சீனாவின் கடன் பொறிக்குள் 22 நாடுகள் சிக்கியுள்ளன

2008 மற்றும் 2021 க்கு இடையில் 22 வளரும் நாடுகளின் பொருளாதாரத்தை நிலைப்படுத்த சீனா 240 பில்லியன் டொலரை செலவிட்டுள்ளதாக புலனாய்வு அறிக்கையொன்றில் தெரியவந்துள்ளது. அந்நாடுகளில் பல சீனாவிடம் பல்வேறு திட்டங்களுக்காக கடன் பெற்றுள்ளதாகவும், அவற்றை திருப்பி செலுத்துவதில் தற்போது கடும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

ஆசிரியர் பற்றாக்குறைக்கு மிக விரைவில் தீர்வு

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கல்வி வலயங்களில் நிலவும் ஆசிரியர்கள் பற்றாக்குறை தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று, நேற்று ( 27)  நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவ.சந்திரகாந்தன் தலைமையில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.

நாவலர் கலாசார மண்டபத்தை கைமாற்றியமைக்கு எதிராக மகஜர்

யாழ். மாநகர சபையின் ஆளுகையில் இருந்த நாவலர் கலாசார மண்டபம், வடக்கு மாகாண ஆளுரால் மத்திய அரசாங்கத்துக்கு வழங்கப்பட்டமைக்கு எதிராக யாழ். மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர்களின் கையெழுத்து அடங்கிய மகஜர், ஆளுநர் செயலகத்தில் இன்று  (28) கையளிக்கப்பட்டது.

முடிந்தளவு பணம் தந்து உதவுங்கள்: முன்னாள் ஜனாதிபதி

தண்டப்பணத்தை செலுத்த தனக்குக் கொடுக்கப்பட்ட 6 மாத கால அவகாசத்தில் ஏற்கனவே 3 மாதங்கள் முடிந்துவிட்டதாகவும் எனவே மீதமுள்ள 3 மாதங்களுக்குள், உங்களால் முடிந்தளவு பணத்தைக் கொடுத்து உதவுங்கள் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக் கொண்டுள்ளார்.

மலையகம் 200

மலையகம் 200 எனும் தொனிப்பொருளில், மலையக சமூகம் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் – முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் முதற்கட்ட, இரு நாள் கலந்துரையாடல், நுவரெலியாவில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

பால் தேநீரின் விலையில் ஏற்பட்ட மாற்றம்

பால் தேநீர் கோப்பை ஒன்றின் விலையை நாளை முதல் 10 ரூபாவால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பால்மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளமையை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

பதவிக்காக தவமிருக்கும் SLPP உறுப்பினர்கள்

நீண்ட காலமாக அமைச்சுப் பதவிகளுக்காகக் காத்திருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குழு தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. இவர்களுக்கான அமைச்சுப் பதவிகள் தாமதமானால், அரசுக்கு ஆதரவளிப்பது தொடர்பில் முடிவெடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

வெடுக்குநாறியில் அட்டகாசம்: ஆதிலிங்கம் கழற்றி வீசப்பட்டுள்ளது

வவுனியா, நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கம் கழற்றி வீசப்பட்டுள்ளதுடன், ஏனைய விக்கிரகங்களும் மாயமாகியுள்ளன.

ஏப்ரல் 29 முதல் புதிய படகுச் சேவை

புதுச்சேரியில் உள்ள காரைக்கால் துறைமுகத்துக்கும் காங்கேசன்துறை (கேகேஎஸ்) துறைமுகத்துக்கும் இடையிலான படகுச் சேவை ஏப்ரல் 29 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என்று துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.