ஒரு தூரநோக்கு இல்லாத எமது நாட்டின் அரசியல் நிலைமை

இன்றைய இலங்கையைப் பொருத்தவரையில், மக்களுடைய அரசியல் அறிவு பொதுவாக மிகக் குறைந்த மட்டத்திலேயே நிலவி வருகின்றது. சாதாரண மக்கள் ஒரு புறமிருக்க, படித்த பிரிவினருக்கு மத்தியிலும் கூட இதே நிலைமையே காணப்படுகின்றது. இதன் விளைவாக முதன்மையான பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, அவர்கள் அற்பமான பிரச்சினைகளைச் சூழ சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றார்கள்.