெரிவிக்கப் பட்டது.

(“எழுப்பபடும் சந்தேகங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

நீதிபதி இளஞ்செழியனின் செயற்பாடுகள்…….

(Theepa Pirathy and Saakaran)
யாழ்மக்களின் மனங்களில் நீதித்தேவைதையாக வலம்வந்த யாழ்மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அவர்களை யாழ்பல்கலைக்கழக மாணவர்களின் இருவரினதும் இறப்பிற்கு பின்னர் சில இணையத்தளங்களிலும் முகநூலிலும் வசைபாடுவதை காணமுடிகின்றது.

(“நீதிபதி இளஞ்செழியனின் செயற்பாடுகள்…….” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கைக் குழப்பும் நிகழ்ச்சி நிரல்

(கே சஞ்சயன்)

வடக்கில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் முயற்சிகள், சாண் ஏறினால் முழம் சறுக்குகின்ற கதையாகவே நீண்டு செல்கின்றன. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தையடுத்து, பெரிதும் நம்பிக்கையோடு இருந்த தமிழ் மக்களுக்கு ஏமாற்றங்களும் இழப்புகளும் தான் மிஞ்சி நிற்கின்றன. அரசியல்த் தீர்வு, அரசியல் கைதிகளின் விடுதலை, காணிகள் விடுவிப்பு, படைக்குறைப்பு, மீள்குடியேற்றம், காணாமற்போனோர் பிரச்சினைக்குத் தீர்வு, போர்க்குற்ற விசாரணை என்று தமிழ் மக்கள் ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் எதிர்பார்த்த விடயங்கள் ஏராளம்.

(“வடக்கைக் குழப்பும் நிகழ்ச்சி நிரல்” தொடர்ந்து வாசிக்க…)

கொலைகளுக்கான நியாயமும் கண்டனமும் நீதி கோரலும்

அண்மையில் வடபகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதனைத் தொடர்ந்து பல விதமான அறிவிப்புகள்-செய்திகள்-நடவடிக்கைகள்-ஆய்வுகள்-கண்டனங்கள்-நியாயப்படுத்தல்கள்-ஆறுதல்கள்-உரைகள் என்பன ஊடகப் பரப்பில் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. இதேவிதமான ஒரு சூழல் இற்றைக்கு சுமார் 17 மாதங்களுக்கு முன்னர் (13 மே 2015ல்) மாணவி வித்தியா கொலை சம்பவத்தையொட்டி ஏற்பட்டிருந்தது. அதற்கு இன்று வரை நீதித் தீர்ப்பு கிடைக்கவில்லை. நீதி கிடைக்கக் கூடிய திசையில் அவ் வழக்கு செல்லவதாக தென்படவும் இல்லை.

(“கொலைகளுக்கான நியாயமும் கண்டனமும் நீதி கோரலும்” தொடர்ந்து வாசிக்க…)