கண்ணாடி வீட்டிலிருந்து கொண்டு கல்லெறியும் சுமந்திரன்!

“அப்படி விசாரிக்கும் போது, தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தை மேடையில் வைத்துக் கொண்டு, அவரது ஆட்சேபனை எதுவும் இல்லாமல், “தமிழ் துரோகிகளுக்கு இயற்கை மரணம் கிடையாது” என்று பேசிய அன்றைய தமிழ் இளைஞர் பேரவைத் தலைவர்களின் (மாவை சேனாதிராசா, வண்ணை ஆனந்தன் போன்றவர்கள் அன்றைய பிரபல தலைவர்கள்) உரைகள், எப்படி புலிகளின் மிக மோசமான அராஜகம் வரை இட்டுச் சென்றது என்பதை வரலாறு பதிவு செய்வதுடன், சுமந்திரன் இன்று அங்கம் வகிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படும்.

(“கண்ணாடி வீட்டிலிருந்து கொண்டு கல்லெறியும் சுமந்திரன்!” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கை தொடர்பான அமெரிக்காவின் அறிக்கை வெளியானது! ஈழத்தமிழர்கள் அதிர்ச்சியில்

ஜெனிவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான அமெரிக்காவின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஈழத்தமிழர் தரப்புக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்த்திருந்த குறித்த அறிக்கை, தமிழர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது. இதில் இலங்கை அரசை காப்பாற்றும் வகையிலேயே இலங்கை தொடர்பான அமெரிக்காவின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அடிமைத்தனத்திலிருந்து விடுதலை நோக்கி——-

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெருமளவில் நிகழும் இடங்களாக எமது பிரதேசங்கள் மாறியுள்ளன. பெண்கள் சிறார்களுக்கான சமூக பாதுகாப்பு அச்சம் தரும் வகையில் குறைந்துள்ளது. ஆளரவமற்றுப்போகும் ஊர்கள் என்பன பெண்களுக்கெதிரான வன்முறைகளின் களமாக மாறுகின்றன.
கைக்கோடரி வாள் வீச்சு கோஸ்டிகள் பொதுவாக சமூகத்திற்கு மாத்திமல்ல குறிப்பாக பெண்களுக்கெதிரான வன்முறைகளை இலக்காக கொண்டவை.

(“அடிமைத்தனத்திலிருந்து விடுதலை நோக்கி——-” தொடர்ந்து வாசிக்க…)

எழுபதுகளில் இருந்து மாறுபட்ட இன்றைய மாணவர் செயல்!?

அண்மைக்காலமாக மாணவர்களின் அரசியல் பார்வை அவர்களை எடுப்பார் கை பிள்ளை நிலைக்கு உட்படுத்டுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஒரு குறிப்பிட்ட அரசியல் தலைமையை மட்டும் விமர்சிப்பது முதல், சர்வதேச அரசியலில் முதிர்ச்சி உள்ளவர் போல அவர்கள் பேசும் பேச்சுக்களே அவ்வாறு எண்ணத் தூண்டுகிறது.

(“எழுபதுகளில் இருந்து மாறுபட்ட இன்றைய மாணவர் செயல்!?” தொடர்ந்து வாசிக்க…)

வேலையில்லாதவர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உற்பத்திசார் பொருளாதார கொள்கைகளே தேவை

(கருணாகரன்)

வேலைகோரும் பட்டதாரிகள் வீட்டிலும் வீதியிலுமாக நிறைந்து போயிருக்கிறார்கள். படித்துப் பட்டம் பெற்ற பிறகு வேலை கிடைக்கவில்லை என்றால், அவர்களால் என்ன செய்ய முடியும்? வேலை கேட்டுப்போராடுவார்கள். இந்தப் போராட்டத்தைப் பற்றி அரசாங்கம் அக்கறைப்படவில்லை என்றால், அதைக் கோவிப்பார்கள், அரசாங்கத்துக்கு எதிராகக் குரல் எழுப்புவார்கள். கூடவே தங்களுக்கு முன்னே உள்ள அரசியல்வாதிகளையும் அதிகார அமைப்புகளையும் எதிர்ப்பார்கள். இப்போது நடந்து கொண்டிருப்பது இதுதான்.

(“வேலையில்லாதவர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உற்பத்திசார் பொருளாதார கொள்கைகளே தேவை” தொடர்ந்து வாசிக்க…)

ஜக்கி:விலைபொருளாக்கும் வித்தை கூடியவர்.

தேசத்தின் பொருளாதாரத்தில் சுற்றுலாப் பொருளாதாரம் எப்போதும் முக்கியமான பங்கு வகிக்கின்றது. அதிலும் பன்னாட்டு மூலதனப் பெருக்கத்திற்குப் பின் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதனால் ஒவ்வொரு நாடும் சுற்றுலாத் தலங்களை உருவாக்கி விளம்பரப்படுத்தி விற்கின்றன. பல நாடுகளின் சுற்றுலாக் கையேடுகளைக் கண்டும் வாசித்தும் பார்த்தால், அந்நாடுகளில் விற்பனைக் கருத்தியல் என்ன என்பதை உணர முடியும்.

(“ஜக்கி:விலைபொருளாக்கும் வித்தை கூடியவர்.” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பி சிறீதரன்

தமிழ்தேசிய கூட்டமைப்பு எம்.பி சிறீதரனுக்கு இப்ப ஒரு நோய் பிடித்திருக்கு. எந்த விழாவிலும் தானே முன்னுக்கு நிற்க வேண்டும் என்று. இதனால் தமிழ் மக்களுக்கு எதும் தீங்கு நடக்குமா என்று அவர் யோசிப்பதில்லை. கவலைப்படுவதும் இல்லை. மாவீரர் நிகழ்வு என்றால் தானே தீபம் ஏற்ற வேண்டும் என்று அடம் பிடிப்பார். கோயில் விழா என்றால் தனக்கு பரிவட்டம் கட்ட வேண்டும் என்பார்.
ஆமி தளபதிக்கு விழா எடுத்தாலும் அதைப் பற்றி அவருக்கு கவலை இல்லை. தளபதிக்கு பரிவட்டம் கட்டி கௌரவித்தாலும் அதையிட்டு அவருக்கு கவலை இல்லை.

(“தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பி சிறீதரன்” தொடர்ந்து வாசிக்க…)

வாழும் கியூபா தலைவர் பிடல் காஸ்ரோ

உலகின் இயற்கை விவசாயத்தில் முக்கிய இடம் வகிக்கும் நாடு கியூபா மட்டுமே, இரசாயன உணவுகளையும் தனது வாழ்நாளில் வாழ்ந்த காலத்தைவிட அதிக காலம் குளிர்சாதன பெட்டிக்குள் இருக்கும் உணவு பதார்த்தங்களை உண்ணும் இந்த நவீன உலகில் அதிக இயற்கை உற்பத்திகள் உள்ள ஒரு நாடு என்ற ஒரு பெருமையை கியூபா கொண்டுள்ளது. ஒரு காலத்தில் அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தின் ஆசீர்வாதத்துடன்  ஆட்சி செய்த புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டா வின் ஆட்சியில் (1959) அதிக ரசாயன உரங்கள் காரணமாக அழிந்து வந்த விவசாய நிலத்தை இயற்கையின் உர வகைகளை பயன்படுத்தி உலகின் இயற்கை உணவு உற்பத்தி செய்யும் நாடுகளில் முதல் நாடாக ஆக்கி விட்டு போயிருக்கிறார்.

(“வாழும் கியூபா தலைவர் பிடல் காஸ்ரோ” தொடர்ந்து வாசிக்க…)

சிம்பாப்வே: ஆபிரிக்காவின் கலகக்காரன்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

உலக அரசியல் அரங்கில் கலகக்காரர்களுக்கு தனியான இடமுண்டு. கலகக்காரர்கள் எல்லோரும் ஓரே இயல்புடையவர்கள் அல்லர். அவர்கள் வாழ்ந்த காலம், இடம், உலகச் சூழல் என்பனவும் அவர்களின் நடத்தையுமே அனைத்தையும் தீர்மானிக்கிறது. கலகக்காரர்களே உலக அரசியல் அரங்கை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள் என்பதைத் துணிந்து சொல்லவியலும். அவர்கள் இல்லாவிடின் ஒற்றைப் பரிமாண உலக அரசியலை சத்தமின்றி ஏற்று நடக்கும் இயல்புடனேயே உலகம் இயங்கிக் கொண்டிருக்கும். ஆனால், உலகம் இப்போது அவ்வாறு இயங்குவதில்லை. அவ்வாறு இயங்குவதையே அதிகார மையங்கள் விரும்புகின்ற போதும் அது சாத்தியமாவதில்லை.

(“சிம்பாப்வே: ஆபிரிக்காவின் கலகக்காரன்” தொடர்ந்து வாசிக்க…)

வெளிவந்துவிட்டது வானவில் 74….: புதிய அரசியலமைப்பு ஜே.ஆரினதை விட மோசமாக இருக்கப் போகிறது!

மாகாண சபைகளை கலைக்க அல்லது அவற்றின் அதிகாரங்களை மீளப்பெற மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது என்ற விடயத்தில்
அரசியலமைப்புச் சபையின் வழிப்படுத்தல் குழு இணக்கம் தெரிவித்திருக்கிறது என அரசியலமைப்புச் சட்டத்தரணியும், ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயம்பதி விக்கிரமரத்ன தெரிவித்திருக்கிறார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய விக்கிரமரத்ன, நாட்டின் ஐக்கியம், ஆட்புல ஒருமைப்பாடு மற்றும்
நாட்டின் சுதந்திரம் என்பனவற்றுக்கு எதிராக செயற்படும் எந்தவொரு
மாகாண சபையையும் கலைப்பதற்கோ அல்லது அதனது அதிகாரங்களை மீளப் பெறுவதற்கோ மத்திய அரசுக்கு அதிகாரம்
அளிக்கும் யோசனையொன்றை புதிய அரசியல் அமைப்பில் உள்ளடக்குவதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். (தொடர்ந்து வாசிக்க….)