கிரிந்த மீன்வளத் துறைமுகத்தில் மணல் அகழ்வுத் திட்டத்தை கொரிய நிறுவனத்திற்கு வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு 20 மில்லியனுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவால் தேடப்பட்டு வரும் முன்னாள் மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன, கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் முன் பிணை மனுவை, திங்கட்கிழமை (14) தாக்கல் செய்ய உள்ளார்.
Category: செய்திகள்
“பொதி செய்யப்படாத எண்ணெய் விற்பனை நிறுத்தப்படும்”
“அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளில் குறைந்த வரி”
காசாவில் ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் பலி
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்
பழம்பெரும் நடிகர் சரோஜா தேவி உடல்நலக்குறைவால் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில். இன்று (ஜூலை 14) காலையில் காலமானார். இறக்கும் போது அவருக்கு 87 வயதாகும். மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு கொலம்பியா ஏசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரோஜா தேவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான கலந்துரையாடல்
2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான மாகாண, பிராந்திய மற்றும் பிரதேச மட்டத்திலான கல்வி மற்றும் நிர்வாக அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தும் கிழக்கு மாகாணத்திற்கான விழிப்புணர்வு கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை (13)அன்று கிழக்கு மாகாண கல்வி திணைக்கள கேட்போர் கூடத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் இடம்பெற்றது.

“கல்குடா முஸ்லிம்களின் வாழ்வியலும் வரலாறும்”
ஒரு பிரதேச மக்களின் வளர்ச்சி அந்த மக்களுடைய வரலாற்றை எவ்வாறு அவர்கள் புரிந்து கொள்கிறார்கள் என்பதில் தங்கி உள்ளது. அந்த வகையில் ‘கல்குடா முஸ்லிம்களின் வாழ்வியலும் வரலாறும்’ என்ற நூல் இப்பிராந்திய மக்களின் வரலாற்று பொக்கிஷமாக அப் பணியை நிறைவேற்றும் என்று தென்கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் எம்.சி.ஏ நாசர் தெரிவித்தார்.
அநுரவைக் கண்காணிக்க ’அனுர மீட்டர்’ அறிமுகம்
வெரிட்டே ரிசர்ச்சின் ஒரு தளமான Manthri.lk, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் 2024 ஜனாதிபதித் தேர்தல் அறிக்கையில் வழங்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்குறுதிகளின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கும் நிகழ்நிலை கண்காணிப்புத் தளமாக அனுர மீட்டரை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.
