மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட கிழக்கு தமிழர் கூட்டமைப்பில் கருணா, மற்றும் பிள்ளையான் இணைந்து கொண்டதுடன் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (22) மட்டக்களப்பில் உள்ள தனியார் விடுதியொன்றில் கைச்சாத்திட்டனர்.
Category: செய்திகள்
ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு குடும்ப வைத்தியர் திட்டம்
குடும்ப மருத்துவர் என்ற கருத்தை நாட்டிற்கு அறிமுகப்படுத்த, சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது. ஆரம்ப சுகாதார சேவைகளை வலுப்படுத்துவதும், பொதுமக்களுக்கு மிகவும் திறமையான சேவைகளை வழங்குவதும் இதன் நோக்கம் என்று, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் ஹன்சக விஜயமுனி தெரிவித்தார். இதன் கீழ், மூன்று கிராம அலுவலர் பிரிவுகளுக்கும் தலா ஒரு வைத்தியர் நியமிக்கப்படுவார் என்றும் மேலும் இதற்காக ஒரு தனி மையம் நிறுவப்படும் என்றும் கூறினார்.
அமெரிக்க கல்வித் துறையைக் கலைக்க ட்ரம்ப் கையெழுத்து
அமெரிக்க கல்வித் துறையைக் கலைக்கும் கோப்புகளில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் அதிபராக பொறுப்பேற்றதில் இருந்தே ட்ரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவற்றில் பெரும்பாலான நடவடிக்கைகளுக்கு செலவினங்களைக் குறைப்பதையே அவர் காரணமாகக் கூறி வருகிறார். இந்நிலையில் அமெரிக்க கல்வித் துறையைக் கலைக்கும் கோப்புகளில் கையெழுத்திட்டு பரபரப்பை கூட்டியுள்ளார் ட்ரம்ப்.
தையிட்டி விகாரை விவகாரம்: மனித உரிமை ஆணைக்குழு விசாரணை
பாராளுமன்றத்துக்கு அருகில் பதற்றம்
வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டத்தைத் தொடர்ந்து, பாராளுமன்றத்துக்கு செல்லும் வீதிக்கு அருகிலுள்ள பொல்துவ சந்தியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அரசாங்கம் வேலைவாய்ப்பு வழங்கக் கோரி, மேல் மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தைச் சேர்ந்த பலர் பொல்துவ சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் வௌ்ளிக்கிழமை (21) ஈடுபட்டனர். பல கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண் பட்டதாரிகள் பலர் கண்ணீர் மல்கினர்.
லண்டனுக்கான விமானங்கள் இரத்து
சந்திரவெளி படுகொலை : 4 பேருக்கு மரண தண்டனை
கனகராசா சரவணன் மட்டக்களப்பு சந்திவெளியில் 2007 ஆம் ஆண்டு ஒருவரை துப்பாக்கியால் சுட்டு மரணத்தை எற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கிரான் மற்றும் சந்திவெளி பிரதேசங்களைச் சேர்ந்த 4 பேருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன், வெள்ளிக்கிழமை (21) மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தார். கடந்த 2007ம் ஆண்டு மாச் மாதம் 18ஆம் திகதி சந்திவெளியைச் சேர்ந்த மயில்வாகனம் ரவீந்திரன் என்பவரை ரி-56 ரக துப்பாக்கியால் அந்த பகுதியில் இயங்கிவந்த ஆயுதகுழு ஒன்றைச் சேர்ந்தவர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.
இச் சம்பவம் தொடர்பாக சந்திவெளி மற்றும் கிரான் பிரதேசங்களைச் சேர்ந்த தி.கிருஸ்ணரூபன், வ.திருச்செல்வம், கு.பாஸ்கரன், க. மகேந்திரன் ஆகிய 4 பேரை ஏறாவூர் பொலிஸார் கைது செய்து அவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தனர். குறித்த வழக்கு விசாரணை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றுவந்த நிலையில் வெள்ளிக்கிழமை (21) மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் குறித்த 4 பேரும் குற்றவாளிகள் என இனங்கண்டுகொண்டதையடுத்து அவர்களுக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
மிருசுவில் படுகொலை: கோட்டா மன்னிப்பு வழங்கிய குற்றவாளிக்கு பயணத்தடை
யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் எட்டு தமிழர்களை படுகொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் மரணதண்டனை விதிக்கப்பட்டு பின்னர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட குற்றாவளி சுனில் ரத்நாயக்கவிற்கு உயர்நீதிமன்றம் வெளிநாட்டு பயணத்தடையை வியாழக்கிழமை (20) விதித்துள்ளது.
அர்ச்சுனா இராமநாதனை பாராளுமன்ற ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும்…!
(சட்டத்தரணி பாத்திமா சஸ்னா)
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் சமீபகாலமாக பாராளுமன்றத்திற்குள்ளேயும் வெளியேயும் பெண்களுக்கு எதிரான பல சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.அது தொடர்பில் அவருக்கு எதிரான கண்டங்கள் அதிகரித்து வரும் நிலையில். அவர் தொடர்பிலும் பெண் சட்டத்தரணிகளில் ஒருவரான பாத்திமா சஸ்னா தனது கண்டனத்தினை தெரித்துள்ளார்.