‘நான் உண்மையில் குற்றவாளிதானா…? இல்லை…இல்லவேயில்லை…!’

உயிரைக் காப்பாற்றி ஹீரோ ஆக முயற்சித்தார் என்ற குற்றத்திற்காக உ.பி. முதல்வர் ஆதித்யநாத்தும் அவரது படை பரிவாரங்களும் சிறையிலடைத்த டாக்டர். கஃபில் கானின் கடிதத்தின் தமிழாக்கம் (முடிந்தவரை அதிகமானவர்களிடம் கொண்டு சேருங்கள்.)
*********************************************************

“ஜாமீன் கிடைக்காத சிறை வாசத்தில் எட்டு மாதங்கள் கடந்து விட்டன… நான் உண்மையாகவே குற்றவாளியா…?”

சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் தாங்கமுடியாத சித்திரவதைகளுக்கும் அவமானங்களுக்கும் பிறகும் கூட ஒவ்வொரு நிமிடமும் கடந்து போன ஒவ்வொரு காட்சியையும் கண் முன்னே நடப்பது போலவே நினைத்துப் பார்க்கிறேன்…!

சிலநேரங்களில் நான் எனக்குள்ளேயே கேள்விகளைக் கேட்டுகொள்கிறேன்… “நான் உண்மையிலேயே குற்றவாளி தானா..? இந்த கேள்வி எனக்குள் எழும்போதெல்லாம் என் இதயத்தின் அடியாழத்திலிருந்து அதன் பதில் உயர்ந்து வரும்…”இல்லை” என்று…

(“‘நான் உண்மையில் குற்றவாளிதானா…? இல்லை…இல்லவேயில்லை…!’” தொடர்ந்து வாசிக்க…)

விக்னேஸ்வரனுக்காகக் களமாடுவது யார்?

(புருஜோத்தமன் தங்கமயில்)

தமிழ் மக்கள் பேரவையின் இளைஞர் மாநாடு, எதிர்வரும் ஜூன் மாதமளவில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டை ஒழுங்குபடுத்துவதற்காக ஓய்வுநிலை அதிபர் கந்தையா அருந்தவபாலன், வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் உள்ளிட்டவர்கள் அடங்கிய குழுவொன்றும் நியமிக்கப்பட்டிருக்கின்றது. இரு வாரகால இந்தியப் பயணத்தை முடித்துக் கொண்டு, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நாடு திரும்பிய அன்றே, மாநாட்டுக்கான குழு தொடர்பிலான அறிவிப்பும் வெளியாகி இருக்கின்றது.

(“விக்னேஸ்வரனுக்காகக் களமாடுவது யார்?” தொடர்ந்து வாசிக்க…)

முடிந்ததா யுத்தம்? அழிந்ததா புலி?

தமிழ் மக்கள் அழிந்த அதே நாளில் கோடிஸ்வரர்களாகிய இவர்களை பற்றி தெரியுமா?

பல்லாயிரக் கணக்கானோர் உயிர்களை கொடுத்தும், உயிர்களை எடுத்தும் வளர்ந்த விடுதலைப் புலிக…ள் இயக்கம் 2009-ம் ஆண்டு மே மாதம், முள்ளிவாய்க்கால் பகுதியில் கனவு போல மறைந்து போனது. பல ஆண்டுகளாக இயக்கத்தில் இருந்து போராடியவர்கள், உயிரிழந்தோ, சரணடைந்தோ, அல்லது தப்பியோடியோ விட்ட துரதிஷ்டமான நிலையில்…

(“முடிந்ததா யுத்தம்? அழிந்ததா புலி?” தொடர்ந்து வாசிக்க…)

இந்திய அரசியலில் ‘ஆளுநர்’ பதவிகள்

(எம். காசிநாதன்)
“தமிழக ஆளுநராக இருக்கும் பன்வாரிலால் புரோகித்தை திரும்பப் பெற வேண்டும்” என்று போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது, ராஜ்பவனில் ஆளுநராக இருந்த சென்னா ரெட்டி மீது, “என்னிடம் தவறாக நடக்க முயன்றார்” என்று குற்றம் சாட்டி, “ஆளுநரை திரும்பப் பெறுங்கள்” என்று, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

(“இந்திய அரசியலில் ‘ஆளுநர்’ பதவிகள்” தொடர்ந்து வாசிக்க…)

குறிப்பால் உணர்த்தல்

(மொஹமட் பாதுஷா)
அண்மைக்காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக, இன வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த நிலையில், இம்முறை வசந்த காலத்தில், நுவரெலியாவுக்கு சுற்றுலாச் சென்றோரின் தொகை மிகவும் வீழ்ச்சியடைந்திருந்தது. குறிப்பாக, முஸ்லிம்கள் வழமைபோல, நுவரெலியாவுக்குச் செல்லவில்லை என்பது வெள்ளிடைமலை. நாடெங்கிலுமுள்ள முஸ்லிம்கள், கூட்டிணைந்து மேற்கொண்ட இந்நடவடிக்கை, வெற்றியளித்துள்ளதாகப் பரவலாகப் பேசப்படுகின்ற சமகாலத்தில், “இது ஒரு வேண்டத்தகாத நிலைப்பாடு” என்றும் சிலர், அபிப்பிராயம் வெளியிட்டு வருகின்றனர். அதாவது, நியூட்டனின் மூன்றாம் விதி வேலை செய்யத் தொடங்கி இருக்கின்றது.

(“குறிப்பால் உணர்த்தல்” தொடர்ந்து வாசிக்க…)

புலம்பெயர் தேசத்து பழைய மாணவர் சங்கங்கள்

கடந்த ஐந்தாறு வருடங்களுக்குள் புலம்பெயர்ந்த மண்ணில் மிகப்பிரபலமாக வளர்ச்சியடைந்திருக்கும் துறை, ஊரிலுள்ள பாடசாலைகளின் பழையமாணவர் சங்கங்கள். அந்த பாடசாலைகளில் கல்வி கற்ற பழைய மாணவர்கள் திடீரென்று தங்கள் பாடசாலைகளின் மீது காதல் கொண்டு பூமியை பிளந்துகொண்டு எழுந்திருக்கும் அந்த காட்சி புல்லரிக்கவைப்பவை. சொல்லப்போனால், இந்த பழைய மாணவர் சங்கங்கள் அரசியல் கட்சிகளைவிட பலம்வாய்ந்த தரப்புக்களாக – ஆளணியும் – பணபலமும் பொருந்திய அமைப்புக்களாக – கடந்த சில வருடங்களில் வளர்ச்சியடைந்திருக்கின்றன. ஊரில் சில விடயங்களை செய்வதற்கு இந்த பழைய மாணவர் சங்கங்களை அணுகினால்தான் அது நடக்கும் என்கின்ற வரையிலான கட்டப்பஞ்சாயத்து ரேஞ்சுக்குக்கூட ஒரு சில அமைப்புக்கள் எழுச்சியடைந்திருப்பது வேறுகதை.

(“புலம்பெயர் தேசத்து பழைய மாணவர் சங்கங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

வடக்குக் கிழக்கு ஒரு பிறிமியர் லீக் சமுதாயமாக மாறுவது போருக்கு பிந்திய வரலாற்றில் மைல் கல்

என்.ஈ.பி.எல் என்று அழைக்கப்படும் வடக்குக் கிழக்கு மாகாணங்கள் இணைந்த பிறிமியர் லீக் உதைபந்தாட்டம் இலங்கையில் ஆரம்பிக்கிறது என்பது உலகம் முழதும் பரந்து வாழும் தமிழர்களுக்கும், உதைபந்தாட்ட ரசிகர்களுக்கும் இனிப்பான செய்தியாகும். போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அதில் இருந்து மீண்டெழ நடத்தும் வாழ்க்கைப் போராட்டத்தின் இன்னொரு மைற்கல் இதுவாகும்.

(“வடக்குக் கிழக்கு ஒரு பிறிமியர் லீக் சமுதாயமாக மாறுவது போருக்கு பிந்திய வரலாற்றில் மைல் கல்” தொடர்ந்து வாசிக்க…)

சிறுமி ஆசிபா குறித்துகள் பற்றி ஜானகி

Dharani Akil அவர்களின் பதிவிற்கு பதிலளிக்க முயன்றேன். நீண்டதானாலோ, வேறு காரணத்தினாலோ பதிவேற்ற முடியாததால் இங்கு பதிவு செய்கிறேன்.

நியாயமான கருத்துக்கள் அடியுண்டு போய்விடாமல் இருக்கவும், பிழையான விளக்கங்களைத் தவிர்ப்பதற்கும், Dharani உங்கள் பதிவிற்கு சில மாற்றுக் கருத்துக்களை பகிர வேண்டிய அவசியத்தை உணர்கிறேன்.

(“சிறுமி ஆசிபா குறித்துகள் பற்றி ஜானகி” தொடர்ந்து வாசிக்க…)

தவளை

ஒரு தவளையை பிடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள்.

தண்ணீரின் வெப்பம் அதிகரிக்கும் போது, தவளை தன் உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றி கொண்டே வரும்.

வெப்பம் ஏற ஏற தவளையும் அந்த வெப்பநிலைக்கு ஏற்ப தன் உடலை அந்த வெப்பத்துக்கு ஏற்ப மாற்றி கொள்ளும்.

தண்ணீர் கொதிநிலையை அடையும் போது, வெப்பத்தை தாங்க முடியாமல் தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதிக்க முயற்சி செய்யும்.

(“தவளை” தொடர்ந்து வாசிக்க…)

வரலாற்றில் ஒரு பதிவு. ஈரோஸ் இன் துரோகம்

(Segar Chandramohan)

1986 ஆண்டு பகுதியில் யாழில் இருந்த பல முற்போக்கு அமைப்புக்கள் மாதமொருமுறை அல்லது இருமுறை ஒன்றுகூடல்கள் நடத்தின. இதிலே CP , LSSP , கிராமிய தொழிலாளர் சங்கம் (EPRLF ), கிராமிய உழைப்பாளர் சங்கம், சீவல் தொழிலாளர் நலன்புரி ஒன்றியம் (EPRLF ) , ஈழவர் முன்னணி ( ஈரோஸ்), தொழிழ்ச்சங்கங்கள் உட்பட பல அமைப்புகள் அடங்கும். இதை நான் சீவல் தொழிலாளர் அமைப்பின் பிரதிநிதியாக கலந்து கொள்வேன். விஜிதரனை கடத்திய நேரத்தில், இதற்கெதிரான போராட்டத்தை முன்னெடுக்க நாம் முடிவு செய்தொம்.
இந்த போராட்டத்தை முன்னெடுப்பதற்கான இறுதி கூட்டம் யாழ் பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலையில் நடைபெற்றது. இதற்கு, விஜயானந்தன் (CP ), அண்ணாமலை (LSSP ) , கி பி ( கி .தொ. ச ), பரா ( ஈரோஸ்), கி. உ. ச பிரதிநிதி, மற்றும் பல அமைப்புகளின் பிரதிநிதிகளுடன், நானும், சீவல் தொழிலார அமைப்பின் பிரதிநியாக கலந்து கொண்டேன். கூட்டம் ஆரமித்து நேரம், கிட்டு மோட்டார் சைக்கிளில் வந்து, பாராவை வெளியில் அழைத்து பேசிவிட்டு சென்றார். மீண்டும் உள்ளே வந்த பரா, தவிர்க்க முடியாத காரணங்களினால் தாம் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்று எம்மிடம் மன்னிப்பு கேட்டு விட்டு கூட்டத்தை விட்டு வெளியேறினார். கூட்டத்தில் ஒரு சில நேரம் மௌனமாக நாம் வியப்பில் இருந்தோம். விஜிதரன் கடத்தலுக்கெதிரான ஊர்வலம் திட்டமிட்டபடியே நடைப்பெற்றது. யாழ் கச்சேரியில் ஊர்வலம் நிறைவு செய்யப்பட்டது.