பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு என்ற பெயரில் பாஜக அரசு கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்கிறது, பன்னாட்டு கச்சா விலை சரியும் போது அதன் பயன்களை மக்களுக்கு அளிக்காமல் ரூ.10 லட்சம் கோடிகளை வரியாக வசூலித்துள்ளது என்று ராகுல் காந்தி சாடியுள்ளார். அவர் கூறியதாவது: “பாஜக அரசு 10,00,000 கோடி வரிகளாக பெட்ரோல்/எல்பிஜி/டீசல் மீது வசூலித்துள்ளது. ஆனால் குடிமக்களுக்கு எந்த ஒரு பயனும் இல்லை” என்று சாடியுள்ளார்.