‘ஆத்திரமூட்டப்பட்டால் அணுத் தாக்குதல்’

எந்தவகையான ஐக்கிய அமெரிக்க ஆக்கிரமிப்புக்கும் ஐக்கிய அமெரிக்கா மீது அணுத் தாக்குதலொன்று நடைபெறும் என வடகொரிய அரச ஊடகம், நேற்று (11) எச்சரித்துள்ளது. இதேவேளை, “போர்க்கப்பல்களின் கூட்டம்” என ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வர்ணித்த ஐக்கிய அமெரிக்க கடற்படையின் தாக்குதல் குழுவொன்று மேற்கு பசுபிக்கை நோக்கிச் செல்கையிலேயே, வடகொரியாவின் மேற்படி எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

(“‘ஆத்திரமூட்டப்பட்டால் அணுத் தாக்குதல்’” தொடர்ந்து வாசிக்க…)

30-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்

விவசாயிகளிடம் போராட்டத்தைக் கைவிடக் கோரிய தம்பிதுரை, உடலில் தாங்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை எழுதிக் கொண்ட விவசாயிகள்.
விவசாயிகளிடம் போராட்டத்தைக் கைவிடக் கோரிய தம்பிதுரை, உடலில் தாங்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை எழுதிக் கொண்ட விவசாயிகள். மக்களவை துணை சபாநாயகர் எம்.தம்பிதுரை கோரிக்கையை நிராகரித்து, தமிழக விவசாயிகளின் போராட்டம் 30-வது நாளாக தொடர்கிறது.

(“30-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்” தொடர்ந்து வாசிக்க…)

சிரியாவை ரஷ்யா பாதுகாக்கின்றது’

பயங்கரமானதொரு வாயுத் தாக்குதலிலிருந்து சிரிய அரசாங்கத்தைப் பாதுகாக்க ரஷ்யா முயல்வதாக, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகம், நேற்று (11) குற்றஞ்சாட்டியுள்ளது.சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாட்டுக்கான ரஷ்யாவின் ஆதரவைக் கண்டிக்கின்ற மேற்குலகத்தின் செய்தியொன்றை, ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளர் றெக்ஸ் டிலெர்சன், நேற்று ரஷ்யாவுக்கு எடுத்துச் சென்றுள்ள நிலையிலேயே, ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகத்தின் மேற்படி குற்றச்சாட்டு வெளியாகியுள்ளது.

(“சிரியாவை ரஷ்யா பாதுகாக்கின்றது’” தொடர்ந்து வாசிக்க…)

அமெரிக்க மன்மதனுக்கு 1300 பிள்ளைகள்!

(எஸ். ஹமீத்.)

அமெரிக்காவில் ஒருவருக்கே பிறந்த 1,300 குழந்தைகள் டிஎன்ஏ பரிசோதனையில் அம்பலம். தங்களின் உண்மையான தந்தை யார் என்பதைக் கண்டுபிடித்துத் தருமாறு இரண்டு இளைஞர்கள் அமெரிக்காவிலுள்ள ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தை அணுகினர். அந்த நிறுவனத்தின் அதிகாரியும் அதற்கு ஒப்புக் கொண்டு துப்புத் துலக்க ஆரம்பித்தார். பல புலனாய்வுகளுக்குப் பின்னர் அமெரிக்காவின் டென்னிஸி (Tennessee – Nashville) மாகாணத்திலுள்ள நாஷ்வில் (Tennessee – Nashville) என்ற பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தபால்காரர் ஒருவர்தான் அந்த இரு இளைஞர்களினதும் தந்தை என்பதைக் கண்டுபிடித்தார். இது நடந்தது 2001 ம் ஆண்டு.

(“அமெரிக்க மன்மதனுக்கு 1300 பிள்ளைகள்!” தொடர்ந்து வாசிக்க…)

அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் மக்கள் சீனாவுடன் இணைவதை விரும்புகின்றனர்:

அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதி மக்கள் இந்தியாவின் ‘சட்டவிரோத’ ஆட்சியில் கடும் கடினப்பாடுகளை எதிர்கொள்வதாகவும் இதனால் சீனாவுடன் இணைவதை விரும்புவதாகவும் சீன அரசு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்திற்கு பவுத்தத் துறவி தலாய் லாமா வருகை தந்ததற்கு இந்தியாவை கடுமையாக சாடிவந்தது சீனா. குறிப்பாக சீனா தெற்கு திபெத் என்று கருதும் தவாங் பகுதிக்கு தலாய்லாமா வருகை தந்ததை சீனா கடுமையாக எதிர்த்தது.

(“அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் மக்கள் சீனாவுடன் இணைவதை விரும்புகின்றனர்:” தொடர்ந்து வாசிக்க…)

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிக்கான தூதுவராகிறார் மலாலா யூசுப்!

பாகிஸ்தானைச் சேர்ந்த சிறுமி மலாலா 2012 ம் தலிபான்களினால் தலையில் சுடப்பட்டு உயிருக்குப் போராடிய நிலையில் அவசர அவசரமாக விமானத்தில் இங்கிலாந்துக்குக் கொண்டுவரப்பட்டு சத்திர சிகிச்சை பெற்றுக் குணமானதன் பின்னர் இங்கிலாந்திலேயே தனது குடும்பத்தினருடன் தங்கியிருந்து கல்வி கற்று வருகிறார். இஸ்லாமியப் பெண்கள் கல்வி கற்க வேண்டுமென்ற கோஷத்துடன் போராடிய மலாலா தனக்கெதிரான தலிபான்களின் தாக்குதலின் பின்னர் தனது போராட்டத்தை இங்கிலாந்திலிருந்தபடியே முன்னெடுத்தார்.

(“ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிக்கான தூதுவராகிறார் மலாலா யூசுப்!” தொடர்ந்து வாசிக்க…)

மத்திய அரசாங்கத்துக்கே பொறுப்பு; நழுவுகிறார் சி.வி

“மீள்குடியேறும் மக்களுக்கு அடிப்படை வசதிகளை உடனடியாக பெற்று கொடுக்க வேண்டியது, அரசாங்கத்தின் கடப்பாடு. அதில் நாம் தான்தோன்றித்தனமாகத் தலையீடு செய்ய இயலாது. அவ்வாறு மத்திய அரசாங்கம் தனது கடப்பாட்டைச் செய்யவில்லை என்பதை, மக்கள் எமக்கு எழுத்துமூலமாகத் தெரியப்படுத்தினால், அது தொடர்பாக மத்திய அரசாங்கத்துடன் பேசி மக்களுக்குரிய உதவிகளை பெற்று கொடுப்பதற்கு, எங்களால் ஆவன செய்ய இயலும்” என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். (“மத்திய அரசாங்கத்துக்கே பொறுப்பு; நழுவுகிறார் சி.வி” தொடர்ந்து வாசிக்க…)

பகடிவதை சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்களுக்கு வகுப்புத் தடை

பகடிவதை சம்பவத்துடன் தொடர்புடைய தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அறிவியல் பீடத்தின் 18 மாணவிகள் உள்ளிட்ட 28 மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.    அறிவியல் பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட இந்த வகுப்புத்தடை, ஏப்ரல் 7ஆம் திகதிமுதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
புதிய மாணவர்களை கடந்த 6ஆம் திகதியன்று பகடிவதைக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில், 18 மாணவிகள் மற்றும் 10 மாணவர்கள், பகடி வதைக்கு பயன்படுத்தப்பட்ட சில உபகரணங்களுடன், பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.

(“பகடிவதை சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்களுக்கு வகுப்புத் தடை” தொடர்ந்து வாசிக்க…)

இந்திய உளவாளிக்கு பாகிஸ்தானில் மரண தண்டனை!

(எஸ். ஹமீத்)

உளவு பார்த்ததாக பிடிபட்ட இந்தியருக்கு பாகிஸ்தானில் மரணதண்டனை விதிப்பு பாகிஸ்தானில் உளவு வேலை பார்த்ததாகக் கைது செய்யப்பட்டிருந்த இந்தியருக்கு இன்று பாகிஸ்தானின் இராணுவ நீதிமன்றம் மரண தண்டனை அளித்துத் தீர்ப்பு வழங்கியுள்ளது.

(“இந்திய உளவாளிக்கு பாகிஸ்தானில் மரண தண்டனை!” தொடர்ந்து வாசிக்க…)

”அமெரிக்காவைக் கதறச் செய்யுங்கள்!” ரஷ்யாவிடம் ஈரான் ஜனாதிபதி வேண்டுகோள்!

(எஸ். ஹமீத்.)

”சிரியாவில் ஜனாதிபதி அசாத்துக்கு எதிராகக் குண்டு வீசிய அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுத்துக் கதறச்செய்யுங்கள். தமது நடவடிக்கைக்காக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும் அமெரிக்காவும் வருந்தக் கூடிய நிலையை ஏற்படுத்துங்கள்.” மேற்கண்டவாறு ரஷ்யப் பிரதமர் விளாதிமிர் புட்டினிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி.

(“”அமெரிக்காவைக் கதறச் செய்யுங்கள்!” ரஷ்யாவிடம் ஈரான் ஜனாதிபதி வேண்டுகோள்!” தொடர்ந்து வாசிக்க…)