சாவகச்சேரி பிரதேசசபையின்

சாவகச்சேரி பிரதேசசபையின் கன்னியமர்வில் தமிழர்சமூகஜனநாயகக்கட்சியின்( SDPT) உறுப்பினர் வை.விக்னேஸ்வரன் ஆகிய என்னால் (கிருபா)முன்மொழியப்பட்டவைகளில் இதுவும் ஒன்று………….. (நன்றி:- உதயன்18.04.2018)

ஆளுநருக்கும் பதில் முதலமைச்சருக்குமிடையே முரண்பாடு

வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களை நியமிப்பதில் மாகாண பதில் முதலமைச்சர் க.சர்வேஸ்வரனுக்கும் மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேவுக்கும் இடையே இன்று (19) காலை முரண்பாடு ஏற்பட்டது. 

 வடக்கு மாகாண செயலாளர்கள் நியமனம் தொடர்பில் மாகாண ஆளுநரும் பதில் முதலமைச்சரும் இன்று (19) காலை சந்திப்பை மேற்கொண்டனர்.

(“ஆளுநருக்கும் பதில் முதலமைச்சருக்குமிடையே முரண்பாடு” தொடர்ந்து வாசிக்க…)

வவுனியா நகர சபையை கைப்பற்றியது (EPRLF )உதயசூரியன்’

வவுனியா நகர சபையின் முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் தெரிவு நேற்று காலை நடைபெற்றது. இங்கு ஆட்சியைப் பிடிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், ஐதேகவுக்கும் இடையில் பலத்த போட்டி நிலவி வந்தது.இந்த நிலையில், திடீரென, ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, சிறிலங்கா பொதுஜன முன்னணி, ஈபிடிபி ஆகிய கட்சிகளுடன் இணைந்து, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஈபிஆர்எல்எவ் தமது தரப்பில் முதல்வர் வேட்பாளராக கௌதமனை நிறுத்தியது.

(“வவுனியா நகர சபையை கைப்பற்றியது (EPRLF )உதயசூரியன்’” தொடர்ந்து வாசிக்க…)

90ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தை விட்டு முஸ்லிம்களை விரட்டிய பின்….

90ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தை விட்டு முஸ்லிம்களை விரட்டிய பின் இயக்கத்திலிருந்த முஸ்லீம் போராளிகளையும் இயக்கம் ஓரம் கட்டியது. ஓரமென்றால் சுட்டுக்கொன்று தலைகீழாக மண்ணில் புதைத்தது.

(“90ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தை விட்டு முஸ்லிம்களை விரட்டிய பின்….” தொடர்ந்து வாசிக்க…)

ஆசிஃபாவும் எனது மகளே; அவளுக்காகவும் போராடுவேன்! – ஹாசினி தந்தை உருக்கம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி ஆசிஃபா தொடர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறாள். பேக்கர்வால் முஸ்லிம் எனப்படும் நாடோடி சமூகத்தைச் சேர்ந்த அச்சிறுமி, கடந்த ஜனவரி மாதம் 10ம் தேதி தன் குதிரைகளை மேய்க்கச் சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை.

(“ஆசிஃபாவும் எனது மகளே; அவளுக்காகவும் போராடுவேன்! – ஹாசினி தந்தை உருக்கம்” தொடர்ந்து வாசிக்க…)

நிர்மலாதேவி யார் என்றே தெரியாது; எனக்கு கொள்ளுப்பேரன் இருக்கிறான்: என்னை குற்றம் சொல்ல முடியாது- ஆளுநர் பன்வாரிலால் பேட்டி

 

குற்றம் சாட்டப்பட்ட நிர்மலா தேவியை நான் பார்த்தது கூட இல்லை. எனக்கு 78 வயதாகிறது. பேரன் பேத்தி எடுத்த என்னை யாரும் குற்றம் சாட்ட முடியாது என்று ஆளுநர் பன்வாரிலால் பேட்டி அளித்தார். பாலியல் ரீதியாக மாணவிகளுக்கு வலை விரிக்கும் வகையில் பேசி சிக்கிய பேராசிரியர் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் ஆளுநர் மாளிகை குறித்தும் நிர்மலா தேவி பேசியுள்ளார். இதையடுத்து இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

(“நிர்மலாதேவி யார் என்றே தெரியாது; எனக்கு கொள்ளுப்பேரன் இருக்கிறான்: என்னை குற்றம் சொல்ல முடியாது- ஆளுநர் பன்வாரிலால் பேட்டி” தொடர்ந்து வாசிக்க…)

அரசியல் நாகரீகத்தின் புதிய கதவுகளை அகலத் திறக்கும் அஇமகா! -வியக்க வைக்கும் ரிசாத் பதியுதீனின் வெளிப்படையான இயக்கங்கள்!

(எஸ். ஹமீத்)
பன்னெடுங்காலங்கள் பறந்துவிடவில்லை. பதின்மூன்றே பதின்மூன்று வருடங்கள்தான். இலங்கையில் ஓர் அரசியற் கட்சி உதயமாகி உச்சம் நோக்கியதோர் உன்னதப் பாதையின் வழியே ஓங்கிய புகழோடு உத்வேகமாய்ச் சென்று கொண்டிருக்கிறது. வியாபித்துக் கொண்டிருக்கும் அதன் மகிமையின் வீச்சம் வியக்க வைக்கிறது. கண்பட்டுவிடுமோ என்று அதனை நேசிப்போர் கவலைப்படுமளவிற்கு அதன் வளர்ச்சி காணப்படுகிறது.

(“அரசியல் நாகரீகத்தின் புதிய கதவுகளை அகலத் திறக்கும் அஇமகா! -வியக்க வைக்கும் ரிசாத் பதியுதீனின் வெளிப்படையான இயக்கங்கள்!” தொடர்ந்து வாசிக்க…)

முதலமைச்சரிடம் மீண்டும் கல்வி அமைச்சு: திலகர் எம்.பி கண்டனம்

விஞ்ஞான அடிப்படையில் ஏதோ மாற்றத்தை ஏற்படுத்தப்போவதாக தெரிவித்திருந்த ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி இப்போது ஊவா மாகாண சபைக்கு மீண்டும் கல்வி அமைச்சராக சாமர சம்பத் தசாநாயக்கவை, என்ன விஞ்ஞானத்தின் அடிப்படையில் தெரிவு செய்துள்ளது? என கேள்வி எழுப்பியுள்ள திலகராஜ் எம்.பி சாமர சம்பத்தினால் பாதிப்புற்ற பெண் அதிபருக்கு அநீதி ஏற்படக்கூடாது என்பதை சுயாதீன மனித உரிமைகள் ஆணைக் குழு உறுதி செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

(“முதலமைச்சரிடம் மீண்டும் கல்வி அமைச்சு: திலகர் எம்.பி கண்டனம்” தொடர்ந்து வாசிக்க…)

‘எனது பாதுகாப்புக் கேள்விக்குறியாகியுள்ளது’

“என்னை முழங்காலிட நிர்ப்பந்தித்தமை தொடர்பிலான விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை. இந்நிலையில், ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசாநாயக்கவுக்கு, கல்வியமைச்சர் பதவியை மீண்டும் வழங்கியமையானது எனது பாதுகாப்பைக் கேள்வி குறியாக்கியுள்ளது.” என பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஆர்.பவானி தெரிவித்தார்.

(“‘எனது பாதுகாப்புக் கேள்விக்குறியாகியுள்ளது’” தொடர்ந்து வாசிக்க…)

முதலமைச்சரிடம் மீண்டும் கல்வி அமைச்சு: வடிவேல் சுரேஷ் எம்.பி கண்டனம்

பெண் என்றுக்கூட பார்க்காது பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஆர்.பவானியை முழங்காலிட நிர்பந்தித்த ஊவா மாகாண முதல்வர், சாமர சம்பத் தசாநாயக்கவுக்கு மீண்டும் கல்வி அமைச்சு வழங்கப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்த வடிவேல் சுரேஷ், வெளிநாடு சென்றிருக்கும் ஜனாதிபதி எதிர்வரும் 22 ஆம் திகதி நாடு திரும்பியதும் அவரை நேரில் சந்தித்தது இது தொடர்பில் எடுத்துரைப்பேன் எனவும் தெரிவித்தார்.

(“முதலமைச்சரிடம் மீண்டும் கல்வி அமைச்சு: வடிவேல் சுரேஷ் எம்.பி கண்டனம்” தொடர்ந்து வாசிக்க…)