அமெரிக்க தேர்தல் முடிவும் காலப் பயணமும்……! ட்றம் இன் வெற்றியும் எதிரொலிக்கும் ஏமாற்றங்களும்….!!

(சாகரன்)

அமெரிக்க தேர்தல் முடிவும் காலப் பயணமும்……! ட்றம் இன் வெற்றியும் எதிரொலிக்கும் ஏமாற்றங்களும்….!!
(விஞ்ஞானத்துடனான அமெரிக்க தேர்தல் பார்வை சலிப்பூட்டினால் மன்னிக்கவும்)

காலப் பயணம் (Time travel) கால இயந்திரம் (Time machine) என்பன தற்போது நடைமுறையில் உள்ள மூன்று பரிமாணத்தில் (முப்பரிமாணம்) இருந்து நான்காவது பரிமாணம் என்ற மாற்றத்தின் அடிப்படையில் உருவான விஞ்ஞான நம்பிக்கைகள் ஆகும். இதில் நீளம்(L), அகலம்(W), உயரம்(H) என்ற முப்பரிமாணத்திற்கு அப்பால் நான்காவது பரிமாணமாக நேரம்(T) (time) இணைக்கப்பட வேண்டும் என்று விஞ்ஞானம் நம்புகின்றது. எமது சூரிய குடும்பத்திற்கு அப்பால் ஏனைய சூரியகக் குடும்பங்களுக்கு செல்லும் போது இந்த நான்காவது பரிமாணத்திற்கு உண்மையான அர்த்தம் உண்டு, ஏன் தேவையும் உண்டு என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

(“அமெரிக்க தேர்தல் முடிவும் காலப் பயணமும்……! ட்றம் இன் வெற்றியும் எதிரொலிக்கும் ஏமாற்றங்களும்….!!” தொடர்ந்து வாசிக்க…)

அமெரிக்கா மட்டுமல்ல அகில உலகமே அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கிறது.

எவன் அமெரிக்க சனாதிபதியாகத் தெரிவாகக்கூடாதென எதிர்பார்த்தார்களோ அவனே தெரிவாகியிருக்கிறான். எவரும் கனவில்கூடக் கண்டிராத பேராதரவுடன்.
ஹிலாரி என்ற அமெரிக்க சூர்ப்பனகைதான் முடிசூடுவாளென எதிர்பார்த்த எல்லார் வாயிலும் மண்ணை அள்ளிப்போட்டு வாயையும் இறுக்கமாய் மூடிவிட்டான் திரம்ப். அரசியல் ஞானசூனியமான இவனால் எப்படி இந்த இமாலய வெற்றியைச் சம்பாதிக்க முடிந்தது?
ஹிலாரி அமெரிக்கர்களின் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் வாக்குறுதிகளை அள்ளி வீசுவதிலும் பார்க்கத் தனது சுயசரிதத்தின் பக்கங்களைப் புரட்டுவதிலேயே அதிகம் அக்கறை காட்டிக்கொண்டாள்.

(“அமெரிக்கா மட்டுமல்ல அகில உலகமே அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கிறது.” தொடர்ந்து வாசிக்க…)

நிக்கரகுவா: அமெரிக்காவிற்கு அருகில் கொண்டாட வேண்டிய தேர்தல் வெற்றி

(சாகரன்)
ஞாயிறு நடைபெற்ற தேர்தலில் 4 வது முறையாக நிக்கரகுவா இன் தலைவராக 70 வீதத்திற்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருக்கின்றார். தொடர்ந்தாற் போல் மூன்று தடவையும் சோசலிசப் புரட்சி மூலம் முதல்தடவையும் நாட்டின் தலைவராக இவர் தெரிவு செய்யப்பட்டவர். இடையில் ஒரு தடவை மட்டும் அமெரிக்க ஆதரவு எதிர் கட்சியிடம் தோற்கடிக்கப்பட்டவர். ஐந்து வருடங்களின் பின்பு நடைபெற்ற அடுத்த தேர்தலில் வென்று இன்றுவரை தொடர்ந்தாற் போல் 4 வது தடவை வெற்றியை தனதாக்கி கொண்டிருக்கும் ஒரே தலைவர். இடதுசாரி அரசை நிறுவி நிறைவான வாழ்வை மக்களுக்கு ஏற்படுத்துவதில் வெற்றிப்பாதையில் நாட்டை நகர்த்திச் செல்கின்றார். தோல்வியை சந்தித்த 5 வருட கால வாழ்வில் பெரும்பாலும் குதிரை ஒன்றில் பயணங்களை மேற்கொண்டு மக்களைத் தொடர்ந்தாற்போல் சந்தித்து வந்தவர். நமது நாடு போலல்லாது இவரை அமெரிக்க சார்பு எதிர் புரட்சியாளர்கள் தமது ஆட்சிக்காலத்தில் கொல்லவில்லை. இதனால் நிக்கரகுவா ஒரு நல்ல மக்கள் தலைவரை இன்றுவரை தனக்குள் கொண்டுள்ளது. அவர்தான் டானியல் ஓடேகா. மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள நிக்கரகுவா அயல்நாடுகளை விட வன்முறை குறைந்த அமைதியான சீரான பொருளாதார வளர்சியைக் கண்டு சிறப்பான வாழ்வை கொண்டு வெற்றி நடைபோடும் இடதுசாரி ஆட்சி முறையைக் கொண்ட நாடு ஆகும். அமெரிக்க தேர்தலை விட இதனை நாம் அதிகம் கொண்டா வேண்டிய தருணம். நிக்கரகுவா வரலாற்றை அறிய வேண்டிய அவசியமும் கூட.
(Nov 09, 2016)

பற்குணம் A.F.C (பகுதி 74 )

பற்குணம் தனது நிர்வாகத்தில் மற்றவர்களை நம்பினாலும் தனது கவனத்தை திசை திரும்பவிடுவதில்லை.அடிக்கடி தனது அலுவலக கணக்குகளையும் தானே பார்ப்பார்.இவ்வாறு ஒரு நாள் மன்னாரில் தனது அலுவலக கணக்குகளை மீளாய்வு செய்தபோது 50000 ரூபா அவரின் பெயரால் எடுக்கப்பட்டதைக் கண்டுபிடித்தார்.

(“பற்குணம் A.F.C (பகுதி 74 )” தொடர்ந்து வாசிக்க…)

அமெரிக்கத் தேர்தலில் வெல்லப் போவது யார்…..?

கடந்த வெள்ளிக் கிழமை Time FM வானொலியில் ‘வெட்ட வெளிச்சம்’ கலந்துரையாடலில் வழமை போல் நானும் கலந்து கொண்டேன். தலைப்பு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் யார் வெல்வார்கள் இவர்ளின் வெற்றியில் எமக்கு ஏற்படும் நன்மை தீமை பற்றி கலந்துரையாடல் நடைபெற்றது எனது ஆதரவு பசுமைக்கட்சிக்கு என்றும் ஆனால் கிலாரி அல்லது ரம்ஸ் இருவரில் ஒருவரே வெல்லக் கூடிய வாய்புக்கள் இருப்பதினால் எனது வெற்றிக்கான எதிர்வு கூறல் கிலாரி கிளிங்ரன் பக்கமே நின்றது. மற்ற மூவரும் ரம்ஸ் பக்கமே நின்றனர் கூடவே ரம்ஸ் இன் வெற்றி கிலாரியின் வெற்றியை விட நன்மை பயக்குமாக அமையும் என்றும் வாதிட்டனர்.

(“அமெரிக்கத் தேர்தலில் வெல்லப் போவது யார்…..?” தொடர்ந்து வாசிக்க…)

யாழ்ப்பாணத்தில் கோலிப் பண்டிகை! தேசியவாதிகள் எங்கே?

இந்திய மேலாதிக்க அதிகாரத்தினதும், அமெரிக்க ஏகாதிபத்திய அணியினதும் அடிமை நாடாக முழுமையான மாற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள இலங்கையில், மக்கள் மத்தியில் கலாசார ஆக்கிரமிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கையை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. ஏற்கனவே நுகர்வுக் கலாசார வெறி போருக்குப் பின்னான சூழலில் மக்களை ஆக்கிரமித்துக்கொள்ள, இந்திய அரசு தனது கலாச்சார ஆக்கிரமிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது.

(“யாழ்ப்பாணத்தில் கோலிப் பண்டிகை! தேசியவாதிகள் எங்கே?” தொடர்ந்து வாசிக்க…)

ஈழம் மாமி கிலாரிக்காக தேங்காய் உடைக்க அனைவரும் வருக – தேங்காய் சிவாஜிலிங்கம்

(விஜயகுமாரன்)
உலக வரலாற்றில் முதன் முதலாக அணுகுண்டு வீசி மக்களைக் கொன்ற கொலைகாரர்கள் அமெரிக்க அரச பயங்கரவாதிகள். ஜப்பான் நாட்டு மக்களின் மீது அணுகுண்டு வீசி இலட்சக்கணக்கான மக்களைக் அமெரிக்க கொலைகாரர்கள் கொன்றார்கள். முதலில் 06.08.1945 அன்று கிரோசிமா நகரின் மீதும் மூன்று நாட்களின் பின்பு நாகசாகி நகரின் மீதும் அணுகுண்டு வீசினார்கள்.

(“ஈழம் மாமி கிலாரிக்காக தேங்காய் உடைக்க அனைவரும் வருக – தேங்காய் சிவாஜிலிங்கம்” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் A.F.C ( பகுதி 73 )

மன்னாரில் பற்குணத்தின் அலுவலகத்தில் ஒரு இளைஞர் வேலை செய்தார்.மிக சுறுசுறுப்பானவர்.இதன் காரணமாக பற்குணம் கொஞ்சம் அவர்மீது அக்கறை கொண்டிருந்தார்.ஆனால் அவர் கொஞ்சம் குடிப்பழக்கம் உள்ளவர்.எனக்கும் அவர் நல்ல அறிமுகம்.நான் மன்னார் செல்லும்போது அவருடனேயே உணவருந்த செல்வேன்.

(“பற்குணம் A.F.C ( பகுதி 73 )” தொடர்ந்து வாசிக்க…)

யாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின் போராட்டம்” தளர்வை நோக்கிச் சரிந்திருப்பதாகத் தெரிகிறது. கடந்த வாரம் கொக்குவில், குளப்பிட்டிச் சந்தியில் வைத்துப் பொலிசாரினால் கொல்லப்பட்ட மாணவர்கள் கஜன், சுலக்ஸன் ஆகியோரின் மரணத்துக்கு நீதியான தீர்வு கிட்டும்வரை பல்கலைக்கழக இயக்கத்தை தவிர்ப்பது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் விடுத்திருந்தனர். இந்த அறிவிப்பு பகிரங்க வெளியில் வந்தபோது பல்கலைக்கழக நிர்வாகமோ, மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகளோ மாற்று அபிப்பிராயங்களையும் மறுப்புகளையும் தெரிவித்திருக்கவில்லை. ஆகவே, “நீதி கிடைக்கும்வரை இயங்கா மறுப்பு நடவடிக்கை“ அநேகமாக வெற்றியடையும் என்றே பொதுவாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த எதிர்பார்ப்புக்கேற்ற மாதிரி, பின்னர் நடந்த நிகழ்ச்சிகள் அமையவில்லை.

(“யாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்” தொடர்ந்து வாசிக்க…)

எல்லா கம்யூனிஸ்டுகளும் யூதர்களின் சேவகர்கள் அல்ல. ஆனால் யூதர்கள் இன்றி கம்யூனிசம் என்ற ஒன்றே அமைந்திருக்காது.

நாம் த‌மிழ‌ர் அல்ல‌து “நாம் நாஸிக‌ள்” க‌ட்சியின‌ரின் க‌ம்யூனிச‌ வெறுப்புப் பிர‌ச்சார‌ம்.‌ இது ஏற்க‌ன‌வே நாஸிக‌ளால் புனைய‌ப் ப‌ட்ட‌ பொய்ப் பிர‌சார‌ம். ப‌ல‌ த‌க‌வ‌ல்க‌ள் விஷ‌ம‌த்த‌ன‌மாக‌ திரிக்க‌ப் ப‌ட்டுள்ள‌ன‌.

(“எல்லா கம்யூனிஸ்டுகளும் யூதர்களின் சேவகர்கள் அல்ல. ஆனால் யூதர்கள் இன்றி கம்யூனிசம் என்ற ஒன்றே அமைந்திருக்காது.” தொடர்ந்து வாசிக்க…)