957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்

இந்த ஆண்டில் மட்டும் ஏறக்குறைய ஆயிரம் வைத்தியர்கள் வைத்திய சேவையில் இருந்து விலகியுள்ளதாக  அரசாங்க கணக்குகள் பற்றிய குழு அல்லது கோபா  குழுவில் தெரியவந்துள்ளது.

கனடாவில் மேலும் ஒரு காலிஸ்தான் தீவிரவாதி சுட்டுக்கொலை

கனடா நாட்டில் மேலும் ஒரு காலிஸ்தான் தீவிரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். 2 கும்பல்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் சுக்தூல் சிங் என்ற காலிஸ்தான் பயங்கரவாதி கொல்லப்பட்டார். அவர், 2017-ம் ஆண்டு கனடாவுக்கு போலி ஆவணங்கள் மூலம் சென்றுள்ளார் என கூறப்படுகிறது.

இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து ஒக்.15 ஆரம்பம்

சோழர் காலத்தில் புகழ் பெற்று விளங்கிய துறைமுகத்தில் இருந்து மீண்டும் கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்க வேண்டும் என இந்தியா நாகை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

“அது பெரிய கதை இப்போது சொல்ல முடியாது”

நான் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தேன். திடீரென அவரை பிரதமராக நியமிக்கவில்லை என்று தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசாங்கத்துக்குள் ஏற்பட்ட கொள்கை பிரச்சினை காரணமாகவே இவ்வாறு செய்தேன் என்றார்.

போதை ஒழிப்பு தொடர்பில் பாடசாலைகளில் வீதி விழிப்புணர்வு நாடகம்

தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட பாடசாலைகளில் போதை ஒழிப்பு தொடர்பான வீதியோர நாடகம் இடம்பெற்றுள்ளது. குறித்த விழிப்புணர்வு நிகழ்வானது தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதியின் வழிகாட்டுதளுக்கு இணங்க புதன்கிழமை (20) நடைபெற்றுள்ளது.

அது இல்லாவிட்டாலும் கோட்டா வென்றிருப்பார்

கத்தோலிக்க வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் ஒரே நோக்கத்தில் தான் சனல்-4 ஊடக நிறுவனம் வெளியிட்டுள்ள புனையப்பட்ட காணொளி தொடர்பில் சர்வவேச விசாரணையை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோருவதாகவும், குறித்த நிறுவனம் கோட்டாபயவுக்கு எதிராக மட்டுமல்ல ஒட்டுமொத்த சிங்கள, பௌத்தத்துக்கு எதிராகவே பொய்பிரசாரம் செய்வதாகவும் தேசிய அமைப்புகளின் சம்மேளனத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.

மொராக்கோ நிலநடுக்கம்: பலியானோர் 1,037 ஆக அதிகரிப்பு

மொராக்கோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 37ஆக அதிகரித்துள்ளது.  மேலும் ஆயிரத்து 204 பேர் காயமடைந்துள்ளனர் என அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.  அவர்களில் 721 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. 

ஜி-20 உச்சி மாநாடு டெல்லியில் இன்று ஆரம்பம்

இந்தியா தலைமையேற்று நடத்தும் ஜி20 மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், 18வது உச்சி மாநாடு இன்று டெல்லியில் தொடங்குகிறது.  இதில், பல உலக தலைவர்கள் கலந்து கொள்கின்றனர், இதனை முன்னிட்டு டெல்லி விழாக்கோலம் காட்சியளிக்கிறது.

நிறைவேறியது சட்டமூலம்

எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்களுக்கும் மத்தியில் உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலம் 45 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மூலத்துக்கு ஆதரவாக  103 வாக்குகளும் எதிராக 58 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் 45 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.