அல்லாஹ் அக்பர் – வெட்கத்தைவிட்டு ரொம்ப வேதனைகளுடன் – 3

(யஹியா வாஸித் )

மொத்த ஸ்ரீலங்கா சோனவர்களினதும் டேர்ணிங் பாயிண்ட் இது.

1983 ஜூலை கலவரம் முடிந்த பின்னும், 2009 புலிகளை அடக்கி, ஒடுக்கி ஊமை களாக்கிய
போதும் சிறிலங்காவில் உள்ள மொத்த சிறு பான்மையினருக்கும், ஒரு செய்தி
ரொம்ப தெளிவாகவும், கூர்மையாகவும் சொல்லாமல் சொல்லப் பட்டது.

தோழர் இராஜனின் 34வது ஆண்டு நினைவில்;………..

தோழர் இராஜன் (இரவீந்திரன்) யாழ் மாவட்டத்தில் கோப்பாயை பிறப்பிடமாகக் கொண்டவர். 1980ம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரியில் உயர்கல்வியைக் கற்றுக்கொண்டிருந்த காலத்தில் பொதுவாழ்க்கையில் தன்னை அற்பணிப்புடன் ஈடுபடுத்திக் கொண்டவர். ஈழமாணவர் பொதுமன்றதின் (GUES) நிர்வாகக்குழு உறுப்பினராக செயற்பட்டவர். போராடுவதிற்காக கற்றுக்கொள்ளவும் கற்றுக்கொள்வதிற்காக போராடவும் மாணவர்களை அணிதிரட்டினார். அரசியல் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதில் பிரதான செயற்பாட்டாளராக விளங்கியவர். 1980களில் ஈழமாணவர் பொதுமன்றதினால் முன்னெடுக்கப்பட்ட அனைத்துவகையான போராட்டங்கள் மற்றும் செயற்பாடுகளிலும் களச்செயற்பாட்டாளராக இயங்கியவர். 

மோடியின் முதல் பயணமும் இலக்கும்

(கே. சஞ்சயன்)
இந்தியப் பிரதமராக மீண்டும் பதவியேற்றுள்ள நரேந்திர மோடி, தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை வரும், ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கவுள்ளார். முத‌ல் பயணமாக, மாலைதீவுக்குச் சென்று விட்டு, மறுநாள் அவர், இலங்கைக்கு வரப் போகிறார்.

பெர்முடா முக்கோணம் பகுதியில்…..

பெர்முடா முக்கோணம் பகுதியில்
மர்மமான முறையில் –
விமானங்களும் கப்பல்களும்
காணாமல் போகின்றன என்று
உலகத்தோடு சேர்ந்து நாமும் நம்பிக்கொண்டிருக்கிறோம்.

அரசியல் காரணங்களுக்காக பதற்ற நிலை மேலும் தொடரலாம்

(எம்.எஸ்.எம். ஐயூப்)

கிழக்கு மாகாண ஆளுநராக இருந்த எம்.எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ்வும் மேல் மாகாண ஆளுநராக இருந்த அஸாத் சாலியும் கடந்த திங்கட்கிழமை (ஜூன் 3) பதவி விலகாதிருந்தால் என்ன நடந்திருக்கும்?

அரசியல் தீர்வுகள் கிழித்தெறிதல்களும்…. கொழுத்துதல்களும் ஒப்பந்தங்கள் கைவிடப்படுதலும்… இராஜினமாக்களும்……

(சாகரன்)

இலங்கை அரசியல் வரலாற்றில் கிழித்தெறிதல், கைவிடுதல் இராஜினமாக்கள் ஒன்றும் புதிது அல்ல. ஆனால் இவைகள் நடைபெற்றதற்கு பின்னால் பேரினவாதம் மட்டும் அல்ல குறும் தேசியவாதமும் ஏகபோகவாதங்களும் இருந்திருக்கின்றன. பண்டா – செல்வா ஒப்பந்தம், இலங்கை – இந்திய ஒப்பந்தம் இன்றைய முஸ்லீம் அரசியல்வாதிகளின் இராஜினமா எல்லாவற்றிற்கும் பின்னால் இருப்பவை பேரினவாதத்தின் அழுத்தங்களே. சிங்களப் பேரினவாதம் அது பௌத்த துறவிகளின் வடிவில் முன்னிறுத்தப்பட்டாலும் இங்கு பௌத்த சிங்கள பேரினவாதமே கைகோர்த்து செயற்பட்டிருக்கின்றது. அரச தலமையில் இருப்பவர்களின் ஆசீர்வாதங்களுடன் இன்று நிறைவேற்றப்பட்டிருக்கும் இராஜினமாக்களுக்குள் இந்த பேரினவாதம் தனது கோர முகத்தை காட்டி இந்த நாட்டில் நிரந்தர அமைதியை ஏற்படுத்தும் பொறி முறையை தவிர்க்கும் ஒரு சூழலையே ஏற்படுத்தியே இருக்கின்றது.

எனது மகனின் படுகொலைக்கு ஶ்ரீலங்காவில் நீதி கிடைக்கும் என நான் ஒருபோதும் நம்பவில்லை

எனது மகனின் படுகொலைக்கு ஶ்ரீலங்காவில் நீதி கிடைக்கும் என நான் ஒருபோதும் நம்பவில்லை என திருகோணமலையில் 2006 இல் சுட்டுக்கொல்லப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவரான ரஜிகரின் தந்தை காசிப்பிள்ளை மனோகரன் தெரிவித்துள்ளார்

அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு வழங்கியபேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

எனது மகன் 2006 ம் ஆண்டு ஜனவரி 2 ம் திகதி கொலை செய்யப்பட்டார்

அவர் மிகவும் அமைதியானவர். அவர் மேசைபந்து பயிற்றுவிப்பாளர், அவர் மருத்துவராகவரவிரும்பினார்.
ஆனால் அனைத்தும் தற்போது அழிக்கப்பட்டுவிட்டது.

திருகோணமலை கடற்கரையில் அன்றைய தினம் அந்த மாணவர்கள் எங்களை காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என சத்தமிட்டார்கள்

அதன் பின்னர் திடீரென படையினர் அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர்.

அதன் பின்னர் இரு மாணவர்கள் உயிருடன் உள்ளனர் எனவும் ஐந்துபேர் கொல்லப்பட்டுவிட்டனர் எனவும் எனக்கு தகவல் கிடைத்தது.

நான் மருத்துவமனைக்கு சென்றவேளை அவர்களின் உடல்கள் பிரேதஅறையில் வைக்கப்பட்டிருந்தன.

நான் பிரதே அறையின் உடலை திறந்தேன் .முதலில் இருந்தது எனது மகனின் உடல்.

ஶ்ரீலங்காவில் உரிய நீதி கிடைக்காது.நான் கலப்பு நீதிமன்றமொன்றையே விரும்புகின்றேன் அல்லது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை எதிர்பார்க்கின்றேன் , நான் ஒருபோதும் ஶ்ரீலங்கா சேர்ந்த சில நீதிபதிகளை நம்புவதில்லை.

நான் பணமோ, வேறு எதனையுமோ கேட்கவில்லை, நான் நீதியையே கேட்கின்றேன்.

நான் எனது மகனிற்கு சர்வதேசநீதியை கேட்டுநிற்கின்றேன், அதனை கோராவிட்டால் நான் ரஜிகரின் தந்தையில்லை.

SOFA with US threatens Lanka’s sovereignty

(By Lasanda Kurukulasuriya)

While the contents of the proposed Status of Forces Agreement (SOFA) between the governments of Sri Lanka and the US still remain hidden from the public eye, parliament was told last week that the government had not entered into such an agreement – yet. The negotiations however are going on, and Foreign Minister Tilak Marapana has reportedly indicated to the US that some of its provisions could not be implemented. One was the provision seeking exemption for visiting US personnel from criminal jurisdiction under Sri Lankan law, while in Sri Lanka. Another was a clause that would give effect to the agreement through an ‘exchange of notes.’

இந்தியத் தேர்தல் முடிவுகள்: அயலுறவுகளும் ஆபத்துகளும்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
தேர்தல்களே ஜனநாயகத்தின் அளவுகோல்களாக மாற்றப்பட்டுள்ள நிலையில், ஜனநாயகம் எவ்வகையான தெரிவுகளையெல்லாம் வழங்குகின்றது என்பதை, நாம் அடிக்கடி காண்கிறோம். ‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’ என்றதொரு முதுமொழியை நாம் துணைக்கழைக்கிறோம். மக்கள் தீர்ப்புகள் எல்லாம், மகேசன் தீர்ப்புகள் தானா என்பதை, எல்லோரையும் விட இலங்கையர்கள் நன்கறிவர். இப்போது, மகேசன் தீர்ப்பை, இந்திய மக்கள் வழங்கி இருக்கிறார்கள். அதற்கான பலன்களை, வருங்காலத்தில் அவர்கள் அனுபவிப்பர்.

ஆள்வதற்கான விருப்பமும் மகிழ்வதற்கான விருப்பமும்

(காரை துர்க்கா)
நாட்டின் சமகால நெருக்கடிகளுக்கு மத்தியிலும் முல்லைத்தீவு, வற்றாப்பளை அம்மனைத் தரிசித்தால் எமது நெருக்கடிகள் தீரும் என்ற அளப்பரிய நம்பிக்கையுடன், அம்பாளின் வைகாசிப் பொங்கலுக்கு (மே20) சென்றிருந்தோம். அன்னையிடம் மக்கள் தங்களது ஆற்றொனாத் துன்பங்களைக் கொட்டிக் கதறி வழிபட்டனர். மனதில் அடக்கி வைத்திருக்கும் ஆதங்கங்களை, ஆற்றாமைகளை இவ்வாறாகக் கொட்டுவது ஒருவித உளவியல் ஆற்றுப்படுத்தல் ஆகும்.