கூவல்!

(எஸ். ஹமீத்)
குயில் கூவுகிறது…
அகம் மகிழ்கிறது!
குழந்தை கூவுகிறது…
அரவணைப்பு கிடைக்கிறது!
வியாபாரி கூவுகிறான்…
விற்பனை நடக்கிறது!
அரசியல்வாதி கூவுகிறான்…
வாக்குகள் சேர்கிறது!
சேவல் கூவுகிறது…
காலை புலர்கிறது!
சிரியா கூவுகிறது…
மரணங்களே மறுமொழியாகிறது!

எல்லோரும் சமமென்று இயற்றிடுக சட்டமொன்று!

(எஸ். ஹமீத்)
ஆங்கிலேயர் கருணை கூர்ந்து
அன்றொருநாள் சுதந்திரம் ஈந்து
ஆண்டுகள் அறுபத்தொன்பதும்
ஆகிற்று; ஆனாலும்…
ஓய்ந்ததுவோ வன் கொடுமை?
ஓங்கியதோ நம் நிலைமை?

(“எல்லோரும் சமமென்று இயற்றிடுக சட்டமொன்று!” தொடர்ந்து வாசிக்க…)

அம்மணமாய்தான் நிற்க்கின்றோம்

நாங்கள் அம்மணமாய்தான் நிற்கின்றோம்

ஆடையணிந்தால் அழகாகிடுமாம்

தெருவெங்கும் சாலையெங்கும்

மூக்கை பிடித்து மூச்சடக்கி போகும் மனிதர்களே

அந்த நாற்றத்தில் நாள்தோறும்

விழுந்து சாகின்றோம்

(தொடர்ந்து வாசிக்க…)

ஆயுதம் செய்யுங்கள் – நீங்களே ஏந்துங்கள் !

“விதையுங்கள், கொள்ளையன் அறுவடை செய்ய அனுமதிக்காதீர்! செல்வம் கண்டெடுங்கள், எத்தர்களை எட்ட நிறுத்துங்கள்! ஆடைகளை நெய்யுங்கள், சோம்பேறி அணியவிடாதீர்! ஆயுதம் செய்யுங்கள், நீங்களே ஏந்துங்கள்!” – கவிஞர் ஷெல்லி

(“ஆயுதம் செய்யுங்கள் – நீங்களே ஏந்துங்கள் !” தொடர்ந்து வாசிக்க…)

“கீழ்வெண்மணி”

(டிசம்பர் 25 , 1968)
வர்க்கப் புரட்சியின் அடையாளம்
சொந்த நிலத்தையும்
சொந்த நலத்தையும்
ஆண்டைகளிடம் பறிகொடுத்தது …

(““கீழ்வெண்மணி”” தொடர்ந்து வாசிக்க…)

இன்னுமொரு_முள்ளிவாய்க்கால்

மூச்சுவிட முடியாமல்
ஒரு தேசம் திணறுகின்றது
காற்றெல்லாம் கந்தக வாசனை
வெட்டப்பட வேள்வியாடுகளாய்
மனிதம் சிதறிக்கிடக்கின்றதே
இன்னுமொரு முள்ளிவாய்க்கால்
இங்கேதான் அரங்கேற்றப்படுகிறது…!

(“இன்னுமொரு_முள்ளிவாய்க்கால்” தொடர்ந்து வாசிக்க…)

மார்கழி 13

நேற்றைய இரவுகள்
இப்படித்தான் விடிந்தன…

காற்றுப் புகமுடியாத
இடங்களில் எல்லாம்
தோற்றுப் போனவர்கள்
கண்ணி வைத்து
காவல் இருந்தனர்……

ஆம்….. மார்கழி 13
அதுவும் ஓர் .கர்நாள்…….

(“மார்கழி 13” தொடர்ந்து வாசிக்க…)

முள்ளி வாய்க்காலுக்கு முன்னைய காலங்களில் இடம்பெற்ற சகோதரப் படுகொலைகளின் போது

இரத்தம் ஒரே நிறமல்ல //யார் சொன்னது அப்படி.. உலகெங்கும் வெடிக்கும் கலவரங்களிலும், யுத்தங்களிலும் வடியும் இரத்தம் எல்லாமே ஒரே நிறம்தான் அவற்றின் கொடுமையும் ஒரே நிறம்தான்.

.முள்ளி வாய்க்காலுக்கு முன்னைய காலங்களில் இடம்பெற்ற சகோதரப் படுகொலைகளின் போதும், முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் போதும் வடிந்த இரத்தவெள்ளங்களில் மக்கள் தம்மை மறந்து கடந்து போகத்தான் செய்தார்கள் ..அந்தக் கொடூரமான நினைவுகளைப் பலரும் எழுதினார்கள் ….சொன்னார்கள்…இங்கே வரும் கவிதை வரிகளில் அச்சொட்டாக அந்த வலியை உணர்கின்றேன்……..

(“முள்ளி வாய்க்காலுக்கு முன்னைய காலங்களில் இடம்பெற்ற சகோதரப் படுகொலைகளின் போது” தொடர்ந்து வாசிக்க…)

அம்மாவிற்கு அன்பு மடல்

அம்மாவிற்கு
அன்பு மடல்
எழுதி வைத்துவிட்டு
பொழுது சாயும் முன்னே
போனவன் இன்னும்
வீடு திரும்பவில்லை……

(“அம்மாவிற்கு அன்பு மடல்” தொடர்ந்து வாசிக்க…)

ஈழத்து எழுத்துலகின் ஏந்தல் போனான்! செங்கையாழியான்!

எழுத்தாணி தனித்தேதான் ஏங்கிற்றம்மா
ஏற்றமுறு செங்கையாழியனின் கையில்
பழுத்தேதான் பல கதைகள் உலகுக்கீந்து
பயன் செய்த காலம்தான் போச்சே என்று
விழுத்தாது ஈழத்து நவீனம்தன்னை
வீறுடனே எழச்செய்த மன்னன் போக
சலித்தேதான் மற்றவர் கை ஏகேனென்று
சட்டென்று அதுவும் கண்மூடிற்றம்மா !

(“ஈழத்து எழுத்துலகின் ஏந்தல் போனான்! செங்கையாழியான்!” தொடர்ந்து வாசிக்க…)