‘கிழக்கு மாகாணத்துக்கு நிரந்தரத் தீர்வு கிட்டும்’

கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற பிரச்சினைகளுக்கு, இனி நிரந்தரத் தீர்வு கிடைக்கப்பெறுமென, கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்ததுடன், இதற்கான சகல விடயங்களையும், இன, மத, மொழி வேறுபாடின்றி முன்னெடுக்க, தன்னை அர்ப்பணித்துள்ளதாகத் தெரிவித்தார்.

(“‘கிழக்கு மாகாணத்துக்கு நிரந்தரத் தீர்வு கிட்டும்’” தொடர்ந்து வாசிக்க…)

ஆளுமைகளில் இறுதியானவராக திருமதி. சிவபாக்கியம் ( பழனிசாமி) குமாரவேல்

மலையக அரசியல் வரலாற்றில் இலங்கை இந்திய காங்கிரஸ் இயக்கத்தில் செயற்பட்ட ஆளுமைகளில் இறுதியானவராக திருமதி. சிவபாக்கியம் ( பழனிசாமி) குமாரவேல் அம்மையாரை கொள்ளலாம். அவரது தந்தையர் என். எம். பழனிசாமி ( படத்தில் இருப்பவர்) இ.இ.காங்கிரஸின் ஆரம்பகால உறுப்பினர். அவரது பிள்ளைகளை பொதுவாழ்வில் ஈடுபடுவதற்கு ஆர்வம் காட்டி வளர்த்துள்ளார். கலகா, கொழும்பு, மட்டக்களப்பு, வவுனியா என எல்லா பிரதேசங்களிலும் இருந்து அம்மையாரின் சகோதரங்கள் வருகை தந்திருந்தார்கள். ஒவ்வொருவரது வாழ்விலும் ஒரு வரலாற்று பின்புலம் இருந்ததை அறியமுடிந்தது. ” ஏன்.. மகன் அம்மாவை பார்க்க வரல” என ஒரு அழைப்பு கண்டியில் இருந்துவரும். அவ்வப்போது நேரம் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் அ வரை வந்து நலம் விசாரித்து செல்வதுண்டு. ஒரு முறை குழந்தைகளையும் அழைத்துவந்து அம்மையாரின் வரலாற்றை சொல்லிக்கொடுத்தேன். இனி அழைப்பு வரப்போவதில்லை. இன்று இறுதியாக வழியனுப்பிவிட்டு திரும்புகின்றேன். இவர் போன்ற ஆளுமைகளை எழுத்தின் மூலமாக பதிவு செய்தல் அவசியம்.

‘கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுத்தும் வரவில்லை’

வெள்ள அனர்த்தம் தொடர்பாக ஆராய்வதற்கு இடம்பெறும் கூட்டத்துக்கு வருமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்த போதும், அவர்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை என, விவசாயம், கிராமப்புற பொருளாதார அலுவல்கள், கால்நடைகள் மேம்பாடு,நீர்ப்பாசனம் மற்றும் மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சர் எம். ஹரிஸ் தெரிவித்துள்ளார். (“‘கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுத்தும் வரவில்லை’” தொடர்ந்து வாசிக்க…)

பிரான்ஸிலிருந்து நாடு கடத்தப்படவுள்ள இலங்கை மீனவர்கள்

சட்டவிரோதமாக பிரான்ஸ் நாட்டிலுள்ள தீவொன்றுக்குள் செல்ல முயன்ற இலங்கையைச் சேர்ந்த ஏழு மீனவர்களை அங்கிருந்து நாடு கடத்தத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டுக்குரிய ரீ யூனியன் என்ற தீவுக்கு சட்டவிரோதமாகச் சென்ற குறித்த மீனவர்கள் ஏழு பேரும் கடந்த வாரம் அந்நாட்டின் பாதுகாப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டனர். (“பிரான்ஸிலிருந்து நாடு கடத்தப்படவுள்ள இலங்கை மீனவர்கள்” தொடர்ந்து வாசிக்க…)

தலைமையை ஏற்கவும்: சி.விக்கு, சங்கரி அழைப்பு

தமிழர் விடுதலை கூட்டணியின் தலைமையை ஏற்குமாறு, வட மாகாண முன்னாள் முதலைமைச்சரும் நீதியரசருமான சி.வி. விக்னேஷ்வரனுக்கு, கூட்டணியின் செயலாளர் கநாயகம் வீ. ஆனந்த சங்கரி அழைப்பு விடுத்துள்ளார்.

(“தலைமையை ஏற்கவும்: சி.விக்கு, சங்கரி அழைப்பு” தொடர்ந்து வாசிக்க…)

சபரிமலைக்குள் பெண்கள்

இந்தியாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சபரிமலைக் கோவிலுக்குள், 50 வயதுக்குக் குறைவான இரு பெண்கள் இன்று உள்நுழைந்து, ஐயப்பனைத் தரிசனம் செய்தனர். இதன்மூலம், வரலாற்றில் முதன்முதலாக, சபரிமலைக்குள் சென்று, பெண்கள் தரிசனம் செய்தனர் என்பது, ஆதாரத்துடன் பதிவுசெய்யப்பட்டுள்ளது. (“சபரிமலைக்குள் பெண்கள்” தொடர்ந்து வாசிக்க…)

மஹிந்தவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்குமாறு சபாநாயகர் அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, எதிர்க்கட்சித் தலைவராக ஏற்குமாறு, சபாநாயகர் கரு ஜயசூரிய, இன்று (04) நடைபெற்ற கட்சித் தலைவர்கள் மாநாட்டின் போது கோரியதாகத் தெரியவருகிறது. இதேவேளை, எதிர்க் கட்சிகளின் பிரதம கொறடாவாக, மஹிந்த அமரவீரவை ஏற்குமாறும், அவர் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

5 புதிய ஆளுநர்கள் நியமனம்

ஐந்து மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள், ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று (04) பிற்பகல் பதவிப்பிரமாணம் செய்தனர்.

அவர்களது பெயர் விவரங்கள் பின்வருமாறு

1. மேல் மாகாணம் – அசாத் சாலி
2. மத்திய மாகாணம் – சத்தேந்திர மைத்ரி குணரத்ன
3. வடமத்திய மாகாணம் – சரத் ஏக்கநாயக்க
4. வடமேல் மாகாணம் – பேசல ஜயரத்ன பண்டார
5. கிழக்கு மாகாணம் – எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா

ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்னவும் இந்நிகழ்வில் பங்குபற்றினார்.

‘சீனாவுடன் தாய்வானைச் சேர்ப்பது தவிர்க்க முடியாதது’

சீனாவுடன் தாய்வானைச் சேர்ப்பது தவிர்க்க முடியாதது என சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் நேற்று தெரிவித்துள்ளார். இந்நிலையில், தாய்வானிலிருந்து ஸி ஜின்பிங்கின் கருத்துகளுக்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ள நிலையில், சீனாவில் காணப்படாத ஜனநாயக சுதந்திரங்களை விட்டுக்கொடுக்க தாய்வான் மக்கள் எப்போதும் தயாரில்லை என தாய்வான் ஜனாதிபதி சை இங்-வென் கூறியுள்ளார். (“‘சீனாவுடன் தாய்வானைச் சேர்ப்பது தவிர்க்க முடியாதது’” தொடர்ந்து வாசிக்க…)

வடமாகாண ஆளுநராகிறார் மார்ஷல் பெரேரா?

அனைத்து மாகாணங்களுக்குமான புதிய ஆளுநர்கள் இன்று வெள்ளிக்கிழமை (04) நியமிக்கப்படவுள்ள நிலையில், தென் மாகாண ஆளுநராகக் கடமையாற்றிய மார்ஷல் பெரேரா, வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படுவார் என்று, தகவல்கள் கசிந்துள்ளன. (“வடமாகாண ஆளுநராகிறார் மார்ஷல் பெரேரா?” தொடர்ந்து வாசிக்க…)