தாயோடு கல்வி போயிற்று!

உங்களிடம் ஒரு கேள்வி ஒரு குடும்பத்தில் இன்னின்னார்க்கு இன்னின்ன பொறுப்பு என, வகுக்கத்தலைப்பட்ட நம் மூதாதையர்கள், தாய்க்கும், தந்தைக்கும். என்னென்ன பொறுப்புக்களை வகுத்திருக்கிறார்கள் என்று, உங்களுக்குத் தெரியுமா? ஏன் பிரச்சினை நானே சொல்லிவிடுகிறேன்! அவர்கள் வகுத்த முறையின்படி, பிள்ளைகளை உணவு முதலியவற்றால் காக்கும் பொறுப்பு தாய்க்குரியது. அறிவு தந்து காக்கும் பொறுப்பு தந்தைக்குரியது. இதனைத்தான், ‘தந்தையோடு கல்விபோம். தாயோடு அறுசுவை உண்டி போம்’ என்றும், ‘ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே, சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே’ என்றும், நம் தமிழ் இலக்கியங்கள் பேசின. இங்ஙனம் வகுத்தது ஏன் என்கிறீர்களா? சொல்கிறேன்.

(“தாயோடு கல்வி போயிற்று!” தொடர்ந்து வாசிக்க…)

சான்டர்ஸ், ட்ரம்ப்: புதிய அத்தியாயம்?

இவ்வாண்டு இடம்பெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல், பல்வேறு விதமான சுவாரசியமான விடயங்களைத் தந்துள்ளது, இனியும் தொடர்ந்து தரவுள்ளது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. முன்னைய காலங்களை விட, மாபெரும் மாற்றமொன்றை, அந்த அரசியல் களம் கொண்டிருக்கிறது. கட்சிகளின் வேட்பாளர்களைத் தெரிவுசெய்வதற்காக இடம்பெற்று, நேற்று முடிவுகள் வெளிவந்த நியூ ஹம்ப்ஷையர் முதன்மைத் தேர்தலில், ஜனநாயகக் கட்சி சார்பில் பேர்ணி சான்டர்ஸும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்பும் வெற்றிபெற்றிருக்கிறார்கள். இந்த வெற்றிகள், ஓரளவு எதிர்பார்க்கப்பட்டவை தான் என்றாலும், இவர்களிருவருக்கும் முக்கியமான வெற்றிகளாக அமைந்துள்ளன.

(“சான்டர்ஸ், ட்ரம்ப்: புதிய அத்தியாயம்?” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கை தேசிய இனங்களினதும் சமூகங்களினதும் இணை சம்மேளனமாக அமைய வேண்டும் – சமூக சீராக்கல் இயக்கம்

சிங்களவர், இலங்கை தமிழர், முஸ்லிம்கள் மற்றும் மலையக தமிழர் ஆகிய தேசிய இனங்களினதும் பரங்கியர், மலேயர், ஆதிவாசிகள் சமூகங்களின் இணை- சம்மேளனமாக இலங்கை அமைய வேண்டும் என சமூக சீராக்கல் இயக்கம் புதிய அரசமைப்பு தொடர்பாக யோசனைகளை முன்வைப்பதற்காக நடாத்திய கலந்துரையாடலில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்தியவம்சாவளி தமிழர்களாக தற்போது அரச ஆவணங்களில் அடையாளப்படுத்தப்படும் வரும் மலையக மக்களை, மலையக மக்கள் என அரசப்பினூடாக அங்கீகரிப்பதே அவர்களை தேசிய இனமாக அங்கீகரிப்பற்கு ஏற்ற அடையாளம் எனவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பிரஜைகளுக்கான அடிப்படை உரிமைகள் சிவில் அரசியல், பொருளாதார, சமூக, கலாசார உரிமைகளை மிகவும் விரிவாக உள்ளடக்கி உறுதி செய்யும் அதேவேளை, அவற்றை அனுபவிக்க எவ்வித மட்டுபாடுகளும் இருத்தலாகாது என்றும், அத்தோடு அடிப்படை உரிமைகள் மீறும் போது அதற்கான நிவாரண ஏற்பாடுகள் தனி அத்தியாயமாக அரசமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டும் எனவும் எற்றுக் கொள்ளப்பட்டது. அடிப்படை உரிமைக்கான நீதிமன்ற நிவாரணங்கள் மக்களுக்கு இலகுவில் அணுகும் விதத்தில் அரசமைப்பில் ஏற்பாடு இருக்க வேண்டும் எனவும் அடிப்படை உரிமைகளை விசாரிக்க மாவட்ட ரீதியில் விசேட நீதிமன்ற கட்டமைப்பை ஏற்படுத்தல், மனித உரிமைகள் ஆணைக்குழுவை மக்களுக்கு இலகுவில் அணுகும் விதத்தில் மீளமைத்து அது சட்ட அங்கீகாரம் பெற்ற கட்டளைகளை வழங்கும் அமைப்பாக மாற்றுதல் மற்றும் ஒப்புட்ஸ்மனுக்கு அடிப்படை உரிமைகள் மீறல் தொடர்பாக கட்டளை வழங்க அரசமைப்பில் ஏற்பாடுகள் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

(“இலங்கை தேசிய இனங்களினதும் சமூகங்களினதும் இணை சம்மேளனமாக அமைய வேண்டும் – சமூக சீராக்கல் இயக்கம்” தொடர்ந்து வாசிக்க…)

மிக எளிமையாக வாழ்ந்த உலகின் ஏழை ஜனாதிபதிக்கு பிரியாவிடை கொடுத்து வழியனுப்பிய உருகுவே மக்கள்

 

மிகவும் ஏழை ஜனாதிபதி என்று என்னை அழைக்கின்றார்கள். ஆனால், என்னைப் பொருத்த வரை நான் ஏழை அல்ல. ஆடம்பரமான வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு இன்னும் இன்னும் வேண்டும் என்று அலைகின்றவர்கள்தான் ஏழைகள். ஜனாதிபதி என்றாலே… நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் வாழ்ந்துக் கொண்டு, கோடிக்கணக்கில் அரசு பணத்தை செலவழித்து நாடு நாடாக சுற்றுப்பயணம் செய்பவர் என்பதை நாம் அறிவோம். இந்த இலக்கணத்திற்கு நேர்மாறாகவும் ஓர் ஜனாதிபதி வாழ்கின்றார் என்பது பலருக்கு ஆச்சரியமான தகவலாக இருக்கலாம்.

(“மிக எளிமையாக வாழ்ந்த உலகின் ஏழை ஜனாதிபதிக்கு பிரியாவிடை கொடுத்து வழியனுப்பிய உருகுவே மக்கள்” தொடர்ந்து வாசிக்க…)

பரிசம்’ போட்டுச் சென்றுள்ள சுஷ்மா!!!

இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ்;, கொழும்புக்கு வந்து முக்கியமான சில பேச்சுக்களில் கலந்துகொண்டுவிட்டு நாடு திரும்பியிருக்கிறார். இலங்கையின் கடந்த நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சியாக தோற்றம்பெற்றபோதும் அதன் அதன் தலைவர் இரா.சம்பந்தன், எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டபோதும்கூட, எந்த அசுமாத்தமும் காட்டாமல் இலங்கையின் நகர்வுகளை மதிப்பிட்டுக்கொண்டிருந்த இந்தியா, முதன் முதலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும் நேரடியாக சந்தித்துப் பேசியிருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், கடந்த தடவை ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவரை சந்திக்க கிடைத்த பரந்த வாய்ப்பு போல அல்லாமல், குறுகிய சந்திப்பாக இருந்தாலும்கூட கிடைக்கப்பெற்ற நேரத்தில் முக்கியமான விடயங்களை பேசியுள்ளார்கள் என்று அறியவருகிறது.

(“பரிசம்’ போட்டுச் சென்றுள்ள சுஷ்மா!!!” தொடர்ந்து வாசிக்க…)

சோவியத் யூனியனின் பௌத்த மதக் குடியரசு தன்னு துவா! எங்கே இருக்கிறது?

 

ஆசியாக் கண்டத்தில், ரஷ்யா, மொங்கோலியா நாடுகளுக்கு நடுவில் உள்ளது. 1920 முதல் 1944 வரையில் சுதந்திரமான தனி நாடாக இருந்தது. துவா மொழி பேசும் சைபீரிய பூர்வகுடிகளை பெரும்பான்மையாகக் கொண்டது. அவர்கள் திபெத்திய- பௌத்த மதத்தை பின்பற்றுகிறார்கள்.

தன்னு மலைப் பிராந்தியத்தின் பழங்குடிகளான துவா மக்கள், ஒரு நாடோடி இனமாக வாழ்ந்தவர்கள். நீண்ட காலமாக, சீனா, மஞ்சு, ரஷ்யா ஆகிய சாம்ராஜ்யங்களால் மாறி மாறி ஆளப்பட்டு வந்தது. 1917 ரஷ்யப் புரட்சியை அடுத்து நடந்த உள்நாட்டுப் போரில், போல்ஷெவிக் செம் படைகள், சார் மன்னனுக்கு விசுவாசமான படைகளிடம் இருந்து அந்த நாட்டைக் கைப்பற்றின. லெனினின் நேரடி பணிப்பின் பெயரில், தன்னு துவா ஒரு சுதந்திர நாடாக பிரகடனப்படுத்தப் பட்டது. சோவியத்யூனியனும், மொங்கோலியாவும் ஒரு உடன்படிக்கையின் பிரகாரம் சுதந்திரத்தை அங்கீகரித்தன.

தன்னு துவா ஜனாதிபதி, பௌத்த மதத்திற்கு முக்கிய இடம் கொடுத்து, மொங்கோலியாவுடன் நெருங்கிய உறவுகளை ஏற்படுத்திக் கொண்டார். பௌத்த- துவா தேசியத்தை வளர்த்து வந்தார். அதனால் அதிருப்தியுற்ற துவா கம்யூனிஸ்டுகளின் இரகசிய அமைப்பொன்று, அதிரடிப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து நாட்டின் பெயர் “தன்னு துவா மக்கள் குடியரசு” என்று மாற்றப் பட்டது. நாடோடி சமூக அமைப்பு முடிவுக்கு வந்தது. கம்யூனிச கூட்டுறவுப் பண்ணைகள் உருவாக்கப் பட்டன.

இரண்டாம் உலகப் போரில், தன்னு துவா அரசு சோவியத் யூனியனுக்கு தன்னாலியன்ற சிறியளவு பங்களிப்பை செய்துள்ளது. யுத்தம் முடிவடைந்த பின்னர், தன்னு துவா ரஷ்யாவின் ஒரு பகுதியாகியது. 1992 வரையில், அது ரஷ்யாவுக்குள் அடங்கிய சுயாட்சிப் பிரதேசமாக இருந்தது. இன்று அது ரஷ்யாவின் ஒரு பகுதியாகவே தொடர்ந்தும் இருக்கிறது.

(Tharmalingam Kalaiyarasan)

குடிகளிலாக் கோயில்களும் குருட்டுத்தனங்களும்.

ஊருக்குப்போனாய் ஒன்றுமே சொல்லவில்லையே என்று அங்கலாய்ப்பவர்களுக்கு “என்னத்தைச் சொல்வது ?” என்பதைத் தவிர வேறு எதைச் சொல்லமுடியும். வாய்திறந்தால் வம்பை விலைக்குவாங்குவது உனக்கு இடப்பட்சாபம் என்று சின்ன வயதில் யாரோ சொன்னதும் ஞாபகத்திற்கு வந்துவிடுகிறது.

(“குடிகளிலாக் கோயில்களும் குருட்டுத்தனங்களும்.” தொடர்ந்து வாசிக்க…)

மத்திய கிழக்கில் சீனா: புதிய அரங்காடியின் வருகை

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

அரங்காடிகளின் வருகை, அர்த்தம் பொதிந்தது. வருகையின் காலமும் களமும் அவர்களதும் அரங்கினதும் முக்கியத்தை உணர்த்த வல்லன. அரங்கில் நுழையும் எல்லோருமே அரங்காடிகள்தான் எனினும் சிலரின் வரவு பிறரினதை விட முக்கியமானது. மத்திய கிழக்கு நிலைமைகளை அமைதியாக அவதானித்திருந்த சீனா, இப்போது மத்திய கிழக்கு அலுவல்களிற் செல்வாக்குடைய சக்தியாகியிருப்பது தற்செயலல்ல. எனினும், ஏலவே சிக்கலடைந்த சிரிய நெருக்கடியிற் சீனாவின் ஆர்வம் வியப்பூட்டியுள்ளது. சீனாவைப் பொறுத்த வரை, ஒரு வணிகக் கூட்டாளியாகச் சிரியாவின் முக்கியத்துவம் குறைவு. கடந்தாண்டின் இறுதி நாட்களில் சிரிய வெளியுறவு அமைச்சரின் சீன விஜயம் மிகப் பேசப்பட்டது. அதையடுத்த சிரிய எதிர்க் கட்சிக் கூட்டணியினரின் சீன விஜயம், சிரியா பற்றிச் சீனாவின் வெளிப்படையான அக்கறையை எடுத்துக் காட்டியது. இவ்விரு விஜயங்களும் சிரிய நெருக்கடிக்குத் தீர்வு தேடும் சீன முனைப்பைக் குறிகாட்டின.

(“மத்திய கிழக்கில் சீனா: புதிய அரங்காடியின் வருகை” தொடர்ந்து வாசிக்க…)

விடுதலை விரும்பிகளில் சாவாரி செய்யும் ஒட்டு குழுக்கள்!

தமிழீழ விடுதலை போராட்டவாரலாற்றில்,விசேடமாக ஆயுதபோராட்ட காலத்தில் பாவனைக்கு வந்துள்ள பல சொற்பதங்களில் ஒன்று ‘ஒட்டுக்குழுக்கள்’. இதை ஆங்கிலத்தில் Paramilitary எனகூறுவார்கள். இதனது வரவிலக்கணம் அல்லது அதன் பொருளை ஆராயுமிடத்து சில சங்கடமான விடயங்கள் வெளியாகின்றன. அவற்றை வடக்கு கிழக்கு வாழ் தமிழீழ மக்கள் நன்கு அறிந்திருப்பார்கள் என்பதில் எமக்கு ஐயமுமில்லை. ஆகையால் அதனது விளக்கத்தை மிகவும் சுருக்கமாக தருகிறேன். ஓட்டு குழுக்கள் – கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற அடிப்படை தந்துவங்களுக்கு அப்பால் சுயகௌரவம் அற்று,சந்தர்ப்பவாத வாழ்க்கை நடந்துபவர்கள் என வரவிலக்கணம் சுட்டி காட்டுகிறது. இவர்கள் பணம், பதவி, ஆசை, காமம் ஆகியவற்றிற்கு அடிமையானர்வர்களென அரசியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளார்கள்.

(“விடுதலை விரும்பிகளில் சாவாரி செய்யும் ஒட்டு குழுக்கள்!” தொடர்ந்து வாசிக்க…)

மாணவர்கள் மலசல கூடங்களை கழுவும் அவலம்!!!

 

யாழில் வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, தீவுப் பகுதி வலயத்தின் பல பாடசாலைகளில் மாணவர்களை கொண்டு கையால் எந்தவித பாதுகாப்பு கை உறைகளும் போடாமல் மலசலகூடங்களை கழுவுவிக்கும் அவலம் நடைபெறுகிறது. யாழில் வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, தீவுப் பகுதி வலயக்கல்விப் பணிப்பாளரின் பொறுப்பற்ற தலைமைத்துவத்தை இது எடுத்துக்காட்டுகிறது. சிறுவர் பாதுகாப்பில் இலங்கை அரசு அதிக கவனம் செலுத்தி வருகின்ற இக்கால கட்டத்தில் படித்த மேதைகள் அதிகமாக உள்ள வடமராட்சி பகுதிகளில் மாணவர்களை கொண்டு பாடசாலை கழிவறைகளை துப்பரவு செய்வது கவலைப்பட வேண்டிய செயல்.

(“மாணவர்கள் மலசல கூடங்களை கழுவும் அவலம்!!!” தொடர்ந்து வாசிக்க…)