வைரமுத்துவுக்கு ஒரு கவிதை!

பேரரசின் காவியம்!!!

வெடி முழக்கில் நடுங்கிப் பயந்தது
யாழ்க் காற்று.
நின்
தமிழ் முழக்கில்
தைரியம் தந்தாய்.

(“வைரமுத்துவுக்கு ஒரு கவிதை!” தொடர்ந்து வாசிக்க…)

நாம் விதிக் குரங்குகள் கிழித்தெறியும் பஞ்சுத் தலையணையா?’

‘யாழ் நகரில் என் பையன்
கொழும்பில் என் பெண்டாட்டி
வன்னியில் என் தந்தை
தள்ளாத வயதினிலே தமிழ் நாட்டில் என் அம்மா
சுற்றம் பிறாம்போட்டில்
சகோதரியோ பிரான்ஸ் நாட்டில்
நானோ வழிதவறி அலாஸ்கா வந்தவிட்ட
ஒட்டகம்போல ஓஸ்லோவில்!
நம் குடும்பங்கள் என்ன?
காற்றில் விதிக் குரங்குகள்
கிழித்தெறியும் பஞ்சுத் தலையணையா?’

(வ.ஐ.ச.ஜெயபாலன்)

உண்மை காதலுக்கு என்றும். மரணமில்லை ..!

மனைவியை
தாயாக

நினைத்து பார்த்து கொள்ளும்
ஆண்களும்….!

கணவனை
பிள்ளையாக

நினைத்து பார்த்து கொள்ளும்
பெண்களும்…!

இருக்கும் வரை
உண்மை

காதலுக்கு என்றும்.
மரணமில்லை ..!

– குடாநாட்டான் –

இன்று மார்கழி 13

ஈழக்கனவேந்தி நான்
தேர்ந்தெடுத்த
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி
தடை செய்யப்பட்ட நெருப்பு நாள்…

நானும் போராடப்புறப்பட்டவன்…

சுதந்திரதிற்காக
போராடும் எனது உரிமை
மறுக்கப்பட்ட நாள்..

யார் மறப்பினும்
நான் மறப்பேனா?…

என் தாய் தந்தாள்
முட்டைப்பொரியலும்
குத்தரிசி சோறும்…

போடா நீ
போர்க்களம்
நோக்கி போ என்று……

அனுப்பினாள்…

போராடும் என் உரிமையை
மறுத்தவன் யாரடா?….
(Comrade Vinthan)

சம்பந்தப் பெருமானும், அடியாரும் வாழ்க!

தன்மானத் தமிழன் என்பார்
தானைத் தலைவன் என்பார்
தாய்மானம் காக்க
புறப்பட்ட தனயன் என்பார்
என்மானம் இவருக்கு
உண்டோ? யாம் அறியோம்

(“சம்பந்தப் பெருமானும், அடியாரும் வாழ்க!” தொடர்ந்து வாசிக்க…)