கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன காலமானார்

சிரேஸ்ட அரசியல்வாதியும் நவ சம சமாஜ கட்சியின் தலைவருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தனது 81 வயதில் இன்று காலமானார். இவர் நீண்ட காலமாக சுகயீனமுற்றிருந்த நிலையில் காலமாகினார். 

ஜனாதிபதி வேட்பாளர் பொன்சேகா?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாம் போட்டியிடப்போவதாக சரத் பொன்சேகா அறிவித்துள்ளார்.  இது தொடர்பில் அவர் X தளத்தில் பதிவிட்டுள்ளார். எனது ஜனாதிபதி வேட்பாளர் விருப்பை இலங்கை மக்களுக்கு அறிவிக்க விரும்புகிறேன்.

தங்கத்துரை, குட்டிமணியின் உடல்களை கேட்கிறார் செல்வம்

வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட  தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர்களான தங்கத்துரை ,குட்டிமணி ஆகியோரின் உடல்கள் எங்கே புதைக்கப்பட்டுள்ளன என்பதனை அரசு வெளிப்படுத்த வேண்டும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் எம்.பி.யுமான செல்வம்  அடைக்கலநாதன் வேண்டுகோள் விடுத்தார்.

ரூ1,700 வர்த்தமானி ரத்து

தோட்டத் தொழிலாளர்களுக்கான 1,700  ரூபாய் சம்பள அதிகரிப்புக்கான வர்த்தமானி அறிவித்தலை தொழில் அமைச்சு இரத்துச் செய்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளமான 1700 ரூபாவை சம்பளச் சபையின் ஊடாக வழங்குவதற்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சு அறிவித்துள்ளது

AI மூலம் ஊழியர்கள் கண்காணிக்கும் நிறுவனம்

சூப்பர் மார்க்கெட்டுக்கு வரும் வாடிக்கையாளர்களை ஊழியர்கள் எப்படி அணுகுகிறார்கள் என்பதை கண்காணிக்கும் வகையில் AI உதவியை ஒரு நிறுவனம்.  ஜப்பான் நாட்டில் உள்ள நிறுவனமே இவ்வாறு செய்துள்ளது.

கொழும்பு அரசியலில் பரபரப்பு: அவசரமாக கூடுகிறது அமைச்சரவை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். அதனையடுத்து அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், ஜனாதிபதி செயலகத்தை நோக்கி படையெடுத்துகொண்டிருக்கின்றனர். 

பங்களாதேஷ் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

பங்களாதேசில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு பணிகளில் 30% இடஒதுக்கீடு முறையை இரத்து செய்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பங்களாதேசில் கடந்த 1971ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக மாபெரும் போர் நடந்தது. இந்த போரில் ஏராளமானோர் நாட்டுக்காக உயிரிழந்தனர். இந்த போரில் வெற்றிகளாதேஷ் தனி நாடாக உருவானது.

பைடன் விலகினார்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான போட்டியில் இருந்து விலகுவதாக, தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ள நிலையில், இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

தமிழ் தேசிய கட்சிகளுக்கும். தமிழ் மக்கள் பொதிச்சபைக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் திங்கட்கிழமை (22) கைச்சாத்திடப்பட்டுள்ளது. தந்தை செல்வா அரங்கில் காலை 11:30 மணியளவில் ஆரம்பமாகிய குறித்த நிகழ்வில் இடம்பெற்றது.

ஜீவனை கைது செய்யுமாறு அதிரடி உத்தரவு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் , நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர்  ஜீவன் தொண்டமான் உட்பட பல சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நுவரெலியா பதில் நீதவான் ஜயமினி அம்பகஹவத்த, நுவரெலியா பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.