(ப. தெய்வீகன்)
மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிவிட்டு மம்மல் பொழுதில் வீடு செல்லும்போது லோட்டன் வீதியில் காத்திருந்து நாயொன்று ஒவ்வொரு நாளும் கலைக்கும். அந்த நாயின் எரிச்சலை தவிர்த்துவிட்டு வேறுவீதி வழியாக வீட்டுக்கு போகமுடியாது என்றில்லை. ஆனாலும், நாயா நாமா என்றொரு கௌரவப்போரட்டாத்தில் போயும் போயும் அந்த நாயிடம் தோற்றுப்போவதா என்ற உள்மன எரிச்சல் எப்போதும் திரும்ப திரும்ப அந்த வீதி வழியாகத்தான் எங்களை வீரத்துடன் போகவைக்கும். அந்த நாயும் தவறாமல் எங்களை பார்த்து குலைக்கும். பிறகு கலைக்கும். அதற்கு ஊச்சு காட்டிக்கொண்டே இரண்டு கால்களையும் ஹாண்டிலுக்கு மேல் தூக்கிவைத்துக்கொண்டே எங்களுடன் வரும் சிலர் தப்பித்துவிடுவர். நானும் இன்னும் சிலரும் செருப்பை கழற்றிவிட்டு, கலைத்துக்கொண்டு வரும் “தோழருக்கு” இரண்டு அடிகொடுத்துவிட்டுப்போவதுதான் வழக்கம். அடியை ஞாபகம் வைத்துக்கொண்டு அந்த நாய், முதல்நாள் அடிக்காதவர்களையும் அடுத்தநாள் கலைக்கும். இவ்வளவும் ஏன், அடிகொடுத்தது நாங்கள்தான் என்பதை மறந்துகொண்டு அந்த வழியால் போகும் வேறுபலரையும் கலைத்துக்கொண்டோடும். மொத்தத்தில் அந்த நாயின் வேலை அந்த வீதியில் படுத்துக்கிடந்து இரவு பகல் பாராது போய் வருவோரை கலைப்பதும் குரைப்பதும்தான்.
(“OPERATION சுமந்திரன்!” தொடர்ந்து வாசிக்க…)