(Rathan Chandrasekar)
இழவு வீட்டில்கூட
‘ஆழ்ந்த இரங்கலை ‘விட
ஆறுதல் வார்த்தைகளே
அவசியத்தேவை.
நல்ல வெய்யில்.
பொவொண்ட்டோ தந்த
The Formula
Political & Sociology Research
(யஹியா வாஸித்)
நாங்கள் இப்போது அமைதியாயாக்கப் பட்டிருக்கின்றோம், முஸ்லிம்களாகிய நாம் அமைதியாக்கப்
பட்டிருக்கின்றோம்,ஸ்ரீலங்கா முஸ்லிம்களாகிய நாம், மிக மிக ஜாக்கிரதையாக முடமாக்கப் பட்டிருக்கின்றோம்.
ஊமையாக்கப் பட்டிருக்கின்றோம், குருடர்களாக்கப் பட்டிருக்கின்றோம், செவிடர்களாக்கப் பட்டிருக்கின்றோம். ஆம்,ஏப்ரல் 2 1 – 2 0 1 9 ஆம் திகதி முதல் நாங்கள் இந்த நாட்டுக்கு வேண்டாதவர்களாகி விட்டோம்.
எங்களுடன் பேசுவது தீட்டு என சொல்லப்பட்டிருக்கின்றது, நெ(ந)ஞ்சான் கட்டைகளால் நாங்கள் வீழ்த்தப் பட்டிருக்கின்றோம்.
-ஒரு முன்னாள் ஆசிரியரின் வாக்குமூலம்-
எனது வாழ்வின் கடைசிப் பத்தாம் வருடத்திலோ அல்லது கடைசிப் பத்தாம் வினாடிகளிலோ நிற்கிறேன். கடந்த பல வருடங்களாக இடையிடை மின்னிய நோய்களும் எப்போதும் எரிந்து கொண்டிருந்த மனோவியாதிகளும் இன்று வெப்பமும் பெரும் வெளிச்சமுமாய்க் கப்றுக்குத் தெளிவான வழியைக் காட்டிக் கொண்டிருக்கின்றன. இந்த மாயமும் பாவமும் சூழ்ந்த உலகைவிட்டும் மறைந்து மண்ணறைக்குள் உயிர்த்தெழலென்பது சத்தியமெனினும் அங்கான நமது சொர்க்க வாழ்க்கை சாத்தியமா என்பது ஏக இறைவனுக்கு மட்டுமே தெரியும். சரி… இந்தச் சுயபச்சாதாப புலம்பல்களுக்குத் தற்காலிகத் தடைவிதித்துவிட்டு விடயத்துக்கு வருகிறேன்.
இன்றைய இலங்கையைப் பொருத்தவரையில், மக்களுடைய அரசியல் அறிவு பொதுவாக மிகக் குறைந்த மட்டத்திலேயே நிலவி வருகின்றது. சாதாரண மக்கள் ஒரு புறமிருக்க, படித்த பிரிவினருக்கு மத்தியிலும் கூட இதே நிலைமையே காணப்படுகின்றது. இதன் விளைவாக முதன்மையான பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, அவர்கள் அற்பமான பிரச்சினைகளைச் சூழ சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
(Parathan Navaratnam)
சற்று முன் ஒரு நண்பர் தொலைபேசியில் அழைத்து,
முடியுமா அண்ணை ?என்று கேட்டார் .
என்ன முடியுமா? என்று கேட்டதிற்கு ,
இலங்கையில் முள்ளிவாய்காலில் இருந்து கனடா பிரதமர் வரை இப்படி ஒரு அதிர்வலையை வேறு எந்த தலைவராலும் ஏற்படுத்தியிருக்க முடியுமா ?
நிட்சயமாக ஒருக்காலும் இல்லை என்று சொன்னேன் .
(நான் அனுபவித்த சில விடயங்கள், நேரம் இருந்தால் முழுமையாக வாசியுங்கள்)
இதை கடந்து வந்து இன்னும் இரண்டு நாட்களோடு பத்து வருடங்கள் முடிய போகிறது. கடந்த ஒன்பது வருடங்களில் நான் அவ்வப்போது போய் முள்ளிவாய்க்கால பாத்து அழுதிற்று வந்திருக்கிறன். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்ற பெயரில் நடந்த ஒரு நிகழ்விற்கு கூட போகவில்லை, இனியும் போக போறது இல்லை.
உலகமே சாட்சியாக நிற்க ஒரு சிறு நிலப்பரப்பில் கொத்துக்கொத்தாக எமது மக்கள் அழிக்கப்பட்ட காட்சிகளும் பேரவலக்குரல்களும் பத்து வருடங்களின் பின்பும் எமது மனங்களில் அறைந்தபடியும் காதுகளில் ஒலித்தபடியும் இருக்கிறன. எத்தகைய ஒரு பேரவலம்! சிங்கள தேசத்தின் மனசாட்சி இனவாதத்தால் மறைக்கப்பட்டிருக்க, முஸ்லிம் மக்கள் மெளனித்திருக்க பெளத்த-சிங்கள பேரினவாத அரசு உலக ஆதிக்க சக்திகளின் முழுமையான உதவியுடன் தொடர்ந்து கொண்டிருக்கும் இனஅழிப்பின் கொடூர வடிவமெடுத்திருந்த காலம்.
இலங்கை மீண்டும் எரிகிறது. அநகாரிக தர்மபால போன்ற இனவெறிபிக்குகள் எடுத்துக் கொடுத்த சிங்கள பவுத்த நாடு என்னும் இனவெறிக் கோட்பாட்டை டி.எஸ் சேனநாயக்கா, ஜெ.ஆர் ஜெயவர்த்தனா என்னும் மக்கள் விரோதிகள் தூக்கிப் பிடித்து மூட்டிய சிறுபான்மை இன மக்களுக்கு எதிரான தீ தொடர்ந்து எரிகிறது. பெரும்பான்மை சிங்கள மக்களின் மனதில் தமிழ் மக்களும், முஸ்லீம் மக்களும் எதிரிகள் என்று சுயநல அரசியல்வாதிகள் தொடர்ந்து விதைத்த வெறுப்பினால் இலங்கை எரிகிறது.