எண்ணெய் தேடும் பேராசையினால் புவிக்கு வரப் போகின்ற பேராபத்து!

வளைகுடா நாடுகளே எண்ணெய் அகழ்விற்கு மிகவும் உகந்தவையாகத் திகழுகின்றன. இலங்கையின் கடல் எல்லைக்குள் உள்ள மன்னார் வளைகுடாவில் எண்ணெய் வளம் தென்பட்டதாக அறிந்த நாம் பெரும் உவகை அடைந்தோம். முன்னர் பதவிக்கு வந்த அரசுகள் எண்ணெய் அகழ்வுக்கென்று பூர்வாங்க நடவடிக்கையில் ஈடுபட்டதையும் நாமறிவோம். சில வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்களுடன் உடன்படிக்கைகள் கூட கைச்சாத்திடப்பட்டன.

(“எண்ணெய் தேடும் பேராசையினால் புவிக்கு வரப் போகின்ற பேராபத்து!” தொடர்ந்து வாசிக்க…)

சென்னையிலிருந்து வெளியேற்றப்படும் மெட்ராஸ்காரர்கள்.

(தி.ஸ்டாலின்)

சென்னையை நிலைக்குலையவைத்த வெள்ளப்பெருக்குக்குப் பிறகு அதிமுக அரசால் எடுக்கப்படும் முக்கிய நடவடிக்கையாக இருப்பது ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி. சென்னையின் நீர் தளங்களும், நீர்வழித்தடங்களும் ஆக்கிரமிப்புக்குட்பட்டதாலேயே பெரும்பாதிப்பு வந்தது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததும், அறிவுப்பு எதுவுமின்றி செம்பரம்பாக்கம் ஏரியின் நீரை திறந்துவிட்டதுவும் கூட இந்தப் பேரிடருக்கு முக்கியக்காரணங்களாக குற்றச்சாட்டு உண்டு.ஆனால் அதற்கு பொறுப்பேற்க தயாரில்லாத மாநில அரசு, ஆக்கிரமிப்பை முன்னிலைப்படுத்துகிறது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவேண்டும், தவிர்க்கப்படவேண்டுமென்பதில் மாற்றுக்கருத்தில்லை. எந்தவகையான ஆக்கிரமிப்பும் சமூகத்திற்கு எதிரானதுதான். ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் என அடையாளப்படுத்தப்படுபவர்கள் யாவர்? அவர்களை அடையாளப்படுத்துபவர்கள் யாவர்?

(“சென்னையிலிருந்து வெளியேற்றப்படும் மெட்ராஸ்காரர்கள்.” தொடர்ந்து வாசிக்க…)

ஒரு மனிதர்: பன்முக பக்கங்கள்/பார்வைகள்

வாழ்வின் காரணங்களையும் விடைகளையும் தேடி…..

இன்று முக்கியமான நாள்.
இந்தப் பதிவின் முதற் பக்கத்தில் நீங்கள் வாசித்த ஒரு மனிதரின் கடைசிக் கணங்கள் பற்றிய ஒரு பதிவு. இந்த சம்பவம் முள்ளிவாய்காலில் நடந்ததுடன் ஒப்பிடும் பொழுது மிகச் சாதாரணமான ஒரு நிகழ்வே. ஆனாலும் தனிமனித உயிர் என்றளவில் முக்கியமானது என்றால் மறுப்பதற்கில்லை.

இக் கதையில் கொல்லப்பட்டு இறந்தவர் கரவை ஏ.சி. கந்தசாமி (Karavai A.C.Kandasamy).
இன்று அவரது இறந்த நாள் (31.12.1994).
இந்த நாளில் அவரைப் பற்றிய வாழ்க்கை குறிப்பை எழுதுவதற்கான முயற்சியை இங்கு அறிமுகப்படுத்தி ஆரம்பிக்கின்றேன்.

(“ஒரு மனிதர்: பன்முக பக்கங்கள்/பார்வைகள்” தொடர்ந்து வாசிக்க…)

இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கு முற்றிலும் முரணானவர்கள் ஐ. எஸ். பயங்கரவாதிகள்

துருக்கியில் அக்டோபரில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களைக் கொன்றொழித்த பயங்கரவாதிகள் அடுத்து பிரான்ஸில் நவம்பரில் தமது இரத்த வேட்டையை அரங்கேற்றி இருக்கின்றனர். ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் எதிரான கொடூரமான அமைப்பாக உருவெடுத்திருக்கிறது, ஐ.எஸ். உலகம் இன்றைக்கு எப்படி ஐ.எஸ் அமைப்பை அச்சுறுத்தலோடு பார்க்கிறதோ. அதே அச்சுறுத்தலோடும் இன்னும் கூடுதல் சங்கடத்துடனும் பார்க்கிறது இஸ்லாமியச் சமூகம்.

(“இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கு முற்றிலும் முரணானவர்கள் ஐ. எஸ். பயங்கரவாதிகள்” தொடர்ந்து வாசிக்க…)

என்றும் ஆறாத துயர வடுவை பதித்துச் சென்ற சுனாமிப் பேரலை

சோக நினைவின் 11ம் வருட நிறைவு

உலகில் மனிதனினால் வெல்ல முடியாதது அடைய முடியாதது என்று கூறத்தக்கவை எவையும் இல்லை என்பதை காலத்திற்கு ஏற்றால் போல் விஞ்ஞான சமுதாயம் எடுத்துக்கூறி வருகின்றது. விஞ்ஞானத்தையும் உடைத்தெறிக்கூடிய சக்தி பஞ்சபூதங்களுக்கு உண்டு என்பதை அவ்வப்போது இயற்கை எமக்கு காட்டிக்கொண்டுதான் உள்ளது.

(“என்றும் ஆறாத துயர வடுவை பதித்துச் சென்ற சுனாமிப் பேரலை” தொடர்ந்து வாசிக்க…)

ஹிட்லர் எழுதிய சுயசரிதை புத்தகத்தை பள்ளிகளில் பாடமாக கற்க அரசு அனுமதி

ஜேர்மன் நாட்டின் சர்வாதிகாரியான ஹிட்லர் எழுதிய சுயசரிதை புத்தகத்தை பள்ளிகளில் மாணவர்கள் பாடமாக கற்க அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் உலக்ப்போரில் ராணுவ வீரராக பங்கேற்று இரண்டாம் உலகப்போரில் உலகையே அதிர வைத்தார் ஜேர்மன் சர்வாதிகாரியான அடால்ஃப் ஹிட்லர். உண்மையில், இரண்டாம் உலகப்போரின் தாக்குதலால் தான் ஜேர்மனி இரண்டாக உடைந்து கிழக்கு மற்றும் மேற்கு ஜேர்மனியாக உருவெடுத்தது.

(“ஹிட்லர் எழுதிய சுயசரிதை புத்தகத்தை பள்ளிகளில் பாடமாக கற்க அரசு அனுமதி” தொடர்ந்து வாசிக்க…)

காந்தியும் நேருவும் பரம்பரை உறவுக்காரர்களா?

பழிச்சொல் நிறைந்த பாவரங்கில் தன்னை ஒரு கவிஞன் என சுய அறிமுகம் செய்து இந்தியா கைது செய்து இலங்கை அரசிடம் கையளிக்க போன நிலையில் சைனட் வில்லைகளை விழுங்கி 3/10/1987 அன்று உயிரிழந்த குமரப்பா புலேந்திரன் உட்பட்ட பன்னிரு புலிகளின் நினைவுப் பாவரங்கில் , இந்திய வரலாற்றையும் அதன் கர்ணபரம்பரைக் கதைகளையும் கேவலப்படுத்துவது ஒரு புறமிருக்க , நேருவின் பரம்பரையை பற்றி ஏதோ யாரோ எழுதிய கதைகளையும் உண்மையாக்கும் விதத்தில் மந்திர உச்சாடனம் பண்ணுவது போல் அழுத்தமும் ஆவேசமும் கொண்டு பண்ணிப் பண்ணிப் பாவுரைத்தார் புலிப் பாவலன். ஆனால் இந்திய எதிர்ப்பில் நேருவை எதிப்பதில் அவர் காட்டிய முனைப்பில் முஸ்லிம் விரோதம் பட்டவர்த்தனமாக வெளிப்படுவதை நீங்களே இதனை வாசிக்கும் பொழுது அறிந்து கொள்ளலாம்.

(“காந்தியும் நேருவும் பரம்பரை உறவுக்காரர்களா?” தொடர்ந்து வாசிக்க…)

மழை வெள்ளத்தில்….! மக்கள் வெள்ளம்……..!!

(சாகரன்)
1980 களின் நடுப் பகுதியில் தமிழ் நாட்டுப் பெண்கள் TVS 50 ஓடத்தொடங்கிய போது தமது துப்பட்டாவால் தலையை போர்த்தி சிறிதளவு முகத்தையும் மறைந்து செல்வர். தலை குழம்பாமலும் முகத்தி தூசி படிந்து முகத்தின் புத்துணர்சி குறையாமலும் இருக்க இதனை மேற்கொண்டனர். பார்பதற்கு அழகாகவும் இது இருந்தனர் இந்தத் தேவதைகள். தமது அழகிய முகத்தைக் காட்டமாட்டார்களா…? என்ற எதிர்பார்ப்பு பலரிடமும் எகிறிநின்றது. யாரும் மூக்கையும், வாயையும் மறைத்து சுவாசத்தின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தவில்லை. இதனை 2010 வரைக்கும் ஓரளவிற்கு என்னால் அவதானிக்க முடிந்தது.

(“மழை வெள்ளத்தில்….! மக்கள் வெள்ளம்……..!!” தொடர்ந்து வாசிக்க…)

பசி வந்திடப் பத்தும் பறந்திடும் என்பார்கள். ஆனால் ஈலம் டமில்சுக்கு அப்படியல்ல

சென்னையில் வெள்ளம் வந்த போது மக்கள் சாதி மத பேதத்தை மறந்து யார் உணவு கொடுத்தாலும் வாங்கி உண்டார்கள். ஆச்சாரமான பிராமணர்கள் கூட முஸ்லிம்கள் கொடுத்த உணவை வாங்கி உண்டார்கள். ஆனால் தமிழீழம் கேட்ட தமிழர்கள் இந்தியப் படைகளுடன் புலிகள் யுத்தம் செய்த காலத்தில் அகதிகளாக இருந்த இடங்களில் தொண்டர்கள் சமைத்துக் கொடுத்த உணவை மேட்டுக் குடிகள் வாங்கி உண்ண மறுத்து தங்களுக்கு உணவுப் பொருட்களைத் தரும்படியும் தாங்கள் சமைத்து உண்ணுவோம் என்று கேட்டுக் கொண்டார்கள்.

(“பசி வந்திடப் பத்தும் பறந்திடும் என்பார்கள். ஆனால் ஈலம் டமில்சுக்கு அப்படியல்ல” தொடர்ந்து வாசிக்க…)

சோற்றில் கைவைக்கும் நாம் சேற்றில் கால் வைப்போரை காப்போம்!

பட்டு வேட்டி கனவில் இருந்தவன் கட்டி இருந்ததும் களவாடப்பட்டதை போல, நல்லாட்சி அரசில் நாம் சோற்றில் கைவைக்க தாம் சேற்றில் அல்லலுறும் விவசாயிகள் உரமானிய குறைப்பு உட்பட தாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பட்டவர்த்தனமாக காட்ட, சிறு துணி அணிந்து கொழும்பில் நடத்திய போராட்டம் விவசாயத்தை பிரதானமாக கொண்ட நாட்டில் வேண்டப்படாத நிகழ்ச்சி.

(“சோற்றில் கைவைக்கும் நாம் சேற்றில் கால் வைப்போரை காப்போம்!” தொடர்ந்து வாசிக்க…)