பாலியல் குற்றச்சாட்டு; தனியார் கல்வி நிலைய நிர்வாகிக்கு மறியல்

தர்மபுரம்  பகுதியில் இயங்கிவந்த தனியார் கல்வி நிலையத்தில், தனது மனைவியின் துணையுடன் கல்வி நிலையத்துக்கு கல்வி கற்க வந்த மாணவிகள் சிலருக்கு , பாலியல் தொந்தரவு  மற்றும் பாலியல் துஷ்பிரயோக முயற்சி செய்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட அதன் உரிமையாளரை,  எதிர்வரும்  30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கிளிநொச்சி பதில் நீதவான் சிவபாலன், நேற்று (17) உத்தரவிட்டுள்ளார்.

“இனி எல்லாம் கடவுள் கையில்தான் இருக்கு”- வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட நடிகை அனன்யா உருக்கம்

சில நிமிடங்களில் வெள்ள நீர் கிடுகிடுவென அதிகரித்துவிட்டது, 2 நாட்களாக வெள்ளத்தில் சிக்கி மிகவும் வேதனைப்பட்டேன், இனி எல்லாம் கடவுள் கையில்தான் இருக்கிறது என்று மீட்கப்பட்ட நடிகை அனன்யா தெரிவித்துள்ளார். கேரளாவில் தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்து கடந்த 10 நாட்களாக இடைவிடாது பெய்த மழை பெய்து வருகிறது. இந்த மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மாநிலத்தின் பெரும்பகுதியான மாவட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

(““இனி எல்லாம் கடவுள் கையில்தான் இருக்கு”- வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட நடிகை அனன்யா உருக்கம்” தொடர்ந்து வாசிக்க…)

8 வருடங்களின் பின்னர் அப்பிளுக்கு ஏற்பட்ட இழப்பு

உலகின் முன்னணி ஸ்மார்ட் கைத்தொலைபேசி உற்பத்தி அப்பிள் (Apple) நிறுவனத்தின் மிகப்பிரபலமான “ஐ போன்” கைத்தொலைபேசி விற்பனையை பின்தள்ளி சீனாவை தளமாகக் கொண்டு இயங்கும் வுஹாவி (Huawei) கைத்தொலைபேசி விற்பனையில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

(“8 வருடங்களின் பின்னர் அப்பிளுக்கு ஏற்பட்ட இழப்பு” தொடர்ந்து வாசிக்க…)

Another USAID covert plan exposed

According to an investigation by the Associated Press, the U.S. Agency for International Development, USAID, attempted to infiltrate the Cuban hip-hop movement as part of a covert project to destabilize the country.

AUTOR: ACN

According to an investigation by the Associated Press, the U.S. Agency for International Development, USAID, attempted to infiltrate the Cuban hip-hop movement as part of a covert project to destabilize the country.

(“Another USAID covert plan exposed” தொடர்ந்து வாசிக்க…)

கேரளாவில் 22 பேர் இறந்திருக்கலாமென அச்சம்

இந்தியாவின் கேரளாவின் வயனட், இடுக்கியில் மழை தொடர்பான சம்பங்களால் குறைந்தது 22 பேர் இறந்திருக்கலாமென அச்சம் வெளியிடப்பட்டதுடன், டசின் கணக்கானோருக்கு மேல் காணவில்லை என்று கூறப்படுகிறது.

(“கேரளாவில் 22 பேர் இறந்திருக்கலாமென அச்சம்” தொடர்ந்து வாசிக்க…)

தேசத்துரோக வழக்கில் திருமுருகன் காந்தி கைது

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி, இன்று அதிகாலை பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ் நாட்டில் இடம்பெற்ற, ஸ்டெர்லைட் விவகாரம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மற்றும் சேலம் சென்னை எட்டு வழிச்சாலை உள்ளிட்ட பிரச்சனைகளை தொடர்பில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் பேசிவிட்டு இன்று அதிகாலை நோர்வேயிலிருந்து இந்தியாவின் பெங்களூர் விமான நிலையத்தை வந்தடைந்தபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கலைஞர் கருணாநிதி காலமானார்

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 95. மாலை 6.10 மணிக்கு கருணாநிதியின் உயிர் பிரிந்ததாக காவேரி மருத்துவமனை அறிவித்துள்ளது. சூத்திரம் இணைத்தளத்தின் சார்பில் அவருக்கு எமது அஞ்சலி

காத்தான்குடியில் துக்க தினம் அனுஷ்டிப்பு

காத்தான்குடி நகரில் கடைகள் பூட்டப்பட்டு துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. அத்துடன், வர்த்தக நிலையங்கள், வீடுகளில் வெள்ளை நிறக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. விடுதலைப்புலிகள் கடந்த 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி, காத்தான்குடி பள்ளிவாசல் மீது நடத்திய தாக்குதலில் 103 முஸ்லிம்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், தாக்குதலில் உயிர்நீத்தவர்களை நினைவுக்கூர்ந்து இன்று (03), காத்தான்குடி நகரில் துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

விவசாயிகளுக்கு 18,000 ரூபாய் மானியம்

இயற்கையான சேதனப்பசளையை பயன்படுத்தி விவசாய உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடும் விசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 18,000 ரூபாவை வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. இயற்கை பசளையை பயன்படுத்தும் விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிரிவித்துள்ளார்.

(“விவசாயிகளுக்கு 18,000 ரூபாய் மானியம்” தொடர்ந்து வாசிக்க…)

யாழில் பொலிஸாரின் விடுமுறை இரத்து

ஆவா மற்றும் தனுரொக் குழுக்களிடையே ஏற்பட்டுள்ள மோதலைத் தொடர்ந்து, யாழ்ப்பாண மாவட்டத்தில் கடமையாற்றிவரும் பொலிஸாரின் விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. கோப்பாய், சுன்னாகம் மற்றும் மணிப்பாய் ஆகிய பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பிரதேசங்களில் குறித்த இரண்டு குழுக்களிடையே மோதல் இடம்பெற்றுள்ளது. சமீபத்திலும் இவ்வாறு யாழ்ப்பாண மாவட்டத்தில் கடமையாற்றிவரும் பொலிஸாரின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.