ஒலுவில் கடற்கரையும் கீரைக்கடை அரசியலும்

கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டுமென்று சொல்வார்கள். ஓர் ஊரில் ஒரேயொரு கீரைக்கடை மட்டுமே இருந்தால் அவரே தனியுரிமை உள்ள வியாபாரியாக இருப்பார். விலையை ஏற்றி விற்றாலும் பழுதடைந்த கீரையையே கொண்டு வந்து தந்தாலும் யாரும் கேட்க முடியாது. ஆனால், அவரது கடைக்கு அருகில் இன்னுமொரு கீரை வியாபாரி கடையைப் போட்டுவிட்டால் நிலைமைகள் மாறிவிடும். போட்டி வியாபாரச் சூழல் என்பதால் குறைந்த விலையில் தரமான பொருட்களை விற்பதற்கு இருவரும் நான் முந்தி, நீ முந்தியென செயற்படுவார்கள். இதனால் வாடிக்கையாளர்களுக்கு நல்லது நடக்கும். ஒலுவில் பிரதேசம் பற்றி எல்லோருக்கும் தெரியும். அம்பாறை மாவட்டத்தின் கரையோரத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தை இரண்டு விடயங்களால் முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ர‡ப் அழகுபடுத்தினார். ஒன்று, தென்கிழக்குப் பல்கலைக்கழகம் மற்றையது, ஒலுவில் துறைமுகம். இவற்றுள் ஒலுவில் துறைமுகம் பல சமூக, புவியியல் எதிர்விளைவுகளை தோற்றுவித்திருக்கின்றது. தலைவர் அஷ்ர‡ப் ஒலுவில் வெளிச்சவீட்டை திறந்து வைத்த போது, உண்மையில் விடயமறியா மக்கள் அதனை துறைமுகம் என்றே பேசிக் கொண்டனர். அதனைப் பார்ப்பதற்கு அயல்; ஊர்களில் இருந்தெல்லாம் மக்கள் இரவுபகலாக வந்து சென்றது ஞாபகமிருக்கின்றது.

(“ஒலுவில் கடற்கரையும் கீரைக்கடை அரசியலும்” தொடர்ந்து வாசிக்க…)

ஜெனீவாவில் இந்தியாவின் நிலை என்ன?

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்தியப் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தருணம் ஒன்றிலேயே இடம்பெற்றிருக்கிறது. ஒரு பக்கத்தில் ஐ.நா விசாரணை அறிக்கை கையளிக்கப்பட்டுள்ள சூழல், இன்னொரு பக்கத்தில், ஜெனீவாவில் அந்த அறிக்கை தொடர்பான விவாதங்கள் நடக்கவுள்ள சூழல், மற்றொரு புறத்தில் இந்த அறிக்கையின் தொடர்ச்சியாக இலங்கை தொடர்பான அடுத்தகட்ட நகர்வு என்ன என்று சர்வதேச சமூகம் தீர்மானிக்கவுள்ள சூழல். இந்தப் பின்னணியில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் புதுடெல்லிப் பயணத்தின் போது, இந்த விவகாரம் குறித்து இந்தியத் தரப்புடனான பேச்சுக்களில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

(“ஜெனீவாவில் இந்தியாவின் நிலை என்ன?” தொடர்ந்து வாசிக்க…)

முதல்வர் விடயம் புகையா ? பனிப்புகாரா ?

(மாதவன் சஞ்சயன்)

வடக்கின் முதல்வர் அடுத்தடுத்து விடும் அறிக்கைகள் சில விடயங்களை கூறாமல் கூறுகிறது. மிகவும் எதிர் பார்க்கையுடன் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் சம்மந்தர் தன் ஆளுமை மூலம் கொண்டுவந்த விக்னேஸ்வரன் பதவி ஏற்பின் போதே ஒற்றுமைக்கு சவாலானார். முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல அவரது தொடர் நடவடிக்கைகள் விமர்சனத்துக்கு வழிவிட்டது. நாளுக்கு நாள் அவர் அன்னியப்பட தொடங்கினார். ஆரம்பத்தில் அவருக்கு அரணாக இருந்தவர்களை கூட விலக செய்யும் செயலை அவர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் செய்தார். தான் சார்ந்த கூட்டமைப்பை அமோக வெற்றி பெற செய்ய வேண்டிய தார்மீக கடமையில் இருந்து அவர் தவறினார். தான் நடுநிலை வகிப்பதாக கூறியது மறைமுகமாக கஜேந்திரகுமாரின் வெற்றியை எதிர்பார்த்தே. கராணம் சுமந்திரன் தோற்க்க வேண்டும் அல்லது வென்றாலும் சும்ந்திரனுக்கு குடைச்சல் கொடுக்க ஒருவர் வேண்டும் என்பதே அவர் விருப்பு.

(“முதல்வர் விடயம் புகையா ? பனிப்புகாரா ?” தொடர்ந்து வாசிக்க…)

முகப்பு புத்தகத்தில் கருத்துப் பரிமாற்றம்…… அனந்தியே ஒரு போர் குற்றவாளி….

நல்லாட்சித் தத்துவம் எனக் கூறிக்கொண்டு சமாதானப் புறாவாக வலம்வருகின்ற முன்னாள் ஜனாதிபதி சந்தி ரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் போர்க் குற்றவாளி தான் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். அனந்தியே ஒரு போர் குற்றவாளி…. – Ratnasingham Annesley
புலிகளுக்கும் ஏனைய விடுதலை அமைப்புக்களுக்கும் இடையே உள்ள பாரிய வேறுபாடு புலிகள் பொது மக்களையும் மாற்றுக் கருத்தாளர்கள் மாற்று விடுதலை விடுதலை அமைப்பினரை தமது இயக்கத்தின் கொள்கையாக பிரகடனப்படுத்தி செயற்படுத்தினர். ஸ்தாபன மயப்படுத்தியே செய்தனர். மற்றைய இயக்கத்தினர் இவற்றை தமது நடைமுறைத்தவறுகளுடூ செய்திருக்கின்றனர்.

(“முகப்பு புத்தகத்தில் கருத்துப் பரிமாற்றம்…… அனந்தியே ஒரு போர் குற்றவாளி….” தொடர்ந்து வாசிக்க…)

90 களின் பின்னர் யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை

உங்கள் வாழ்வில் நீங்கள் உண்ட ஆகச்சிறந்த உணவு எது என்று எப்போதாவது யோசித்துப்பார்த்து இருக்கின்றீர்களா? அந்த உணவை ஆக்கிய முகத்தை உங்களால் நினைவுக்குக் கொண்டுவரக்கூடியதாக உள்ளதா? எப்போதாவது அந்த உணவை ஆக்கியவர்களைத் தேடிச்சென்று பாராட்டுத் தெரிவித்தது உண்டா? பொதுவாக எல்லாருக்கும் எப்போதும் வீட்டுச் சாப்பாடோ, அம்மாக்கள் தயாரித்த உணவுகளோ, மனைவியர் கைப்பக்குவமோ, அரிதான சிலருக்கு தந்தையரின், கணவன்மார்களின், நண்பர்களின் கைப்பக்குவமோ அல்லது வேறும் ஏதோ ஒரு உறவு தயாரித்த உணவுகளோ பிரியமானதாக இருக்கும். இன்னும் சிலருக்கு அதைவிடுத்து நாம் உணவுண்ட சாப்பாட்டுக்கடைகளின், தேநீர்க்கடைகளின், உணவு வண்டிகளின், இனிமையான பொழுதுகளை மீளநினைவூட்டும் குளிர்பானச்சாலைகளோ கூட இந்தக் கேள்விகளுக்குப் பதில்சொல்வதாக அமையக்கூடும்.

(“90 களின் பின்னர் யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை” தொடர்ந்து வாசிக்க…)

வாரம் ஒரு ஆய்வாளர் பகுப்பாய்வு 3: DBS. ஜெயராஜ்.

1999 ம் ஆண்டுDBS Jeyaraj உடன் நான் (நட்சத்திரன் செவ்விந்தியன்) பேசிய நீண்ட தொலைபேசி உரையாடலில் DBS Jeyaraj மனந்திறந்து
பேசினார். புலிகளின் அனைத்துலக பொறுப்பாளராக
லண்டனில் இருந்த கேணல் கிட்டுவிடம் அனுமதிபெற்றே தான்
ராஜீவ் காந்தி கொலைகாரன் ஒற்றைகண் சிவராசன் பற்றிய
Profile விபரங்களை Frontline(The Hindu)இலும் Lanka Guardian இலும் எழுதினார் என்பதை ஒப்புகொண்டதோடு அந்த சனவரியில் கிட்டு
கொல்லப்பட்டபின் திலகர் அனைத்துலக பொறுப்பெடுத்த
பின்னர் பெப்ரவரி காதலர் தினத்திலேயே திலகரின் மிரட்டல்களுக்கு பிறகே தான் தாக்கப்பட்டதை ஒப்புவித்தார்.

(“வாரம் ஒரு ஆய்வாளர் பகுப்பாய்வு 3: DBS. ஜெயராஜ்.” தொடர்ந்து வாசிக்க…)

சி என் அண்ணாதுரை அவர்களின் பிறந்த நாள்!

தனக்கு இருந்த நாவன்மையால், அடுக்கு மொழி அலங்கார பேச்சில் பேசி, ஒத்து மொத்த தமிழனையும் தன் மாயையில் விழ வைத்து , அவர்களை சிந்திக்க தெரியாத ஜடங்களாக ஆக்கியவரின் பிறந்த நாள்!

உன் முகத்தை மட்டும் காட்டு! முப்பது லட்சம் ஓட்டு விழும் என்று நடிகரை அழைத்து, தமிழனை விசில் அடிச்சான் குஞ்சுகளாக மாற்றியவரின் பிறந்த நாள்!

மொழி பற்று என்ற பெயரில், கல்லூரி மாணவர்களை தூண்டி, ஆர்பாட்டம், கலவரம் செய்வித்து, அதன் மூலம் அரசியல் லாபம் பெற்று, இன்று வரை ஓரளவும் ஹிந்தி மொழி அறியாதவர்களாக தமிழ் மக்களை ஆக்கியவரின் பிறந்த நாள்!

அடைந்தால் திராவிட நாடு! இல்லையெனில் சுடுகாடு என்று அடுக்கு மொழியில் அலங்கார மாக பேசி, இன்று வரை வடக்கு தெற்கு என்ற மாநில, மொழி வெறியில் தமிழன் திறிய காரணமாக இருந்தவரின் பிறந்த நாள்!

(“சி என் அண்ணாதுரை அவர்களின் பிறந்த நாள்!” தொடர்ந்து வாசிக்க…)

‘சுமந்திர கலகம்’

(ப.தெய்வீகன்)

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் தமது ஏகபோக பலத்தை தமிழ் மக்கள் மத்தியில் பெற்றுக்கொண்ட தமிழ்க் கூட்டமைப்பு எனப்படும் நான்கு கட்சிகளின் கூட்டணியில் தனியொரு கட்சியின் ஆதிக்கம் எனப்படுவது எதிர்காலத்தில் செல்வாக்கு செலுத்தப்போகின்றதா என்பதை பரிசோதிக்கும் நிகழ்வொன்று அண்மையில் நடைபெற்று அதற்கு விடையும் காணப்பட்டுவிட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுள் தமிழரசு கட்சியின் ஆதிக்கமும் முக்கியமாக சம்பந்தன் – சுமந்திரன் கூட்டுச் செல்வாக்கும் அபரிமிதமாக காணப்படுவதாக ஒரு பாரம்பரிய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுவருவது வழக்கம். கூட்டமைப்பில் உள்ளவர்கள் அதனை அவ்வப்போது மூடிமறைத்தாலும் நடந்து முடிந்த பொதுத் தேர்தலின்போது சம்பந்தன் மேற்கொண்ட பிரசாரங்களின்போதும் தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் தேசியப் பட்டியல் உறுப்பினர்களைத் தெரிவுசெய்யும் நகர்வுகளின்போதும் இந்த விவகாரம் மிகவும் வெளிப்படையாகத் தெரிந்த உண்மையானது.

(“‘சுமந்திர கலகம்’” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் விசாரிக்கப்பட வேண்டும்

(சாகரன்)
ஐநாவின் மனித உரிமைக்கான 40 வது கூட்டத் தொடர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. என்றும் போல் இம்முறையும் இலங்கைத் தமிழர்கள் இலவுகாத்த கிளி போல் மீண்டும் காத்திருக்கின்றனர். மனித உரிமை சபையில் ‘தமிழீழத்தை” அமெரிக்கா பெற்றுத் தரும் என்று. இலங்கையில் ஏற்பட்டிருக்கும் புதிய அரசும், அமெரிக்காவின் இந்த அரசு தனக்கு சார்பாக செயற்படும் என்ற எதிர்பார்ப்புகளும் பிழைக்காத வரைக்கும் மகிந்தாவை கழுவில் ஏற்றுதல் போன்ற வெருட்டல்களை இந்த மனித உரிமை மகாநாடுகளில் இருந்து எதிர்பார்க்க முடியாது. இது மகிந்தாவிற்கான கழுவில் ஏற்றும் பொறி முறை அல்ல சீனாவின் இலங்கைப் பிரசன்னத்திற்கு அமெரிக்கா கொடுக்க இருந்த தண்டனை.

(“இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் விசாரிக்கப்பட வேண்டும்” தொடர்ந்து வாசிக்க…)

யுனியன் நாடுகள் இதனைச் சிந்துக்குமா…?

(சாகரன்)
இவ்வளவு நடந்த பின்பும் அகதிகள் பிரச்சனை என்று மட்டும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் கவனத்தைச் செலுத்தி தமது நாட்டிற்குள் அகதிகளை வர விடாமல் எப்படித் தடுப்பது தவிர்பது என்ற வட்டத்திற்குள் மட்டும் சிந்திக்கின்றன. மாறாக இந்த அகதிகள் எவ்வாறு உருவானார்கள் என்பதை இவர்கள் சிந்திப்பதை விரும்பவில்லை. அப்படி சிந்தித்து போரை நிறுத்தாத வரைக்கும் அகதிகள் பிரச்சனை பெருக்கெடுத்து ஓடி அணையை உடைத்தெறியும். இதன் பின்பு யூனியன்கள் பாடங்கள் கற்பர். நான்கு வருடத்திற்கு முன்பு சிரிய மக்கள் வாழ்ந்த அமைதி வாழ்வை உள்ளுர் கலகக்காரர்களுக்கு ‘உதவி’கள் செய்து ஊக்குவித்து கலகத்தை ஆரம்பித்து வைத்தவர்கள் யார் என்பதை உலகம் அறியும். இதன் தொடர்சியாக மதத்தை தூக்கிப் பிடிக்கும் தீவிரவாதிகள் சிரியாவை பங்கு போடப் புறப்பட்டதும் புதிதாக அமெரிக்காவால் ஆரம்பிக்கப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் இவர்கள் யாவரையும் புறம் தள்ளி முன்னேற இந்தக் காட்டாற்றை தடுக்க முடியாமல் யாவரும் திணறி அல்லாவை வழிபடும் மக்களும் அவதிப்படும் நிலை ஏற்பட்டதையும் உலகம் அறியும். இன்று பன்முகத்தாக்குதலுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் தரைவழியையும் தவிர்த்து கடல் மார்க்கமாக தப்பிக்க முயலும் சிரிய மக்கள் தமது உறவுகளை கடலுக்கு தீனியாக போடவேண்டிய துர்பாக்கியத்திலுள்ளது கொடுமையிலும் கொடுமை. இதிலும் தப்பியவர்கள் தஞ்சம் கேட்க யூனியன்கள் தாங்காது தத்தளிப்பது புதிய நிலமைகளை ஏற்படுத்துமா என்பது போரை நிறுத்தி அகதி வாழ்வைத் தடுக்கும் பொறிமுறையில் தங்கியுள்ளது.