எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த…… (Part 1)

எனது தமிழ்நாட்டுப் பயணத்தை முடித்து சென்னை விமான நிலையத்திலிருந்து கிட்டத்தட்ட நடுச்சாமம் கட்டுநாயக்கா விமாநிலையத்தை சென்றடைந்தேன். சென்னை விமான நிலையத்திலிருக்கும் போது என் நீண்டநாள் சகாவின் புதல்வி இலங்கை அரசு, புலிகள் என்ற இரு தரப்பு பாதுகாப்பு பிரச்சனைகளால் அகதிகளாக இந்தியாவிற்கு இடம் பெயர்ந்து வளர்ந்து படித்து தற்போது இந்தியாவின் விமானப் போக்குவரத்தில் விமானியாக (இவர்தான் இலங்கையின் முதல் தமிழ் பெண் விமான ஓட்டியென்றே எண்ணுகின்றேன்) வேலை செய்வது இடையிடையே வந்து போனது.

(“எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த…… (Part 1)” தொடர்ந்து வாசிக்க…)

பாகிஸ்தான் தேர்தல் 2018: இராணுவ ஜனநாயகம்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
ஜனநாயகம் பற்றி நாம் நிறையவே பேசுகிறோம். தேர்தல் அதன் அளவுகோலாயுள்ளது. தேர்தல்களின் மூலம் தெரியப்படும் தலைவர்களை, நாம் ஜனநாயகத்தின் பகுதியாகப் பார்க்கப் பழக்கப்படுத்தப்பட்டுள்ளோம். இதனால், தேர்தல்களில் பெறப்படும் வெற்றிகளுக்கான பெறுமதி அதிகம். ஆனால், தேர்தல்கள் உண்மையில் ஜனநாயகத்தின் அளவுகோலாக முடியுமா என்ற கேள்வி, நெடுங்காலமாக வினவப்பட்டு வந்துள்ளது.

(“பாகிஸ்தான் தேர்தல் 2018: இராணுவ ஜனநாயகம்” தொடர்ந்து வாசிக்க…)

இன்று ஆகஸ்ட் 1 ‘உலக தாய்ப்பால் தினம்’….

கேரளத்தின் ‘க்ருஹலக்ஷ்மி’ மாத இதழ் தாய்ப்பாலூட்டும் பெண்ணின் படத்தை முகப்பில் வெளியிட்டபோது – ‘100 சதவீத கல்வியறிவு’ பெற்றதாகச் சொல்லப்படும் ‘தெய்வத்தின் சொந்த நாடு’ கேரளாவே விவாதித்து மாய்ந்தது.

(“இன்று ஆகஸ்ட் 1 ‘உலக தாய்ப்பால் தினம்’….” தொடர்ந்து வாசிக்க…)

ராஜபக்‌ஷக்களுடனான சந்திப்பு: சம்பந்தன் யாரை எச்சரிக்கிறார்?

(புருஜோத்தமன் தங்கமயில்)
புதிய அரசமைப்புக்கான வாய்ப்புகள் அனைத்தும் பொய்த்துப்போன புள்ளியில், இரா.சம்பந்தனுக்கும் ராஜபக்‌ஷ சகோதரர்களுக்கும் இடையிலான மிக முக்கிய சந்திப்பொன்று, அண்மையில் இடம்பெற்றிருக்கின்றது. இந்தச் சந்திப்பின் ஏற்பாட்டாளராக இலங்கைக்கான சீனத்தூதுவர் செங் ஷியுவான் இருந்திருக்கின்றார் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.

(“ராஜபக்‌ஷக்களுடனான சந்திப்பு: சம்பந்தன் யாரை எச்சரிக்கிறார்?” தொடர்ந்து வாசிக்க…)

சில மாதங்களில் மாகாண சபை திருவிழா

(Sham Varathan)

எதிர் வரும் சில மாதங்களில் மாகாண சபை திருவிழா நடைபெற போகின்றது என்பது ஊகிக்க கூடிய நிலையில் உள்ளது. அவ்வாறன நிலையில் மக்களின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கும் என்பதை நாம் சிந்திக்க வேண்டிய நிலையுள்ளது.

(“சில மாதங்களில் மாகாண சபை திருவிழா” தொடர்ந்து வாசிக்க…)

வவுனியா இன விகிதாசாரத்தைத் தாக்கும் திட்டமிட்ட குடியேற்றங்கள்

(க. அகரன்)

பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தால் போல், என்ற பழமொழியொன்றின் அர்த்தத்தை மீள் நினைவுக்கு கொண்டு வருவதாக, வடபகுதியில் சிறுபான்மையினரின் நிலைமை காணப்படுகின்றது. அரசியல் தீர்வு என்ற செயற்பாட்டை, தமிழ் அரசியல்வாதிகள் முன்கொண்டு செல்லும் போது, அது தமிழர்களின் வாழ்வியல் நிலைபேற்றையும் அதனுடன் சார்ந்த நிலத்தொடர்பையும் காரணமாக வைத்து, அழுத்தங்களைப் பிரயோகிக்க கூடியதாகவே அமைய வேண்டும்.

(“வவுனியா இன விகிதாசாரத்தைத் தாக்கும் திட்டமிட்ட குடியேற்றங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

பூச்சியத்தை நோக்கிச் செல்லும் இராச்சியம்

(காரை துர்க்கா)
வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பாக, ஜனாதிபதியில் நம்பிக்கை இல்லை; பொருளாதார அபிவிருத்தியால் ஐக்கியத்தை ஏற்படுத்த முடியாது; ஜனாதிபதி செயலணியின் அமைப்பு உருவாக்கம் வேடிக்கை பொருந்தியதாக உள்ளது. அதில் ஒரு பொருட்டாக, நான் இணைந்து கொள்வது தேவையற்றது: இப்படியான பல விடயங்களைச் சுட்டிக்காட்டி, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதிக்கு அண்மையில் கடிதம் அனுப்பி உள்ளார்.

(“பூச்சியத்தை நோக்கிச் செல்லும் இராச்சியம்” தொடர்ந்து வாசிக்க…)

எங்கே செல்லுகிறது இந்தப் பாதை?

(Jeeva Kumaran)

இலங்கையில் தீண்டாமை எதிர்ப்பு போராட்டத்தில் மாவிட்டபுர கந்தசாமி ஆலய தேர் எரியூட்டப்பட்டது கறையூட்டப்பட்ட சரித்திரம். சுமார் 1½ மாதங்களுக்கு முன்னால் வரணியில் அமைந்துள்ள கண்ணகி அம்மன் கோயிலின் தேரை JCB இயந்திரம் கொண்டு இழுத்துள்ளார்கள் கோயிலின் நிர்வாகத்தினர்.

(“எங்கே செல்லுகிறது இந்தப் பாதை?” தொடர்ந்து வாசிக்க…)

நல்லது நடக்கட்டும்

(தங்கவேல் மரகதமுத்து)

வெலிக்கடைச் சிறையில் கொல்லப்பட்டோருக்கான நினைவுக்கூட்டத்தை ரெலோவினர் யாழ்ப்பாணத்தில் நடத்தியிருக்கினம். இதில விடுதலைப்புலிகளின் சார்பில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் துளசி, ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தின் பின்னாள் வடிவமான தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் வரதராஜப்பெருமாள், ரெலோ செல்வம் அடைக்கலநாதன், சிறிகாந்தா, சிவாஜிலிங்கம் எனப் பலரும் கலந்து கொண்டிருக்கினம்.

(“நல்லது நடக்கட்டும்” தொடர்ந்து வாசிக்க…)

தமிழருக்கான மூன்றாவது அணியை அமைத்தல் சாத்தியமா…?(Part 3)

(சாகரன்)

1990 களில் இணைந்த மகாண அரசை இல்லாமல் செய்ய பிரேமதாசா கையில் எடுத்த இருவர் பிரபாகரனும் தேவானந்தாவும் ஆவர். முதலாமவரை ஆயுத ரீதியிலும் மற்றயவரை அரசியல் ரீதியிலும் தன் எண்ணத்தை நிறைவேற்ற பாவிக்க முனைந்தார் பிரேமதாச. இதற்காக அவரகளுக்கு சன்மானங்களும் வழங்கினார். புலிகளின் அவசர முடிவு பிரேமதாசாவை கொன்று புதைக்க, சந்திரிகா மகிந்தா என அரசியல் களங்கள் மாற மத்திய அரசுடன் இணக்க அரசிலை நம்பி ‘மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி” என்று புறப்பட்டு வடபகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் செய்ய முடியாத அபிவிருத்தியை செய்துகாட்டினார் தேவானந்தா. தன் வழி தனி வழி அது ஒருவனின் வழி என்று புறப்பட்ட தேவானந்தா தமிழர் அமைப்புக்களிடையே ஐக்கிய முன்னணி பற்றி அதிகம் அக்கறை காட்டாமல் செயற்பட்டார். இடையிடையே தேவையிற்கு ஏற்ப ஐக்கியத்திற்காகவும் அறிக்யை விட்டு சிலருக்கு ஆசனமும் கொடுத்து தனது ஆசனத்தை தொடர்ச்சியாக பேணுவதற்கான வாய்புக்களை உறுதிபடுத்திக் கொண்ட அரசியல் சாணக்கியர் இவர்.

(“தமிழருக்கான மூன்றாவது அணியை அமைத்தல் சாத்தியமா…?(Part 3)” தொடர்ந்து வாசிக்க…)