2008 மற்றும் 2021 க்கு இடையில் 22 வளரும் நாடுகளின் பொருளாதாரத்தை நிலைப்படுத்த சீனா 240 பில்லியன் டொலரை செலவிட்டுள்ளதாக புலனாய்வு அறிக்கையொன்றில் தெரியவந்துள்ளது. அந்நாடுகளில் பல சீனாவிடம் பல்வேறு திட்டங்களுக்காக கடன் பெற்றுள்ளதாகவும், அவற்றை திருப்பி செலுத்துவதில் தற்போது கடும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
Category: செய்திகள்
ஆசிரியர் பற்றாக்குறைக்கு மிக விரைவில் தீர்வு
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கல்வி வலயங்களில் நிலவும் ஆசிரியர்கள் பற்றாக்குறை தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று, நேற்று ( 27) நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவ.சந்திரகாந்தன் தலைமையில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.
நாவலர் கலாசார மண்டபத்தை கைமாற்றியமைக்கு எதிராக மகஜர்
முடிந்தளவு பணம் தந்து உதவுங்கள்: முன்னாள் ஜனாதிபதி
பேசியதற்காக சிறையில் ராகுல் காந்தி
மலையகம் 200
பால் தேநீரின் விலையில் ஏற்பட்ட மாற்றம்
பால் தேநீர் கோப்பை ஒன்றின் விலையை நாளை முதல் 10 ரூபாவால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பால்மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளமையை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
பதவிக்காக தவமிருக்கும் SLPP உறுப்பினர்கள்
நீண்ட காலமாக அமைச்சுப் பதவிகளுக்காகக் காத்திருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குழு தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. இவர்களுக்கான அமைச்சுப் பதவிகள் தாமதமானால், அரசுக்கு ஆதரவளிப்பது தொடர்பில் முடிவெடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.